Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

சென்னை உட்பட 4 மாவட்டங்கள்.. அடுத்த 24 மணி நேரம் வெளுக்கப் போகும் கனமழை.. வானிலை ஆய்வு மையம் அப்டேட்

Subscribe to Oneindia Tamil

சென்னை: சென்னையில் இருந்து 40 கிமீ தூரத்தில் ஒரே இடத்தில் பல மணி நேரமாக நிலை கொண்டுள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம், இன்று இரவு காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவிழந்து கரையை கடக்கும் என்று வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது. இன்று நள்ளிரவு எண்ணூர் - மாமல்லபுரம் இடையே சென்னைக்கு தெற்கு கரையை கடக்கும் என்றும் கணிக்கப்பட்டுள்ளது.

வடதமிழகத்தை அச்சுறுத்தி வந்த டிட்வா புயல் வலுவிழந்து, சென்னை அருகே ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மையம் கொண்டுள்ளது. கடந்த 18 மணி நேரமாக சென்னைக்கு அருகில் கிழக்கே 40 கிமீ தொலைவில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக ஒரே இடத்தில் மையம் கொண்டிருக்கிறது. இதனால் தொடர்ந்து சென்னை மற்றும் அதனை சுற்றியுள்ள மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது.

Cyclone Ditwah Weather Chennai Rains

இந்த ஆழ்ந்த காற்றழுத்த மண்டலம், இன்று நள்ளிரவு எண்ணூர் - மாமல்லபுரம் இடையே சென்னைக்கு தெற்கே கரையை கடக்கும் என்று வானிலை ஆய்வு மையம் தரப்பில் கணிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக தமிழகத்தில் சில இடங்கள் மற்றும் புதுச்சேரியில் இன்று இடி, மின்னலுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறிப்பாக சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு மற்றும் காஞ்சிபுரம் உள்ளிட்ட மாவட்டங்களில் கனமழை தொடரும் என்றும், சென்னை, திருவள்ளூரில் ஓரிரு இடங்களில் மிக கனமழைக்கு வாய்ப்பு உள்ளது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல் குமரிக்கடல், மன்னார் வளைகுடா, தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் இன்று சூறாவளிக் காற்று வீசக்கூடும்.

இதனால் மீனவர்கள் இப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாம் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. அதேபோல் மதுரை, விருதுநகர், சிவகங்கை, புதுக்கோட்டை மற்றும் டெல்டா மாவட்டங்களில் மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாகவும், காற்றழுத்த தாழ்வு பகுதி கரையை கடந்த பின் ராணிப்பேட்டை மற்றும் திருவண்ணாமலை மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனால் பொதுமக்கள் இன்றும் தேவையின்றி வெளியில் வருவதை குறைத்துக் கொள்ளலாம். ஏற்கனவே பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளதால், பெற்றோர் கூடுதல் கவனமாக இருப்பது அவசியம். ஏற்கனவே சென்னையில் ஆங்காங்கே மழைநீர் தேங்கியுள்ள சூழலில், அதனை அகற்றும் பணிகளும் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+