மிக்ஜாம்: சிக்கி திணறும் சென்னை- ஆளுநர் ரவி வெளியிட்ட அறிக்கையில் சொல்லி இருப்பது என்ன தெரியுமா?
சென்னை: மிக்ஜாம் புயல் கொட்டித் தீர்த்த கனமழையால் சென்னை மற்றும் புறநகர் பகுதிகள் வெள்ளத்தில் மிதக்கின்றன. ஏரிகள் நிரம்பி உபரி நீர் வெள்ளம் போல குடியிருப்புகளுக்குள் பாய்ந்து ஓடுகிறது. இந்த நிலையில் பொதுமக்களுக்கு அறிவுறுத்தல் விடுத்து ஆளுநர் ரவி அறிக்கை வெளியிட்டுள்ளார்.
வங்க கடலில் குடியேறிய மிக்ஜாம் புயல் ஒட்டுமொத்த உக்கிரத்தைக் கொட்டிக் கொண்டிருக்கிறது. சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்கள் பெருமழையின் பிடியில் சிக்கி சிதைந்து கொண்டிருக்கிறது. சென்னையில் 47 ஆண்டுகளுக்கு பின்னர் அதீத கனமழை கொட்டித் தீர்த்துள்ளது.

மிக்ஜாம் புயல் கரையை கடக்கும் வரை அதாவது இன்று இரவு வரை இந்த மழை தொடரும் என எச்சரிக்கப்பட்டுள்ளது. சென்னையை சுற்றிய ஏரிகள் நிரம்பி உபரி நீர் வெள்ளமென ஓடிக் கொண்டிருக்கிறது. சென்னை அடையாற்றில் செம்பரம்பாக்கம் உபரி நீர் ஓடுகிறது. கொசஸ்தலை, கூவம் ஆறுகளிலும் வெள்ளம் கரைபுரண்டோடுகிறது. சென்னை மாநகரின் கால்வாய்களில் வெள்ளம் பெருகு குடியிருப்புகளுக்குள் நுழைகிறது.

இந்த நிலையில் தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி இன்று அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார் .அந்த அறிக்கை: மிக்ஜாம் புயல் நமது கிழக்கு கடலோர மாவட்டங்களில் சில மோசமாக பாதிக்கப்பட்டுள்ளன. மேலும் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. மக்களின் பாதுகாப்பை உறுதி செய்வதற்கும் அத்தியாவசிய சேவைகளை பராமரிக்கும் பணியிலும் மத்திய, மாநில அரசு துறைகள் ஈடுபடுத்தப்பட்டுள்ளன.

இந்த நிலைமையை மத்திய அரசும் மாநில அரசும் உயர் மட்ட அளவில் கண்காணித்து வருகின்றன. மாநில அரசின் அறிவுரைகளை மக்கள் பின்பற்றி, நிலைமை சீராகும் வரை வீட்டிலேயே பாதுகாப்பாக இருக்குமாறு கேட்டுக் கொள்கிறேன். இவ்வாறு ஆளுநர் ஆர்.என்.ரவி தெரிவித்துள்ளார்.
-
திருப்பரங்குன்றத்தில் தீபம்.. முதல்வர் விஜய் ஒப்புதல் கொடுப்பார்னு நம்புறோம்.. இந்து முன்னணி! -
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
எல்லாமே முக்கிய தலைகள் ஆச்சே.. விஜய் முன்னிலையில்.. மொத்தமாக தவெகவில் இணையும் அதிமுக தலைவர்கள்! -
திருவண்ணாமலை செய்யாறு வீடுகளில் மின்சார மீட்டர்கள் பழுதுக்கு அணில் காரணம்.. மின்சார வாரியம் பதில் -
கேட்கும்போதே நெஞ்சம் உறைகிறது.. சஹாரா பாலைவன மணலில் பழுதான லாரி. தாகத்துடன் அநியாயமாய் மாண்ட 49 பேர் -
விழுப்புரத்தில் திருமாவளவன் திறக்க இருந்த அம்பேத்கர் சிலை.. இரவோடு இரவாக அகற்றப்பட்டது ஏன்? -
சென்னை ரோட்டை கண்ணில் ஒத்திக்கலாம்.. பெங்களூர் நிலைமை படுமோசம்.. டிகே சிவகுமார் என்ன செய்வார்? -
"திமுக இல்லாதது கவலையளிக்கிறது.." ரொம்பவே வருத்தப்பட்டு பேசிய திருமாவளவன்.. என்ன மேட்டர்? -
வாண்டடா வண்டில ஏறிய செ.பா! ஹார்ட் டிஸ்க் திருட்டு என்றதும் பதற்றம் ஏன்? சிடிஆர் நிர்மல்குமார் கேள்வி -
விலகிய 113 ஒன்றிய செயலாளர்கள்.. தவெகவின் ஆபரேஷனால் மிரண்ட அறிவாலயம்! ஸ்டாலின் எடுத்த முக்கிய முடிவு -
"16 ஆண்டுகளுக்கு பின் தாய் வீட்டிற்கு.." வேல்முருகன் எமோஷ்னலாக சொல்ல.. சட்டென குறுக்கிட்ட அன்புமணி -
அதிமுக + திமுகவிற்கு ஷாக்.. 4 மாஜி அமைச்சர்கள் - 8 எம்எல்ஏக்கள் உள்பட 60 பேர் தவெகவில் ஐக்கியம்












Click it and Unblock the Notifications