தமிழகத்தில் எங்கெல்லாம் மழைக்கு வாய்ப்பு.. வெப்ப அலைக்கு நடுவில் வந்த நல்ல செய்தி

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழகத்தில் வருகிற 29-ந்தேதி வரை வெப்ப நிலை 104 முதல் 107 டிகிரி வரை பதிவாகும் என்றும், கன்னியாகுமரி, நெல்லை மற்றும் மேற்குத்தொடர்ச்சி மலை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் 28ம்தேதி வரை மழைக்கு வாய்ப்பு உள்ளதாகவும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் கோடை வெயில் கடுமையாக உள்ளது. வழக்கத்தைவிட வெப்பக்காற்று அதிகமாக உள்ளது. பகல் நேரங்களில் மக்கள் வெளியில் சென்றால், சுருண்டு விழும் அளவிற்கு பல இடங்களில் வெயிலின் தாக்கம் இருக்கிறது. இரவில் புழுக்கம் காரணமாக அவதிப்படுகிறார்கள். வெப்ப அலையால் பலரும் பாதிக்கப்பட்டுள்ளனர். தமிழ்நாட்டை பொறுத்தவரை எங்கும் இல்லாத அளவாக ஈரோட்டில் 108 டிகிரி வெப்பமும், வேலூர், திருப்பத்தூரில் தலா 106 டிகிரி வெப்பம் பதிவாகி உள்ளது.

Chennai Meteorological Center explains that there is a chance of rain everywhere in Tamil Nadu

இன்றும் நாளையும் திருப்பத்தூர், வேலூர், ராணிப்பேட்டை, கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை, காஞ்சீபுரம், கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம், நாமக்கல், கரூர், ஈரோடு, நீலகிரி, கோவை, திருப்பூர், திருச்சி, அரியலூர், பெரம்பலூர், சிவகங்கை, விருதுநகர், தேனி, திண்டுக்கல், மதுரை, தென்காசி ஆகிய 24 மாவட்டங்களில் இயல்பைவிட 2 முதல் 4 டிகிரி செல்சியஸ் வரை வெப்ப நிலை அதிகரிக்கும் வாய்ப்பு உள்ளது.

அதேநேரம் வெயிலின் தாக்கத்திற்கு நடுவே கன்னியாகுமரி மாவட்டம திற்பரப்பில் 6 செ.மீ. மழை பதிவாகி உள்ளது. வெயில் மற்றும் மழை எப்படி இருக்கும் என்பது குறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் அறிக்கை வெளியிட்டுள்ளது.

அதன்படி, "தமிழ்நாட்டில் ஓரிரு இடங்களில் 29-ந்தேதி வரை (அடுத்த 3 நாட்கள்), அதிகபட்ச வெப்பநிலை 2 முதல் 4 டிகிரி செல்சியஸ் வரை அதிகரித்து காணப்படும். அதாவது 104 முதல் 107 டிகிரி வரை அதிகரிக்கும். அதேபோல், தமிழகத்தின் உள் மாவட்டங்களில் சமவெளி பகுதிகளில் ஒரு சில இடங்களில் 100 டிகிரி முதல் 105 டிகிரி வரை வெப்பம் வாட்டி வதைக்கும்.

அதேநேரம், தமிழக பகுதிகளின் மேல் வளிமண்டல கீழடுக்குகளில் காற்றின் திசை மாறுபடும் பகுதி நிலவுகிறது. இதன்காரணமாக, கன்னியாகுமரி, நெல்லை மற்றும் மேற்குத்தொடர்ச்சி மலை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் 28-ந்தேதி வரை லேசான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. மற்ற தமிழக பகுதிகள் மற்றும் புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவும். 29-ந்தேதி முதல் மே 1-ந்தேதி வரையிலும், தமிழகத்தில் வறண்ட வானிலை நிலவும்" இவ்வாறு சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+