தீபாவளிக்கு ஊருக்கு போறீங்களா? சென்னையில் மாலை 4 மணி வரை மழை! ரூட்டில் வரும் 14 மாவட்டங்கள்
சென்னை: சென்னை உள்பட 14 மாவட்டங்களில் மாலை 4 மணி வரை மிதமானது முதல் லேசானது வரை இடியுடன் கூடிய மழை பெய்யக் கூடும் என சென்னை வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
இதுகுறித்து சென்னை வானிலை மையம் கூறியிருப்பதாவது: சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர், நாகை, மயிலாடுதுறை, சேலம், திருவண்ணாமலை, திருப்பத்தூர், ராணிப்பேட்டை, திருவாரூர், ராமநாதபுரம், மயிலாடுதுறை, வேலூர் ஆகிய 14 மாவட்டங்களில் இன்று மாலை வரை இடி மின்னலுடன் கூடிய மழை பெய்யும்.

சென்னையில் இன்று மாலை 4 மணி வரை மழை பெய்யும். சென்னையில் காலை முதலே வானம் மேக மூட்டத்துடன் காணப்பட்டது. இதைத் தொடர்ந்து முகப்பேர், அம்பத்தூர், நொளம்பூர், கோயம்பேடு, அமைந்தகரை, கோடம்பாக்கம், நுங்கம்பாக்கம், திநகர், சைதாப்பேட்டை, வடபழனி, அசோக் நகர், ஈக்காட்டுத்தாங்கல், கிண்டி உள்ளிட்ட பகுதிகளில் இடியுடன் கூடிய மழை பெய்து வருகிறது.
இதனால் தீபாவளிக்கு ஊருக்கு செல்வோர், துணி, பட்டாசு வாங்க கடைகளுக்கு சென்றோர் கடும் பாதிப்படைந்துள்ளனர்.












Click it and Unblock the Notifications