அடுத்த 1 மணி நேரம்! இடி மின்னலுடன் சென்னை உள்ளிட்ட 7 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு.. வானிலை மையம்
சென்னை: தமிழகத்தில் அடுத்த 1 மணி நேரத்தில் சென்னை உள்பட 7 மாவட்டங்களில் இடி மற்றும் மின்னலுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, தென்காசியிலும் மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை மையம் கூறியுள்ளது.
தமிழகத்தில் தென்மேற்கு பருவமழை காரணமாக அவ்வப்போது ஒருசில இடங்களில் மழை விட்டு விட்டு பெய்து வருகிறது. குறிப்பாக தலைநகர் சென்னையில் சில நேரங்களில் திடீர் மழை பெய்கிறது. நேற்று இரவும் சென்னையில் திடீரென கனமழை கொட்டியது. இன்றும் இரவு 7 மணியளவில் சென்னையில் பல்வேறு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்தது.

இதனால் பகல் நேரங்களில் சுட்டெரித்த வெயிலால் தகித்து இருந்த அனல் தணிந்து குளிர்ச்சியான சூழல் நிலவியது. இந்த நிலையில் அடுத்த 1 மணி நேரத்திலும் சென்னையில் மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை மையம் கூறியுள்ளது. இது தொடர்பாக வானிலை மையம் வெளியிட்ட அறிவிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:-
தமிழகத்தில் இன்று இரவு 10 மணி வரை சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, தென்காசி ஆகிய 7 மாவட்டங்களில் இடி மற்றும் மின்னலுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை மையம் கூறியுள்ளது.












Click it and Unblock the Notifications