அலர்ட் மக்களே.. 3 மணி நேரத்திற்கு.. சென்னை, திருவள்ளூர் உள்பட 27 மாவட்டங்களில் கொட்டப்போகும் மழை
சென்னை: சென்னையில் பல்வேறு இடங்களில் லேசானது முதல் கனமழை பெய்தது. இந்த நிலையில், அடுத்த 3 மணி நேரத்திற்கு சென்னை, திருவள்ளூர், கடலூர், திருச்சி உள்பட 27 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக, இன்று தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் அநேக இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று, கடலூர், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, பெரம்பலூர், அரியலூர், சேலம், நாமக்கல், தர்மபுரி, திருவண்ணாமலை, திருப்பத்தூர் மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது.

அதன்படி, சென்னையில் பல இடங்களில் மழை கொட்டியது. வானிலை ஆய்வு மையம் கணித்தது போலவே சென்னையின் பல்வேறு பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய கனமழை கொட்டியது. குறிப்பாக சென்னை தாம்பரம், பெருங்களத்தூர், மாங்காடு மற்றும் தெற்கு புறநகர் பகுதிகளில் கனமழை கொட்டி தீர்த்தது. இதே போல நகரின் பல பகுதிகளிலும் பலத்த மழை பெய்தது.
கிண்டி, ஆலந்தூர், முகப்பேர், கோயம்பேடு, அண்ணாநகர், அரும்பாக்கம், அமைந்தகரை பகுதிகளிலும் கன மழை பெய்தது. திடீரென கொட்டித்தீர்த்த கனமழையால் சாலையின் தாழ்வான பகுதிகளில் தண்ணீர் தேங்கியது. கடந்த சில நாட்களாக அக்னி நட்சத்திரம் போல வெயில் சுட்டெரித்த நிலையில் சட்டென்று கொட்டித்தீர்த்த கனமழையால் வானிலை ஜில்லென்று மாறி குளிர் காற்று வீசியது. இந்த நிலையில், அடுத்த 3 மணி நேரத்திற்கு சென்னை உள்பட 27 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இது குறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:- தமிழகத்தின் 27 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்திற்கு மழை பெய்ய வாய்ப்புள்ளது. சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, ராணிப்பேட்டை, கடலூர், திருவண்ணாமலை, வேலூர், கிருஷ்ணகிரி, புதுக்கோட்டை, திருச்சி, அரியலூர், ஈரோடு, கோவை, நீலகிரி, திருப்பூர், தேனி, திண்டுக்கல், பெரம்பலூர், கரூர், மதுரை, சேலம், நாமக்கல், தருமபுரி உள்ளிட்ட மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு உள்ளது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
-
சென்னை தங்க பஸ்சில் நடந்த சம்பவம்.. கொஞ்சம் பொறுப்போட நடங்க! பயணிகளுக்கு நெட்டிசன்கள் அட்வைஸ் -
கோவை, நீலகிரிக்கு பறந்த அலர்ட்.. கொட்டப்போகும் மழை! வானிலை மையம் கொடுத்த அப்டேட்! -
சென்னை.. தேர்தல் பறக்கும் படையிடம் சிக்கிய "ஏகே 47.." விசாரணையில், யாரும் எதிர்பார்க்காத ட்விஸ்ட் -
Gold Investors: தங்கம் விலை தொடர் சரிவு! முதலீட்டாளர்களுக்கு நஷ்டம்? என்ன நடக்கிறது? -
தங்கம்.. 'தரை' தட்டியது ஏன்? கூடை கூடையாக மார்க்கெட்டில் விற்ற அரபு நாடுகள்.. ஒரு ராட்சனின் வீழ்ச்சி -
கேஸ் சிலிண்டர் விலை மாறுது! ஏப்.1 முதல் புதிய விலை! இல்லத்தரசிகள் மாத பட்ஜெட்டில் என்ன தாக்கம்? -
டெல்லி தந்த கிரீன் சிக்னல்.. 4 வழியாக மாறும் தமிழ்நாட்டின் மூன்று முக்கிய சாலைகள்.. மெகா பிளான்! -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
1 சவரன் தங்க நகை வாங்க போறீங்களா? கடைக்காரர் போடும் கணக்கில் அதிக மாற்றமா? ஏமாறாமல் இருக்க பில் தேவை -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
அதை சொல்ல யாருக்கும் அருகதை இல்லை.. வீட்டிலும், ஆபீஸிலும் இதுதான் நடக்குது செல்வராகவன் ஆதங்கம் -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்?












Click it and Unblock the Notifications