வெளுத்து வாங்கும் மழை! சென்னையில் பள்ளிகளுக்கு மட்டும் நாளை விடுமுறை.. மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு
சென்னை: சென்னையில் தொடர்ந்து நல்ல மழை பெய்து வரும் நிலையில், நாளை பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை விடப்படுவதாக மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்.
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தற்போது சூடுபிடித்துள்ளது. பருவமழை கொஞ்சம் தாமதமாக தொடங்கியது. எனினும் ஆரம்பத்தில் குறைவான மழையே இருந்தது. ஆனால் கடந்த ஒரு வாரமாக தமிழகத்தில் பல்வேறு இடங்களில் பரவலாக நல்ல மழை பெய்து வருகிறது. குறிப்பாக மேற்கு தொடர்ச்சி மலையையொட்டிய மாவட்டங்கள் மற்றும் தென் மாவட்டங்கள், டெல்டா மாவட்டங்களில் கனமழை வெளுத்து வாங்கியது.

வடகிழக்கு பருவமழை தீவிரம் அடைந்துள்ளது. வங்க கடலில் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ள நிலையில், இன்று காலை முதலே சென்னையில் விட்டு விட்டு தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. தென்மேற்கு வங்க கடல் பகுதியில் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதனால் தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் அநேக இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழைபெய்யக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.
தாழ்வான பகுதிகளில் தண்ணீர் தேங்கி நின்றதால் வாகன ஓட்டிகளும் கடும் அவதிக்கு உள்ளாகினர். தமிழகம் முழுவதுமே மழை பெய்து வரும் நிலையில், சென்னை எழிலகத்தில் 24 மணி நேரமும் செயல்பட்டு வரும் மாநில அவசரகால செயல்பாட்டு மையத்துக்கு, இன்று மாலை திடீரென முதல்வர் மு.க.ஸ்டாலின் சென்றார். அங்கு மழைக்கால முன்னெச்சரிக்கை நடவடிக்கை குறித்து ஆய்வு மேற்கொண்டார். உதவி கோரி கட்டுப்பாட்டு அறைக்கு போன் செய்தவர்களிடமும் அவர் குறைகளையும் கேட்டறிந்தார்.
தென்மேற்கு வங்க கடல் பகுதியில் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதனால் தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் அநேக இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழைபெய்யக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. ராமநாதபுரம், புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர், நாகை, மயிலாடுதுறை, கடலூர், செங்கல்பட்டு, விழுப்புரம் புதுச்சேரி , காரைக்கால் ஆகிய பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
வானிலை மையம் எச்சரித்தப்படியே சென்னையில் தொடர்ந்து விட்டு விட்டு மழை பெய்து வருவதால், நாளை 15.11.2023 பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அளிக்கப்படுவதாக மாவட்ட ஆட்சியர் ரஷ்மி சித்தார்த் ஜகடே உத்தரவிட்டுள்ளார். கனமழை எச்சரிக்கை காரணமாக முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications