ஒடிசாவில் பேய்மழை.. 6 மணிநேரம் கரையை கடந்த ‛டானா’ புயல்.. அடுத்து என்ன? வானிலை மையம் விளக்கம்
புவனேஸ்வர்: வங்கக்கடலில் உருவான டானா புயல் 6 மணிநேரம் தீவிர புயலாகவே ஒடிசாவில் கரையை கடந்துள்ளது. இந்த புயல் காரணமாக ஒடிசாவின் பல மாவட்டங்களில் மழை வெளுத்து வாங்கி வரும் நிலையில் இன்று பிற்பகலுக்குள் தீவிர புயல், புயலாக வலுவிழக்க உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
வங்கக்கடலில் கடந்த 21ம் தேதி காற்றழுத்த தாழ்வு பகுதி நிலவியது. இது நேற்று முன்தினம் புயலாக வலுப்பெற்றது. 'டானா' என பெயரிடப்பட்ட இந்த புயல் என்பது நேற்று தீவிர புயலாக மாறியது. இந்த புயலால் தமிழகத்துக்கு எந்த பாதிப்பும் ஏற்படாது என்று அறிவிக்கப்பட்டது.

இதற்கு புயல் ஒடிசா - மேற்கு வங்கம் நோக்கி நகர்ந்து செல்வதே காரணமாகும். அதோடு ‛டானா' புயல் ஒடிசாவின் புரி மற்றும் மேற்கு வங்க மாநிலத்தின் சாகர் தீவுகளுக்கு இடையே இன்று அதிகாலை கரையைக் கடக்க கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்து இருந்தது.
அதன்படி நள்ளிரவு 12.20 மணிக்கு டானா புயல் கரையை கடக்க தொடங்கியது. மணிக்கு 110 முதல் 120 கிலோமீட்டர் வேகத்தில் சூறைக்காற்றுடன் ‛டானா' புயல் கரையை கடக்க தொடங்கியது. சுமார் 6 மணிநேரத்துக்கு பிறகு இந்த புயல் இன்று அதிகாலையில் ஒடிசாவின் பிதர்கனிகா - தாம்ரா இடையே கரையை கடந்தது. ஒடிசாவின் தீவிர புயலாகவே கரையை கடந்துள்ளது. புயல் கரையை கடந்த கடற்கரை பகுதிகளில் 120 கிலோமீட்டர் வேகத்தில் சூறைக்காற்று வீசியதோடு, கனமழை கொட்டி வருவதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.
மேலும் வானிலை மையம் தரப்பில், ‛‛இந்த புயல் தொடர்ந்து வலுவிழக்க உள்ளது. தற்போது தீவிர புயலாக உள்ள ‛டானா' வலுவிழந்து புயலாக மாற உள்ளது. தற்போது ‛டானா' புயல் ஒடிசாவின் பாரதீப்பில் வடகிழக்கில் 60 கிலோமீட்டர் தொலைவிலும், ஒடிசாவின் தாம்ராவில் இருந்து தென்கிழக்கில் 20 கிலோமீட்டர் தொலைவிலும், மேற்கு வங்க மாநிலத்தின் சாகர் தீவுக்கு தென்மேற்கு திசையில் 150 கிலோமீட்டர் தொலைவில் நிலை கொண்டுள்ளது'' என தெரிவிக்கப்பட்டுள்ளது.
12 கிலோமீட்டர் வேகத்தில் இந்த புயல் என்பது நகர உள்ளது. இந்த புயல் காரணமாக ஒடிசாவில் கனமழை கொட்டி தீர்த்து வருகிறது. அதேபோல் அதிகபட்சமாக 2 அடி உயரத்துக்கு கடல் அலைகள் எழுந்தன. ஒடிசாவின் ஜகத்சிங்பூர், கேந்திரபாரா, பத்ரக் மற்றும் பால்சோட் மாவட்டங்களில் கனமழை கொட்டி தீர்த்து வருகிறது. குறிப்பாக பத்ரக் மாவட்டத்தின் பல இடங்களில் மரங்கள் முறிந்து விழுந்துள்ளன. மின்சாரங்கள் தடைப்பட்டுள்ளன.
ஒடிசாவில் இரவு மற்றும் அதிகாலை வேளைகளில் புயல் கரையை கடந்ததால் அங்குள்ள சேதங்கள் குறித்த விரிவான தகவல்கள் எதுவும் தற்போது வரை வெளியாகவில்லை. இதுபற்றி இன்னும் சற்று நேரத்தில் மாவட்ட நிர்வாகங்கள் சார்பில் அரசுக்கு முழு தகவல் அளிக்கப்பட உள்ளது. அதன்பிறகு சேதங்கள் குறித்த விபரம் என்பது வெளியாகும். இருப்பினும் அதிர்ஷ்டவசமாக ‛டானா' புயல் காரணமாக ஒடிசா மற்றும் மேற்கு வங்கத்தில் பெரிய அளவில் சேதம் ஏற்படவில்லை என்று தான் முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த புயல் காரணமாக ஒடிசாவில் 4 லட்சமும் பேர் பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டனர். 7,200 புயல் நிவாரண முகாம்களை ஒடிசா அரசு தொடங்கி அதில் மக்களை தங்க வைத்துள்ளது. அங்கு அவர்களுக்கு தேவையான உணவு, குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது. தற்போது புயல் கரையை கடந்துள்ளதாலும் மழை பெய்து வருகிறது. இதனால் அவர்கள் தொடர்ந்து நிவாரண முகாம்களிலேயே தங்க வைக்கப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
-
அதை சொல்ல யாருக்கும் அருகதை இல்லை.. வீட்டிலும், ஆபீஸிலும் இதுதான் நடக்குது செல்வராகவன் ஆதங்கம் -
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
தங்கத்தில் இனி 1 மில்லி கிராம் கூட ஏமாற்ற முடியாது! 7 மாவட்டத்துக்கு ஹேப்பி! அரசின் பாதுகாப்பு கவசம் -
வங்கி கணக்கில்.. அரசு அனுப்பிய ரூ.2000! உங்களுக்கு வந்துடுச்சா.. மொபைலிலேயே செக் செய்வது எப்படி? -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை! -
தேமுதிக 10 தொகுதிகளில் போட்டி.. 21 ஆண்டு வரலாற்றில் மிகக் குறைவான சீட்களில் நிற்பது இந்த முறைதான்! -
ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு குட் நியூஸ்.. பிஎம் ஸ்வநிதி திட்டத்தில் ₹50,000 கடன் கிடைக்குமா? -
வேளச்சேரி - பரங்கிமலை MTRS.. 80 நிமிடப் பயணம் வெறும் 15 நிமிடம்.. எஸ்ஜி சூர்யாவின் நிஜ அனுபவம் -
சர்க்கரை அட்டைதாரர்களுக்கு சூப்பர் வசதி… ரேஷன் கடைக்கு போறீங்களா? தமிழக அரசின் திடீர் உத்தரவு -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
தங்க வேட்டை.. உலக நாடுகளின் 'பக்கா' பிளான்.. மத்திய வங்கிகள் முண்டியடிப்பதன் பின்னணி என்ன?












Click it and Unblock the Notifications