வங்கக்கடலில் உருவான புயல் சின்னம்.. டெல்டா மாவட்டங்களுக்கு வார்னிங்! உஷார் மக்களே!
Subscribe to Oneindia Tamil
சென்னை: ஜனவரி மாதத்தில் வங்கக்கடலில் வழக்கமாக புயல்கள் உருவாவது கிடையாது. கடந்த 155 ஆண்டுகளுக்கு முன்னர் இப்படி ஒரு புயல் உருவாகியிருந்தது. இந்நிலையில், இந்த ஆண்டு புயல் சின்னம் உருவாகியிருக்கிறது என்று இந்திய வானிலை ஆய்வு மையம் கூறியிருக்கிறது.
வங்கக்கடலில் நிலவி வந்த காற்றழுத்த தாழ்வு பகுதியானது, தற்போது வலுப்பெற்ற ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறியிருக்கிறது. கடந்த 155 ஆண்டுகளில் வெறும் 20 முறைதான் ஜனவரி மாதத்தில் வங்கக்கடலில் இப்படி காற்றழுத்த தாழ்வு மண்டலம் உருவாகியிருந்தது. அந்த வகையில் தற்போது 21வது முறை காற்றழுத்த தாழ்வு மண்டலம் உருவாகியுள்ளது.

இதன் காரணமாக டெல்டா மாவட்டங்களில் ஜன.9, 10ம் தேதிகளில் கனமழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. எனவே அறுவடை பணிகளை சீக்கிரம் முடிக்கவும் அறிவுறுத்தப்பட்டிருக்கிறது.












Click it and Unblock the Notifications