இலங்கையை புரட்டிப்போட்ட திட்வா புயல்.. மின்சாரம், போக்குவரத்து சேவைகள் துண்டிப்பு.. 90 பேர் பலி!
கொழும்பு: இலங்கையில் திட்வா புயல் தாக்கத்தினால் 90 பேர் உயிரிழந்திருப்பதாகவும், 100க்கும் மேற்பட்டோர் காணாமல் போயுள்ளதாகவும் தகவல் வெளியாகி இருக்கிறது. நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் மின்சாரம் மற்றும் செல்ஃபோன் சேவை துண்டிக்கப்பட்டுள்ள நிலையில், பாதுகாப்பு நடவடிக்கைகளை அந்நாட்டு அரசு துரிதப்படுத்தி இருக்கிறது.
இலங்கையை ஒட்டிய கடல் பகுதியில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் நவம்பர் 27ஆம் தேதி புயலாக மாறியது. திட்வா என்று பெயரிடப்பட்டுள்ள இந்த புயல் காரணமாக, இலங்கையின் பல்வேறு பகுதிகளிலும் தொடர்ந்து மழை பெய்து மிகப்பெரிய சேதம் ஏற்பட்டுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 300 மிமீ மழை பெய்து பல்வேறு இடங்களில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதாக தெரிய வந்துள்ளது.

அதேபோல் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் ஆறுகள் உள்ளிட்ட நீர்நிலைகளின் நீட்மட்டம் எதிர்பாராத அளவிற்கு உயர்ந்துள்ளது. இதனால் அப்பகுதிகளை ஒட்டி வாழும் மக்கள் உடனடியாக பாதிகாப்பான இடத்திற்கு நகருமாறு அதிகாரிகள் கேட்டுக் கொண்டுள்ளனர். அதேபோல் மலையகத்தின் எந்தவொரு பகுதியிலும் மண்சரிவு ஏற்படலாம் என்றும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
ஏற்கனவே ஏற்பட்ட மண்சரிவில் சிக்கி சிலர் உயிரிழந்திருக்கலாம் என்று கருதப்படுகிறது. அதேபோல் மண்சரிவு காரணமாக ஏராளமான சாலைகளும் மூடப்பட்டுள்ளன. அதேபோல் கனமழை காரணமாக இலங்கை சுமார் 20 சதவிகித மக்கள் வசிக்கும் இடங்களில் மின்சாரம் தடை செய்யப்பட்டுள்ளது. அதேபோல் செல்ஃபோன் சேவைகளும் துண்டிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதேபோல் ரயில், போக்குவரத்து மற்றும் விமான சேவைகளும் பல்வேறு பகுதிகளில் தடைப்பட்டுள்ளது. அதுமட்டுமல்லாமல் கண்டி மாவட்டத்தில் மட்டும் 50 பேர் உயிரிழந்ததாகவும், 67 பேர் காணாமல் போயுள்ளதாகவும் தெரிய வந்துள்ளது. மொத்தமாக கண்டி, பதுளை, அம்பாறை உள்ளிட்ட பகுதிகளில் 90 பேர் உயிரிழந்திருப்பதாக இலங்கை அதிகாரிகள் தரப்பில் கூறப்பட்டுள்ளது.
இந்த திட்வா புயலால் 2.19 லட்சம் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். இலங்கையின் பல்வேறு பகுதிகளில் மழைநீர் சூழ்ந்து வெள்ளக்காடாக காட்சியளிக்கும் சூழலில், வீடுகளில் மேற்கூரை வரை தண்ணீர் சூழ்ந்திருப்பது தெரிகிற்து. இதனால் அவர்களை மீட்பதற்கான பணிகளும் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதற்காக ராணுவமும் களமிறக்கப்பட்டுள்ளது.
-
தமிழக அரசு ஊழியர்களின்.. ஓய்வு பெறும் வயதை 60-லிருந்து 62 ஆக உயர்த்த திட்டம்! ஸ்டாலின் மாஸ்டர்பிளான் -
இந்தியாவுக்கு ஆப்பு வைக்கும் ரஷ்யா.. கச்சா எண்ணெய் விலையில் இனி சலுகை இல்லை? நேரம் பார்த்து அடிக்கும் புதின் -
எடப்பாடி பழனிசாமி மீது அதிருப்தி! திமுகவில் இணைந்த முன்னாள் எம்எல்ஏ இளையக்கண்ணு! -
NDA கூட்டணியில் தவெக? துணை முதல்வராகிறாரா விஜய்? சாணக்கியத்தனத்தை சொல்லி கொடுத்த பிரபல நடிகர் -
“சவுதியிலிருந்து உடனே வெளியேறுங்கள்..” முதல் முறையாக அறிவித்த அமெரிக்கா! ஆக்ரோஷமான ஈரான் -
விஜய்க்கு எதிராக வெளியான வீடியோ.. அதிர்ந்து போன நடிகை அம்பிகா! ஆதங்கத்துடன் பதிலடி -
அமெரிக்கா மீது இடியை இறக்கிய ஈரான்! டிரம்ப் மீது மக்கள் அதிருப்தி! இதுக்கு சும்மாவே இருந்திருக்கலாம் -
திருப்பூரில் இப்படியும் ஒரு புருஷன்.. எந்த கணவனும் செய்யக்கூடாத காரியம்.. ஆடிப்போன மனைவி -
Next CM: தமிழகத்தில் ஆட்சியை பிடிப்பது யார் தெரியுமா? சித்தர் கணிப்பை பாருங்க! அப்போ விஜய்? -
நியூசிலாந்து தொடரால் உடைந்துவிட்டேன்.. கிரிக்கெட் கடவுள் செய்த அட்வைஸ்.. நெகிழும் சஞ்சு சாம்சன்! -
எடப்பாடி கோட்டையில் திமுகவுக்கு ஷாக்! அதிமுகவுக்கு தாவிய முன்னாள் எம்.எல்.ஏ! -
படக்குனு 10 கிராமாவது வாங்கிப் போடுங்க! 19,000 சரிவில் தங்க விலை! அள்ளிப் போட இது தான் சரியான நேரம்!












Click it and Unblock the Notifications