சுத்து போட்டுருச்சே “பூதம்”.. கடலுக்கு நடுவே டேஞ்சர் சிக்னல்! தமிழ்நாடு மீனவர்களுக்கு பறந்த அலர்ட்
Subscribe to Oneindia Tamil
சென்னை: கடலில் சூறாவளிக் காற்று வீசி வருவதால் மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது.
இது குறித்து வெளியான அறிவிப்பில், “தமிழக கடலோரப் பகுதிகளை பொறுத்தவரை ஜனவரி 2 ஆம் தேதி (இன்று) முதல் ஜனவரி 6 ஆம் தேதி வரை: குமரிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய மன்னார் வளைகுடா பகுதிகளில் சூறாவளிக் காற்று மணிக்கு 40 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக் கூடும்.

வங்கக்கடல் பகுதிகளை பொறுத்தவரை ஜனவரி 2 ஆம் தேதி (இன்று) மற்றும் ஜனவரி 3 ஆம் தேதி : இலங்கை கடற்கரையை ஒட்டிய தென் மேற்கு வங்கக் கடல் பகுதிகளில் சூறாவளிக் காற்று மணிக்கு 40 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.
அரபிக்கடல் பகுதிகளை பொறுத்தவரை ஜனவரி 2 ஆம் தேதி (இன்று) லட்சத்தீவு பகுதிகள், தென் கிழக்கு அரபிக் கடல் மற்றும் அதனை ஒட்டிய தென்மேற்கு அரபிக் கடல் பகுதிகளில் சூறாவளிக் காற்று மணிக்கு 40 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.
ஜனவரி 3 ஆம் தேதி மற்றும் ஜனவரி 4 ஆம் தேதி : லட்சத்தீவு பகுதிகள், தென்கிழக்கு அரபிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய மத்திய கிழக்கு அரபிக்கடல் பகுதிகளில் சூறாவளிக் காற்று மணிக்கு 40 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.
ஜனவரி 5 ஆம் தேதி மத்திய கிழக்கு அரபிக் கடல் மற்றும் அதனை ஒட்டிய தென் கிழக்கு அரபிக்கடல் பகுதிகள் மற்றும் லட்சத்தீவு பகுதிகளில் சூறாவளிக் காற்று மணிக்கு 40 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.
ஜனவரி 6 ஆம் தேதி மத்திய கிழக்கு அரபிக் கடல் மற்றும் அதனை ஒட்டிய தென் கிழக்கு அரபிக் கடல் பகுதிகளில் சூறாவளிக் காற்று மணிக்கு 40 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும். இந்த நாட்களில் மீனவர்கள் இப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாமென்று அறிவுறுத்த படுகிறார்கள். மேலும் விவரங்களை அறிய mausam.imd.gov.in/chennai என்ற இணையதளத்தை காணவும்.” என்று குறிப்பிடப்பட்டு உள்ளது.












Click it and Unblock the Notifications