Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

வெள்ளம் வடிந்தும் வடியாத சோகம்.. அமுதம் கடைகளில் காய்கறிகள் விற்பனை.. பெட்ரோல், டீசல் விநியோகம்

Subscribe to Oneindia Tamil

சென்னை: மிக்ஜாம் புயலால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் பொது விநியோகத்திட்ட அங்காடிகளில் இன்றியமையாப் பொருள்கள் விநியோகம் மற்றும் பெட்ரோல், டீசல் விநியோகம் செய்யப்பட உள்ளது. தொடர்மழையினால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் காய்கறிகளை அமுதம் பல்பொருள் அங்காடிகள் மூலம் விற்பனை செய்யவும் உத்தரவிடப்பட்டுள்ளது.

வங்கக்கடலில் உருவான மிக்ஜாம் புயல் காரணமாக சென்னையில் ஞாயிற்றுக்கிழமை இரவு முதல் அதி கனமழை பெய்தது. இதனால் சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் உள்ள சில பெட்ரோல் பங்க்கள் வெள்ளத்தால் சூழப்பட்டன. செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூரிலும் வெள்ளம் சூழ்ந்தது. இதையடுத்து, அங்கு பெட்ரோல், டீசல் விநியோகம் நிறுத்தப்பட்டு, பங்க் மூடப்பட்டது.

Chennai Flood: Sale of vegetables in elixir shops Distribution of petrol and diesel says

சில பெட்ரோல் பங்க்குகள் திறந்திருந்த போதிலும், பெட்ரோல், டீசல் போதிய அளவு இருப்பு வைக்காததால், தட்டுப்பாடு ஏற்பட்டது. சில பங்க்-களில் மட்டும் பெட்ரோல், டீசல் விநியோகம் செய்யப்பட்டது. அவற்றை நீண்ட வரிசையில் காத்திருந்து வாங்கிச் சென்றனர்.

இந்த நிலையில் சென்னையிலுள்ள குரோம்பேட்டை, நாகல்கேனி, பல்லாவரம் ஆகிய பகுதிகளில் இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் மற்றும் பி.பி.சி.எல். சில்லறை விற்பனை நிலையங்களில் பெட்ரோல்-டீசல் அளவின் இருப்பை அமைச்சர் சக்கரபாணி நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டார். இதனையடுத்து செய்தியாளர்களிடம் பேசிய சக்கரபாணி, வெள்ள பாதிப்பிற்குள்ளான இடங்களில் 39 பெட்ரோல் பங்க்குகள் மட்டுமே இயங்கவில்லை. மழைநீர் சூழ்ந்துள்ள பகுதிகளில் உள்ள வீடுகளுக்கே சென்று சிலிண்டர் விநியோகிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என்றார்.

சமையல் எரிவாயு சிலிண்டர்களையும் தட்டுப்பாடின்றி வழங்க ஏஜென்சிகளுக்கு அறிவுறுத்தி உள்ளோம். புயல், மழையால் பாதித்த 4 மாவட்டங்களிலும் தேவைப்படுவோருக்கு வீடு, வீடாக பெட்ரோல், டீசல் விநியோகம் செய்யப்படுகிறது. 6,000 கொள்ளளவு கொண்ட 25 மினி டேங்கர்களில் வீடு, வீடாக பெட்ரோல், டீசல் விநியோகிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என்றார்.

இதனைத் தொடர்ந்து மிக்ஜாம் புயலால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் பொது விநியோகத்திட்ட அங்காடிகளில் இன்றியமையாப் பொருள்கள் விநியோகம் மற்றும் பெட்ரோல், டீசல் விநியோகம் குறித்து உயர் அலுவலர்களுடன் ஆலோசனை நடத்தப்பட்டது.

உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி தலைமையில் நடைபெற்ற ஆலோசனை கூட்டத்தில், கடைகளுக்குள் நீர் புகுந்ததால் வீணான பொருள்களை உடனடியாக அப்புறப்படுத்தவும் அதற்கு பதிலாகப் புதிய பொருள்களை வழங்கிடவும் அறிவுரைகள் வழங்கப்பட்டன.

மேலும் அனைத்துக் நியாயவிலைக் கடைகளிலும் அத்தியாவசியப் பொருள்களைத் தடையின்றி தரமாக வழங்குதலை உறுதிப்படுத்தடவும் கூட்டத்தில் அறிவுறுத்தப்பட்டது. தொடர்மழையினால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் காய்கறிகளை அமுதம் பல்பொருள் அங்காடிகள் மூலம் விற்பனை செய்யவும் உத்தரவிடப்பட்டது.

சென்னை காஞ்சிபுரம் செங்கல்பட்டு திருவள்ளூர் மாவட்டங்களில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் உள்ள அமுதம் பல்பொருள் அங்காடிகளில் காய்கறிகள் விற்பனை தொடர்ந்து நடைபெறும். அனைத்து நியாயவிலை கடைகளிலும் அத்தியாவசிய பொருட்கள் தடையின்றி வழங்கவும் அரசு உத்தரவிட்டு உள்ளதாக அமைச்சர் சக்கரபாணி கூறினார்.

வெள்ளம் பாதித்த பகுதிகளில் பழுதான வாகனங்களுக்கான சிறப்பு முகாம் அமைக்கப்படும். வாகன விற்பனையாளர் சங்க கூட்டமைப்பின் கோரிக்கையை ஏற்று மழையால் சேதம் அடைந்த வாகனங்களின் பழுதை நீக்க தற்காலிகமாக இடம் வழங்கப்படும் பழுதான வாகனங்களை பழுது நீக்கும் இடத்திற்கு இழுத்து செல்வதற்காக வாகன வசதி ஏற்பாடு செய்வது குறித்து ஆராயப்படும். இழுவை வாகனங்களை பிற மாவட்டங்களில் இருந்து கொண்டு வருவதற்கான சாத்தியக்கூறுகள் ஆராயப்படும் என்றும் அமைச்சர் சக்கரபாணி தெரிவித்தார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+