Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

தீபாவளிக்கு ஊருக்கு படையெடுக்கும் சென்னை மக்கள்.. மழை இருக்குமா என்ன! வெதர்மேன் மிக முக்கிய தகவல்

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழ்நாட்டில் கடந்த சில நாட்களாகவே பரவலாக நல்ல மழை பெய்து வருகிறது. இதற்கிடையே வரும் நாட்களில் கிளைமேட் எப்படி இருக்கும் என்பது குறித்த தகவல்களை வெதர்மேன் பகிர்ந்துள்ளார். மேலும், சென்னை மக்கள் தீபாவளிக்கு ஊருக்கு செல்ல தயாராகும் நிலையில், அப்போது மழை இருக்குமா என்பது குறித்த தகவல்களையும் வெதர்மேன் பகிர்ந்துள்ளார்.

தமிழ்நாட்டில் இந்த பருவமழை சீசன் தொடங்கியது முதலே பரவலாக நல்ல மழை பெய்து வருகிறது. குறிப்பாகச் சென்னை மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் கடந்த சில நாட்களுக்கு முன்பு கனமழை கொட்டி தீர்த்தது.

weather diwali 2024 weather man 2024

இது மட்டுமின்றி மாநிலத்தின் பெரும்பாலான பகுதிகளில் நல்ல மழையே பெய்து வருகிறது. இதனால் நீர்நிலைகள் வேகமாக நிரம்பி வருவதால் பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

தீபாவளி நெருங்குதே: இது ஒரு பக்கம் இருக்க மக்கள் இப்போது தீபாவளி கொண்டாடத் தயாராகி வருகிறார்கள். வரும் வியாழக்கிழமை தீபாவளி பண்டிகை கொண்டாடவுள்ள நிலையில், இதற்கு நாளை முதலே பொதுமக்கள் ஊருக்குச் செல்ல தொடங்குவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நேரத்தில் சென்னை மற்றும் புறநகரில் மழை இருக்குமா என்பது குறித்த தகவல்களை வெதர்மேன் பிரதீப் ஜான் பகிர்ந்துள்ளார்.

இதற்கிடையே இது தொடர்பாகத் தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் சில முக்கிய தகவல்களைப் பகிர்ந்துள்ளார். கன்னியாகுமரி மாவட்டத்தில் கனமழை தொடரும் என்று குறிப்பிட்ட வெதர்மேன், சென்னையில் அடுத்து எப்போது மழை இருக்கிறது என்பது குறித்த தகவல்களையும் பகிர்ந்துள்ளார்.

வெதர்மேன்: இது தொடர்பாக அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், "கன்னியாகுமரி மாவட்டத்தில் தொடர்ந்து பரவலாக மழை பெய்து வருகிறது. இன்றும் கன்னியாகுமரி மாவட்டத்தில் மழைக்குச் சாதகமான சூழலே நிலவுகிறது. தென் தமிழகத்தின் பிற மாவட்டங்களிலும் ஆங்காங்கே மழை பெய்யும்.

அதேநேரம் கேடிசிசி (சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர்) உட்பட வட தமிழ்நாட்டின் பெரும்பாலான மாவட்டங்கள் வறண்டதாக இருக்கும். கேடிசிசி பகுதியில் அடுத்த மழை நவம்பர் 4 அல்லது 5ம் தேதி தான் தொடங்கும்" என்று அவர் பதிவிட்டுள்ளார். மேலும், கன்னியாகுமரியில் பல பகுதிகளில் கடந்த 24 மணி நேரத்தில் கொட்டிய கனமழை குறித்த தகவல்களையும் அவர் பகிர்ந்துள்ளார்.


மழை இருக்காது: அதாவது சென்னை மற்றும் புறநகரில் நவ. 4, 5ம் தேதிகளிலேயே மழைக்கு வாய்ப்பு இருக்கிறது. சென்னையில் வசிக்கும் வெளியூர் மக்கள் நாளை முதலே வெளியூர் செல்வார்கள் என்று எதிர்பார்க்கப்படும் நிலையில், அப்போது மழை இருக்காது என்பது போலவே வெதர்மேன் குறிப்பிட்டுள்ளார்.

சென்னை வானிலை மையம்: முன்னதாக வானிலை மையம் வெளியிட்டிருந்த செய்திக்குறிப்பில், "வரும் அக். 30ம் தேதி வரை தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். அக். 31 மற்றும் நவ. 1ம் தேதிகளில் தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

சென்னை மற்றும் புறநகரில் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 35-36° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 26-27° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+