சென்னையை சுத்து போட்ட மழை மேகங்கள்.. நள்ளிரவு முழுக்க 15 மாவட்டங்களில் கொட்டும் மழை
சென்னை: கோடை வெயிலின் தாக்கம் வாட்டி வதைத்து வரும் சூழலில், இன்று இரவு திடீரென சென்னையின் பல்வேறு பகுதிகளில் பரவலாகப் பெய்த திடீர் மழை ஒட்டுமொத்த நகரத்தையும் குளிர்வித்து. மேலும், இன்று நள்ளிரவு 1:00 மணி வரை தமிழகத்தின் சென்னை உள்பட 15 மாவட்டங்களில் இடியுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை மண்டல வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
பொதுவாகத் தமிழகத்தில் மே மாதத்தோடு அக்னி நட்சத்திரம் முடிந்தாலும் கூட ஜூன் மாதமும் வெப்பம் அதிகமாகவே இருக்கும். குறிப்பாக சென்னையில் புழுக்கம் அதிகமாகவே இருக்கும். ஆனால், இன்று நிலைமை மொத்தமாக மாறிவிட்டது. இரவு திடீரெனக் கருமேகங்கள் சென்னையைச் சூழ்ந்த நிலையில், மழை பெய்ய ஆரம்பித்தது.

நல்ல மழை
சென்னையின் பல முக்கியப் பகுதிகளில் பலத்த மழையும், சில இடங்களில் தூறல் மழையும் பதிவாகியுள்ளது. சென்னை வடபழனி, ஈக்காட்டுத்தாங்கல், கிண்டி, அண்ணா நகர், ஆர்.கே. நகர், தண்டையார்பேட்டை மற்றும் ராயபுரம் உள்ளிட்ட பகுதிகளில் பரவலாக நல்ல மழை பெய்து வருகிறது.
அண்ணா சாலை, சேப்பாக்கம், நுங்கம்பாக்கம், மாம்பலம், தி.நகர் ஆகிய பகுதிகளில் இதமான சாரல் மழை பெய்து சாலையைக் குளிர்வித்துள்ளது. இந்தத் திடீர் மழையால் நகரின் வெப்பம் கணிசமாகக் குறைந்து குளுமையான சூழல் நிலவுகிறது. இதனால் பொதுமக்கள் செம குஷியில் இருக்கிறார்கள். அதேநேரம் மழையால் இரவு நேரத்தில் வாகன ஓட்டிகள் சற்றே சிரமத்திற்கு உள்ளாகினர்.
நள்ளிரவில் கொட்டும் மழை
இது ஒரு பக்கம் இருக்க நள்ளிரவு 1:00 மணி வரை தமிழகத்தின் 15 மாவட்டங்களில் இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாகவும் கூட சென்னை வானிலை மையம் கூறியுள்ளது. அதன்படி சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர், வேலூர், ராணிப்பேட்டை, கோயம்புத்தூர், திருப்பூர், நீலகிரி மாவட்டங்களில் மழை பெய்யும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல தேனி, திண்டுக்கல், விருதுநகர், தென்காசி, திருநெல்வேலி, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களிலும் இடி மின்னலுடன் மழை பெய்யும் எனக் கூறப்பட்டுள்ளது.
கவனம்
இதன் காரணமாக நகரின் சில தாழ்வான மற்றும் குறிப்பிட்ட பகுதிகளில் தண்ணீர் தேங்கலாம்.. மழையின் காரணமாகச் சாலைகள் வழுக்கும் தன்மையுடன் காணப்படும் என்பதால் வாகன ஓட்டிகள் கவனமுடன் செல்ல அறிவுறுத்தப்படுகிறார்கள். சில இடங்களில் இந்த மழையால் போக்குவரத்து பாதிப்புகள் ஏற்படக்கூடும் என்றும் வானிலை மையம் கூறியுள்ளது.
சென்னையைக் குளிர்வித்துள்ள இந்த மழை, தென் மாவட்டங்கள் மற்றும் கொங்கு மண்டலத்தின் சில பகுதிகளுக்கும் நீடிப்பதால்.. வெப்பத்தின் பிடியில் இருந்த மக்களுக்கு இந்த ஜூன் மாதத் தொடக்கம் சற்றே நிம்மதியைத் தந்துள்ளது!
-
அடித்து பெய்யப்போகும் கனமழை! கோவை டூ கன்னியாகுமரி.. 7 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை! -
கோவை டூ குமரி வரை.. இன்று 10 மாவட்டங்களில் விட்டு விளாச போகுது கனமழை.. சென்னைக்கும் அலர்ட் -
சபாஷ் வன்னியரசு.. சாதி பாகுபாட்டை உடைத்த தவெக.. கோவை கிராமத்திற்கு 21 ஆண்டுக்கு பிறகு சென்ற பேருந்து -
3 நாளில் மன்னிப்பு கேட்க வேண்டும்.. தவெக எம்எல்ஏ பல்லவிக்கு திமுக அவதூறு நோட்டீஸ்.. என்ன மேட்டர்? -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தலை எதிர்கொள்ள திமுகவின் இரட்டை வியூகம்.. இள ரத்தத்திற்கு முக்கியத்துவம்! -
டாஸ்மாக்கில் ரூ.3,600 கோடி ஊழல்.. லிஸ்ட் எடுத்த தவெக.. அமைச்சர் விக்னேஷ் திடுக் தகவல் -
96,000 வாக்குகள் வித்தியாசத்தில்.. தவெக வேட்பாளரை ஜெயிக்க வைத்த தொகுதிக்கு இந்த நிலைமையா? -
ரூ.15 லட்சம் கோடி பஸ்பம் ஆகும்? சரிகிறது இந்தியாவின் தங்க’ சாம்ராஜ்யம்.. நாட்டையே உலுக்கும் சம்பவம் -
அதிகாலையே கணக்கில் வரவு வைக்கப்பட்ட ரூ.3000.. வந்தது மே மாதம் பேமெண்ட்.. அரசின் அசத்தல் மூவ்! -
இந்தியாவை தாக்கும் பெரிய ஆபத்து.. விஷயம் கேட்டு எலான் மஸ்க் கூட அதிர்ந்து போனார்! பேரழிவு கன்பார்ம்? -
சென்னை சூட்கேஸில் தலை இல்லாத சடலம்... இப்படி ஒரு பெண்ணா? பார்கோடு தந்த மரண துப்பு.. அலறிய பெரம்பூர் -
சொத்துகளை மறைக்கும் சென்னை மேயர் பிரியா.. துணை மேயர் உள்பட 75% கவுன்சிலர்கள் 4 ஆண்டுகளாக ‘டிமிக்கி'












Click it and Unblock the Notifications