ரோட்டில் போன காரே மூழ்கிப்போச்சு.. பெங்களூரை புரட்டிப்போட்ட கனமழை! ஷாக் வீடியோ.. டிராபிக் மாற்றம்
பெங்களூர்: பெங்களூர் நகரில் நேற்று இரவு பல இடங்களில் கனமழை பெய்தது. இதனால் எம்ஜிரோட்டை சுற்றிய பல இடங்களில் வெள்ளம்போல் மழைநீர் தேங்கி இருக்கிறது. இத்தகைய சூழலில் தான் மழைநீரில் ரோட்டில் போன காரே மூழ்கிப்போன ஷாக் வீடியோவை பெங்களூர் மாநகர போக்குவரத்து போலீசார் வெளியிட்டு பொதுமக்களுக்கு அறிவுரை வழங்கி உள்ளனர்.
கர்நாடகாவில் தென்மேற்கு பருவமழை என்பது போதிய அளவு பெய்யவில்லை என கூறப்படுகிறது. கடந்த ஆகஸ்ட் மாதத்தில் பெய்ய வேண்டிய மழையில் பெரும் பற்றாக்குறை ஏற்பட்டது. இதனால் பல அணைகளில் நீர்மட்டம் என்பது சரிந்துள்ளது.

இதன் காரணமாக தமிழ்நாடு-கர்நாடகா இடையே காவிரி நீர் பங்கீடு செய்து கொள்வதில் பிரச்சனை ஏற்பட்டுள்ளது. இத்தகைய சூழலில் தான் நேற்று பெங்களூர் மற்றும் அதனை சுற்றிய இடங்களில் திடீரென மழை பெய்தது.
அதாவது நேற்று இரவு முதல் பெங்களூர் மற்றும் அதனை சுற்றிய இடங்களில் லேசானது முதல் மிதமான அளவுக்கு மழை பெய்தது. பல இடங்களில் விட்டு விட்டும், சில இடங்களில் தொடர்ந்தும் இரவில் மழை பெய்தது. இதனால் இன்று காலையில் பெங்களூரில் பல சாலைகளில் தண்ணீர் தேங்கியது. தாழ்வான பகுதிகள் மற்றும் சுரங்கப்பாதைகளில் மழைநீர் வெள்ளம்போல் தேங்கி உள்ளது.
குறிப்பாக பெங்களூர் நகரின் மையப்பகுதியாக உள்ள எம்ஜி ரோட்டை சுற்றிய இடங்களில் மழைநீர் தேங்கியது. அதன்படி குயின்ஸ் சர்க்கிள், வின்ட்சர் மேனர் பாலம், கண்டோன்மென்ட் ரயில்வே சுரங்கபாதை, சேத்திரபுரம் நேரு சர்க்கிள், பல்லாரி ரோட்டில் உள்ள பிடிஏ ஜங்ஷன், ஜெயமஹாலில் உள்ள சிக்யூஏஎல் கிராஸ், மற்றும் பெங்களூர் எச்ஏஎல் விமான நிலையத்தின் அருகே குரோமா சர்வீஸ் ரோடு உள்ளிட்ட இடங்களில் உள்ள சாலைகளில் மழைநீர் வெள்ளம் போல் தேங்கியிருந்தது.

குறிப்பாக பெங்களூர் எச்ஏஎல் விமான நிலையத்தின் அருகே குரோமா சர்வீஸ் ரோட்டில் சுரங்கப்பாதையில் மழைநீர் ஒரு காரை மூழ்கடித்து சென்றது. இதுதொடர்பான வீடியோ இணையதளங்களில் வெளியாகி உள்ளது. இதனால் பெங்களூர் மாநகர போக்குவரத்து போலீஸ் இணை கமிஷனர் சார்பில் இந்த சாலையை மக்கள் பயன்படுத்த வேண்டாம் என கூறப்பட்டுள்ளது. அதோடு இந்த சாலைக்கு பதில் பொதுமக்கள் பானத்தூர் ரயில்வே சப்-வேயை பயன்படுத்த வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மேலும் அடுத்த 24 மணநேரத்துக்கு பெங்களூர் நகரில் வானம் மேகமூட்டத்துடன் இருக்கும். அதேபோல் சில இடங்களில் மழையும், சில இடங்களில் இடியுடன் கூடிய மழையும் பெய்யும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. நகரில் அதிகபட்ச வெப்பநிலை என்பது 29 டிகிரி செல்சியஸாகவும், குறைந்தபட்ச வெப்பநிலை என்பது 20 டிகிரி செல்சியஸாகவும் இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
கூட்டுறவு வங்கி நகைக்கடன் தள்ளுபடி அடுத்த குட் நியூஸ்? தமிழக அரசு அசத்திய ரூ.193 கோடி மகளிர் நிதி -
நமக்கு புடிச்சவங்க, வாழ்க்கையை விட்டு போயிடுவாங்கன்னு தெரிஞ்சும்.. உருக்கமாக திரிஷா வெளியிட்ட வீடியோ! -
அதை சொல்ல யாருக்கும் அருகதை இல்லை.. வீட்டிலும், ஆபீஸிலும் இதுதான் நடக்குது செல்வராகவன் ஆதங்கம் -
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
தங்கத்தில் இனி 1 மில்லி கிராம் கூட ஏமாற்ற முடியாது! 7 மாவட்டத்துக்கு ஹேப்பி! அரசின் பாதுகாப்பு கவசம் -
வங்கி கணக்கில்.. அரசு அனுப்பிய ரூ.2000! உங்களுக்கு வந்துடுச்சா.. மொபைலிலேயே செக் செய்வது எப்படி? -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை! -
தேமுதிக 10 தொகுதிகளில் போட்டி.. 21 ஆண்டு வரலாற்றில் மிகக் குறைவான சீட்களில் நிற்பது இந்த முறைதான்! -
ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு குட் நியூஸ்.. பிஎம் ஸ்வநிதி திட்டத்தில் ₹50,000 கடன் கிடைக்குமா? -
வேளச்சேரி - பரங்கிமலை MTRS.. 80 நிமிடப் பயணம் வெறும் 15 நிமிடம்.. எஸ்ஜி சூர்யாவின் நிஜ அனுபவம் -
சர்க்கரை அட்டைதாரர்களுக்கு சூப்பர் வசதி… ரேஷன் கடைக்கு போறீங்களா? தமிழக அரசின் திடீர் உத்தரவு












Click it and Unblock the Notifications