தென் சென்னை டூ செங்கல்பட்டு வரை.. செம மழை இருக்கு.. தமிழ்நாடு வெதர்மேன் கொடுத்த அப்டேட்!
சென்னை: மேகங்கள் மெல்ல மெல்ல நகர்ந்து வருகின்றன. இரவு நேரத்தில் சென்னையின் பிற பகுதிகளில் கூட மழை பெய்யும் என்று தமிழ்நாடு வெதர்மேன் கணித்துள்ளார்.
தமிழ்நாட்டில் தென்கிழக்கு பருவமழை போதிய அளவு பெய்யவில்லை. தென்கிழக்கு பருவமழை காலத்தில் இயல்பைக் காட்டிலும் குறைவாகவே மழை பெய்தது. இதனால், வடகிழக்கு பருவமழையாவது எதிர்பார்க்கும் அளவுக்கு இருக்குமா? என மக்கள் எதிர்பார்த்துக் கொண்டு இருந்தனர். நடப்பு ஆண்டு வடகிழக்கு பருவமழை சற்று தாமதமாகவே தொடங்கியது. ஆனால், வடகிழக்கு பருவமழை ஆரம்பித்தது முதல் நல்ல மழை பெய்து வருகிறது.

அதிலும் கடந்த சில நாட்களாகவே மாநிலத்தில் பல்வேறு இடங்களிலும் நல்ல மழை பெய்து வருகிறது. வரும் நாட்களிலும் இந்த மழை தொடரும் என்றே எதிர்பார்க்கப்படுகிறது. அந்த வகையில், தமிழகத்தில் நாளை (27-11-2023) தெற்கு அந்தமான் கடல் மற்றும் அதனை ஒட்டியுள்ள தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் ஒரு காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இரவு நேரங்களில்: இது மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் 29-ஆம் தேதி வாக்கில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறக்கூடும். அப்படி நடந்தால் அது தமிழகத்திற்குப் பரவலாக மழையை தரும் என்றே எதிர்பார்க்கப்படுகிறது. தலைநகர் சென்னையை பொறுத்தவரை இன்று காலையில் இருந்து பெரிய அளவில் மழை எதுவும் பெய்யவில்லை. பல இடங்களில் வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது.
இரவு நேரத்தில் பல்வேறு இடங்களில் கனமழை பெய்தது. சென்னை எழும்பூர், சென்ட்ரல், கிண்டி உள்ளிட்ட பகுதிகளில் இடி மின்னலுடன் மழை பெய்தது. சென்னையில் பல்வேறு இடங்களில் நல்ல மழைக்கு வாய்ப்பு உள்ளதாக தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார். அவர் கூறியிருப்பதாவது:- மேகங்கள் மெல்ல மெல்ல நகர்ந்து வருகின்றன.
சென்னையில் எப்படி?: இரவு நேரத்தில் சென்னையின் பிற பகுதிகளில் கூட மழை பெய்யும். தென் சென்னை முதல் செங்கல்பட்டு, செங்கல்பட்டு டூ காஞ்சிபுரம் வரை நல்ல மழை பெய்யும். ஈசிஆர் பெல்ட்டில் கேளம்பாக்கம் டூ சோழிங்கநல்லூர் வரை நல்ல மழையை பெறும்" என்று பதிவிட்டுள்ளார். முன்னதாக இன்று வானிலை மையம் வெளியிட்ட அறிவிப்பில், நாளை கடலோர தமிழகத்தில் அநேக இடங்களிலும், உள் தமிழக மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
சென்னை மற்றும் புறநகர்ப் பகுதிகளைப் பொறுத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒரு சில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசான / மிதமான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 32 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 25-26 டிகிரி செல்சியஸாகவும் இருக்கக்கூடும்" என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
-
Gold Price: மீண்டும் ஷாக் கொடுத்த தங்கம் விலை.. ஒரே நாளில் அதிரடி உயர்வு.. நகை பிரியர்கள் கலக்கம்! -
மகளிர் உரிமை தொகை வராது.. அடுத்த 1 வாரத்தில் தமிழக அரசு தரும் ரூ.2000.. யாருக்கெல்லாம் கிடைக்கும்? -
₹10 லட்சம் லோன் எடுத்தா ஒரு பகுதி இலவசமா? கூட்டுறவு வங்கியில் மானியம்.. பிசினஸ் லாபம் சூப்பர் சான்ஸ் -
சிறகடிக்க ஆசை: போலீஸ் சொன்ன விஷயம்! சந்தோஷத்தில் முத்து! அண்ணாமலை வீட்டில் கொண்டாட்டம்! விஜயா முடிவு -
லால்குடியில் களமிறங்கிய ஆதவ் அர்ஜுனா மாமியார்.. அதிமுகவில் இணைந்த 1 மாதத்தில் சீட் கொடுத்த எடப்பாடி -
ரசிகர்கள் எதிர்பார்த்த வீடியோவை வெளியிட்ட திரிஷா.. ஒரு வழியாக எல்லோரும் கேட்டது நடந்துடுச்சு.. குவியும் பாராட்டு -
ஓசூரில் சத்தமின்றி புரட்சி.. ரெடியாகும் தமிழ்நாட்டின் 6-வது பிரம்மாண்ட 'டைடல் பார்க்'.. தரமான வேகம் -
பாதாளத்தில் பாய்ந்த அமெரிக்கா! டிரம்ப் கொஞ்சம் கூட எதிர்பார்க்காத சம்பவம்.. மொத்தமா போச்சு! -
வாழ்க்கை துணை கிடைச்சிடுச்சு.. இவர்தான் ஜென்டில்மேன்! சர்ச்சைக்கு மத்தியில் திரிஷாவின் லேட்டஸ்ட் பதிவு -
தமிழ் புத்தாண்டு பலன்: குருவின் அருளால் மகர ராசிக்கு அடிக்கும் ஜாக்பாட்.. பிரகாசமாகப் போறீங்க -
இடி, மின்னலுடன் மழை கொட்டப்போகுது.. அடிக்கும் வெயிலுக்கு ஜில் அப்டேட் கொடுத்த வானிலை மையம்! -
ஸ்டாலின் களமிறக்கும் "மிசைல்" விஐபி! அதிமுக எதிர்பார்க்கல! விஸ்வநாதனுக்கு செக்? திமுக சர்ப்ரைஸ் மூவ்












Click it and Unblock the Notifications