‛ரொம்ப அவசரம்’.. பறந்து போன மெசேஜ்.. கூடுதலாக சென்னை விரையும் 2 என்டிஆர்எப் டீம்! ஏன் முக்கியம்?
சென்னை: மிக்ஜாம் புயலால் ஏற்பட்டுள்ள கனமழையால் பாதிக்கப்பட்டுள்ள மக்களை மீட்கவும், நிவாரண பணிகளை மேற்கொள்ளவும் சென்னைக்கு மேலும் 2 தேசிய பேரிடர் மீட்பு குழுவினர் விரைய உள்ளனர்.
மிக்ஜாம் புயல் காரணமாக சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளுர், செங்கல்பட்டு மாவட்டங்கள் அதிகமாக பாதிக்கப்பட்டுள்ளன. சென்னையில் நேற்று முன்தினம் முதல் நேற்று வரை மழை வெளுத்து வாங்கியது. இதனால் சென்னையில் குடியிருப்பு பகுதிகளை வெள்ளம் சூழ்ந்துள்ளது.

மிக்ஜாம் புயல் தற்போது ஆந்திராவில் கரையை கடக்க தொடங்கி உள்ளது. இந்நிலையில் தான் இன்று காலை முதல் சென்னையில் மழை என்பது இல்லை. இருப்பினும் பல சாலைகள் மற்றும் குடியிருப்பு பகுதிகளில் மழை வெள்ளம் இன்னும் வடியவில்லை.
இந்நிலையில் தான் மாநகராட்சி பணியாளர்கள், தீயணைப்பு வீரர்கள், மாநில பேரிடர் மீட்பு படையினர், தேசிய பேரிடர் மீட்பு படையினர் முழுவீச்சில் களமிறங்கி உள்ளனர். சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளுர் மாவட்டங்களில் இவர்கள் வெள்ள பாதிப்புள்ள பகுதிகளில் இருந்து தண்ணீர் அகற்றும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் வெள்ள பாதிப்புள்ள பகுதியில் வசிக்கும் மக்களுக்கு நிவாரண உதவிகளை வழங்கி வருகின்றனர்.
இந்நிலையில் தான் இன்று சென்னையில் மழை இல்லாத நிலையில் மீட்பு பணி மற்றும் வெள்ள நிவாரண பணி விரைவுப்படுத்தப்பட்டு வருகிறது. மீட்பு பணியில் கூடுதல் வீரர்கள், பணியாளர்கள் ஈடுபட்டால் விரைவாக சென்னையை இயல்பு நிலைக்கு கொண்டு வர முடியும். இதன் ஒருபகுதியாக தமிழகத்துக்கு கூடுதலாக 2 பேரிடர் மீட்பு குழுவினர் சென்னைக்கு வர உள்ளனர்.
இந்த குழுவினர் புதுச்சேரி மற்றும் அரக்கோணத்தில் சென்னை விரைகின்றனர். ஒரு மீட்பு குழுவில் தேசிய பேரிடர் மீட்பு படையை சேர்ந்த 25 வீரர்கள் இருப்பார்கள். அதன்படி மொத்தம் 50 பேர் வருகை தர உள்ளனர். இவர்கள் வேளச்சேரி பகுதியில் மீட்பு பணியில் ஈடுபட உள்ளனர். இது வெள்ள மீட்பு பணியை இன்னும் விரைவாக்கும்.
தற்போதைய சூழலில் சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளுர் மாவட்டங்களில் தேசிய பேரிடர் மீட்பு படை, மாநில மீட்பு படையினர் என ஏற்கனவே 750 பேரிடர் மீட்பு படையினர் மீட்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் கூடுதலாக 2 தேசிய பேரிடர் மீட்பு குழு வீரர்கள் மீட்பு மற்றும் நிவாரண பணிகளில் ஈடுபட உள்ளனர்.
-
ஜனநாயகன் ஓடிடி உரிமை ரத்து? விஜய்யால் மேலும் 120 கோடி ரூபாய் நஷ்டம்? கலக்கத்தில் கேவிஎன் நிறுவனம்! -
இந்திய கப்பல்கள் ஹார்முஸ் ஜலசந்தியை கடக்க அனுமதியா? ஈரான் மறுப்பு.. ஆனாலும் நடந்த ட்விஸ்ட் -
தேசிய ஜனநாயக கூட்டணிக்கு விஜய் வருகிறாரா? ஒரே போடாக போட்ட எடப்பாடி பழனிசாமி -
கையில் இவ்வளவு பெரிய.. ஆயுதத்தை வைத்துக்கொண்டுதான்.. ஈரான் இவ்வளவு நாள் சைலண்ட்டா இருந்ததா.. மாஸ் -
அம்பானி கொடுத்த பெரிய ஆஃபர்! சிஎஸ்கே கடைசியாக தான் சீனில் வந்தது.. சஞ்சு சாம்சன் தந்தை சொன்ன மேட்டர் -
41.5%, 36.2%, 13.6%.. திமுக, அதிமுக கணக்கை தலைகீழாக மாற்றும் 3வது நபர் இவர்தானா? உடைத்து சொன்ன சர்வே -
கேஸ் பிரச்சனை எப்போது சரியாகும்.. வெளியான குட்நியூஸ்.. மக்கள் அறிய வேண்டியவை -
தைலாபுரத்தில் 90 நிமிட ரகசியம்: சசிகலா ராமதாஸுக்கு தந்த க்ளூ.. தலைகீழாக மாறும் வட தென் மாவட்ட கணக்கு -
சிறகடிக்க ஆசை: மீனா சொன்ன குட் நியூஸ்.. சந்தோஷத்தில் அண்ணாமலை! சத்யா காதலுக்காக முத்து எடுக்கும் முடிவு -
கேஸ் தட்டுப்பாட்டுக்கு ‘குட்பை'.. ஹார்முஸ் ஜலசந்தியை கடக்கும் இந்திய கப்பல்கள்.. என்னென்ன பலன்? டேட்டா பாருங்க -
சுயநலமாக இருக்காதீங்க.. என்ன நடந்தது என்று தெரியாமல் இப்படி பேசாதீங்க.. நடிகர் ஸ்ரீமன் ஆதங்கம் -
இந்திய வரலாற்றில் முதல்முறை.. தலைமைத் தேர்தல் ஆணையரை நீக்கக் கோரி நாடாளுமன்றத்தில் நோட்டீஸ்!












Click it and Unblock the Notifications