பாம்பனில் வெடித்து சிதறிய மேகம்.. ராமேஸ்வரத்தில் 10 மணிநேரத்தில் 41 செமீ மழை.. கரைபுரளும் வெள்ளம்
ராமநாதபுரம்: ராமநாதபுரம் மாவட்டத்தில் இன்று காலை முதல் கனமழை கொட்டி தீர்த்து வருகிறது. இந்த வேளையில் பாம்பனில் திடீர் மேகவெடிப்பு நிகழ்ந்ததால் அங்கு 3 மணிநேரத்தில் 19 சென்டிமீட்டர் மழை பெய்ததோடு, ராமேஸ்வரத்தில் இன்று காலை முதல் 10 மணி நேரத்தில் மொத்தம் 41 சென்டிமீட்டர் மழை பெய்துள்ளது. இதனால் அந்த பகுதிகளில் வெள்ளத்தில் தத்தளிக்கின்றன.
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை வெளுத்து வாங்கி வருகிறது. குறிப்பாக நேற்று நள்ளிரவு முதல் தென்தமிழகத்தின் பல மாவட்டங்களில் மழை பெய்ய தொடங்கியது. இந்த மழை என்பது விடாமல் பெய்தபடியே இருந்தது.

அதாவது தென்காசி, திருநெல்வேலி, விருதுநகர், கன்னியாகுமரி, ராமநாதபுரம் உள்பட பல தென்தமிழக மாவட்டங்களில் தொடர்ந்து மழை பெய்தது. இதில் ராமநாதபுரம் மாவட்டத்தில் மழையால் மக்களின் இயல்பு வாழ்க்கை என்பது பெரிதும் பாதிக்கப்பட்டது.
ஏனென்றால் பிற தென்தமிழக மாவட்டங்களை ஒப்பிடும்போது ராமநாதபுரம் மாவட்டத்தில் தான் கனமழை என்பது வெளுத்து வாங்கியது. குறிப்பாக பாம்பனில் மேகவெடிப்பு ஏற்பட்டு வெறும் 3 மணிநேரத்தில் மொத்தம் 19 சென்டிமீட்டர் மழை என்பது பதிவாகி உள்ளது. இதனை சென்னை வானிலை ஆய்வு மையம் உறுதி செய்துள்ளது.
இதுதொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், ‛‛ ராமநாதபுரம் மாவட்டம் பாம்பனில் இன்று முற்பகல் 11.30 மணி முதல் பிற்பகல் 2.30 மணி வரை 19 சென்டிமீட்டர் மழை பதிவாகி உள்ளது. மிகக் குறுகிய இடத்தில் உருவான வலுவான மேகக்கூட்டங்கள் காரணமாக மேகவெடிப்பு நிகழ்ந்துள்ளது'' என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதேபோல் ராமநாதபுரம் மாவட்டத்தில் அதிகபட்சமாக இன்று ராமேஸ்வரத்தில் கனமழை பதிவாகி உள்ளது. காலை 6 மணி முதல் மாலை 4 மணி வரையிலான 10 மணி நேரத்தில் ராமேஸ்வரத்தில் மொத்தம் 41 சென்டிமீட்டர் மழை பெய்துள்ளது. குறிப்பாக ராமேஸ்வரத்தில் பிற்பகலில் கனமழை கொட்டித்தீர்த்தது. அதாவது மதியம் 1 மணி முதல் 4 மணி வரை மொத்தம் 4 மணிநேரத்தில் ராமேஸ்வரத்தில் மட்டும் 36 சென்டிமீட்டர் மழை என்பது பதிவாகி உள்ளதாகவும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதனால் ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரம், பாம்பனில் பல இடங்களில் மழைநீர் வெள்ளமாக பெருக்கெடுத்து ஓடிவருகிறது. இதனால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. அதோடு இன்று தென்தமிழகத்தில் மிக கனமழை முதல் அதி கனமழைக்கான ‛ரெட் அலர்ட்' விடுவிக்கப்பட்டுள்ளது. இதனால் ராமநாதபுரத்தில் இன்று இரவும் மழை வெளுத்து வாங்க வாய்ப்புள்ளது என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
-
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
இன்னும் 3 நாள் தான்.. வரப் போகுது தென்மேற்குப் பருவமழை! ஜில்ஜில் கிளைமேட்டுக்கு ரெடியாகுங்க மக்களே! -
கருணை காட்டுவாரா வருண பகவான்.. சென்னை, செங்கல்பட்டில் சட்டென மாறிய வானிலை -
ராணிப்பேட்டை டூ தேனி வரை.. 16 மாவட்டங்களில் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம் -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட்












Click it and Unblock the Notifications