Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

‛ரொம்ப அவசரம்’.. பறந்து போன மெசேஜ்.. கூடுதலாக சென்னை விரையும் 2 என்டிஆர்எப் டீம்! ஏன் முக்கியம்?

Subscribe to Oneindia Tamil

சென்னை: மிக்ஜாம் புயலால் ஏற்பட்டுள்ள கனமழையால் பாதிக்கப்பட்டுள்ள மக்களை மீட்கவும், நிவாரண பணிகளை மேற்கொள்ளவும் சென்னைக்கு மேலும் 2 தேசிய பேரிடர் மீட்பு குழுவினர் விரைய உள்ளனர்.

மிக்ஜாம் புயல் காரணமாக சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளுர், செங்கல்பட்டு மாவட்டங்கள் அதிகமாக பாதிக்கப்பட்டுள்ளன. சென்னையில் நேற்று முன்தினம் முதல் நேற்று வரை மழை வெளுத்து வாங்கியது. இதனால் சென்னையில் குடியிருப்பு பகுதிகளை வெள்ளம் சூழ்ந்துள்ளது.

Cyclone Michaung: NDRF 2 teams will come to Chennai for rescue operation

மிக்ஜாம் புயல் தற்போது ஆந்திராவில் கரையை கடக்க தொடங்கி உள்ளது. இந்நிலையில் தான் இன்று காலை முதல் சென்னையில் மழை என்பது இல்லை. இருப்பினும் பல சாலைகள் மற்றும் குடியிருப்பு பகுதிகளில் மழை வெள்ளம் இன்னும் வடியவில்லை.

இந்நிலையில் தான் மாநகராட்சி பணியாளர்கள், தீயணைப்பு வீரர்கள், மாநில பேரிடர் மீட்பு படையினர், தேசிய பேரிடர் மீட்பு படையினர் முழுவீச்சில் களமிறங்கி உள்ளனர். சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளுர் மாவட்டங்களில் இவர்கள் வெள்ள பாதிப்புள்ள பகுதிகளில் இருந்து தண்ணீர் அகற்றும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் வெள்ள பாதிப்புள்ள பகுதியில் வசிக்கும் மக்களுக்கு நிவாரண உதவிகளை வழங்கி வருகின்றனர்.

இந்நிலையில் தான் இன்று சென்னையில் மழை இல்லாத நிலையில் மீட்பு பணி மற்றும் வெள்ள நிவாரண பணி விரைவுப்படுத்தப்பட்டு வருகிறது. மீட்பு பணியில் கூடுதல் வீரர்கள், பணியாளர்கள் ஈடுபட்டால் விரைவாக சென்னையை இயல்பு நிலைக்கு கொண்டு வர முடியும். இதன் ஒருபகுதியாக தமிழகத்துக்கு கூடுதலாக 2 பேரிடர் மீட்பு குழுவினர் சென்னைக்கு வர உள்ளனர்.

இந்த குழுவினர் புதுச்சேரி மற்றும் அரக்கோணத்தில் சென்னை விரைகின்றனர். ஒரு மீட்பு குழுவில் தேசிய பேரிடர் மீட்பு படையை சேர்ந்த 25 வீரர்கள் இருப்பார்கள். அதன்படி மொத்தம் 50 பேர் வருகை தர உள்ளனர். இவர்கள் வேளச்சேரி பகுதியில் மீட்பு பணியில் ஈடுபட உள்ளனர். இது வெள்ள மீட்பு பணியை இன்னும் விரைவாக்கும்.

தற்போதைய சூழலில் சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளுர் மாவட்டங்களில் தேசிய பேரிடர் மீட்பு படை, மாநில மீட்பு படையினர் என ஏற்கனவே 750 பேரிடர் மீட்பு படையினர் மீட்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் கூடுதலாக 2 தேசிய பேரிடர் மீட்பு குழு வீரர்கள் மீட்பு மற்றும் நிவாரண பணிகளில் ஈடுபட உள்ளனர்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+