21 ஆண்டுகளுக்கு பிறகு சென்னையில் நடந்த அதிசயம்.. வெதர்மேன் சொன்னதை கவனிச்சீங்களா!

Subscribe to Oneindia Tamil

சென்னை: கடந்த 21 ஆண்டுகளில் இந்த மே மாதத்தில்தான் சென்னையில் வெயில் 40 டிகிரி செல்சியஸை தாண்டவில்ல என்று தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் கூறியுள்ளார்.

ஆனால் மாதம் முடிய இன்னும் 8 நாட்கள் பாக்கி இருப்பதாகவும், அப்படி 8 நாட்களும் சென்னையில் வெயில் குறைவாக பதிவாகியிருந்தால் அது மிகப்பெரிய அதிசய நிகழ்வாக இருக்கும் என்றும் கூறியுள்ளார்.

chennai tamil nadu rain

இது குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டிருக்கும் அவர், "தமிழ்நாட்டில் இந்த மாதம் எந்த மாவட்டத்திலும் 40 டிகிரி அளவுக்கு வெயில் பதிவாகவில்லை. மாநிலத்தின் அதிகபட்ச வெப்பநிலையாக தூத்துக்குடியில் 38.4 டிகிரி செல்சியஸ் பதிவாகியிருந்தது. சென்னையில் கடந்த 2004ம் ஆண்டுக்கு பிறகு இந்த ஆண்டின் மே மாதத்தில்தான் 40 டிகிரியை வெடியில் தொடாமல் இருக்கிறது. இருப்பினும் மாதம் முடிய இன்னும் 8 நாட்கள் இருக்கின்றன. இதில் கவனிக்க வேண்டியது என்னவெனில் நுங்கம்பாக்கம் கடலுக்கு பக்கத்தில் இருப்பதால் அதிகாலை கடல் காற்று அதிகமாக வீசாது. எனவே வெயில் மிதமானதாக இருக்கும்.

ஆனால் மீனம்பாக்கம் அப்படிக்கிடையாது. மே மாதத்தில் இங்கு 40 டிகிரி வெயில் பதிவாகாமல் இருப்பது நிச்சம் அதிசயம்தான். மீனம்பாக்கத்தை பொறுத்தவரை கடந்த 1995ம் ஆண்டு 6 நாட்கள் மட்டும் 40 டிகிரி செல்சியஸ் அளவுக்கு வெயில் பதிவாகியிருந்தது. 2004ம் ஆண்டு, அந்த ஆண்டு முழுவதும் ஒரு நாள் கூட 40 டிகிரி வெயில் பதிவாகவில்லை.

இதே நுங்கம்பாக்கத்தை எடுத்துக்கொண்டால், 1995 மற்றும் 1999ம் ஆண்டுகளில் 40 டிகிரி அளவுக்கு வெயில் பதிவாகவில்லை. இது 2004 மற்றும் 2018ம் ஆண்டும் தொடர்ந்தது. ஆனால் 2022ம் ஆண்டு 2 நாட்கள் 40 டிகிரி அளவுக்கு வெயில் இருந்தது" என்று குறிப்பிட்டிருக்கிறார்.

முன்னதாக சென்னை வானிலை ஆய்வு மையம் விடுத்திருந்த அறிக்கையில், அதிகபட்ச வெப்பநிலை மாறுதலின் போக்கை பொறுத்தவரை இன்றும் நாளையும் தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில், ஒருசில இடங்களில் அதிகபட்ச வெப்பநிலை 1-2° செல்சியஸ் வரை படிப்படியாக உயரக்கூடும். மே.24 முதல் 26ம் தேதி வரை தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் அதிகபட்ச வெப்பநிலை ஒருசில இடங்களில் சற்று குறையக்கூடும்.

இன்றும் நாளையும் தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் அதிகபட்ச வெப்பநிலை ஒருசில இடங்களில் 2-3* செல்சியஸ் இயல்பை விட அதிகமாக இருக்கக்கூடும். மே.24 முதல் 26 வரை தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் அதிகபட்ச வெப்பநிலை ஒருசில இடங்களில் இயல்பை ஒட்டி இயல்பை விட குறைவாக இருக்கக்கூடும்.

குறிப்பாக இன்றும் நாளையும் தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் அதிக வெப்பநிலையும், அதிக ஈரப்பதமும் இருக்கும் நிலையில் தமிழகத்தில் ஓரிரு பகுதிகளில் வெப்பம் சார்ந்த அசௌகரியம் ஏற்படலாம்" என தெரிவிக்கப்பட்டிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+