சென்னையில் எங்கெங்கு எவ்வளவு மழை பெய்தது தெரியுமா? இதோ 24 மணி நேர ரிப்போர்ட்!

Subscribe to Oneindia Tamil

சென்னை: சென்னையில் நேற்றிரவு நள்ளிரவு முதல் ஒரு வழியாக மழை ஓய்ந்துவிட்டாலும் எங்கெங்கு எவ்வளவு மழை பெய்தது என்ற விவரம் வெளியாகியுள்ளது.

கடந்த 24 மணி நேரத்தில் சென்னை பெருங்குடியில் தான் அதிகபட்சமாக 45 செ.மீ. மழை பதிவாகியுள்ளது. அதேபோல் வட சென்னையில் அமைந்திருக்கும் ராயபுரத்தில் 13 செமீ மழையும் பதிவாகியுள்ளது.

Details of how much rain has fallen Chennai have been released

சென்னையில் மழை பதிவு மற்றும் இடங்களின் விவரம் பின் வருமாறு;

பெருங்குடி -45 செ.மீ.

பூந்தமல்லி -34 செ.மீ.

ஆவடி -28 செ.மீ.

காட்டுப்பாக்கம் -27 செ.மீ.

தாம்பரம் -24 செ.மீ.

மாமல்லபுரம் - 22 செ.மீ.

ஐஸ் ஹவுஸ் -22 செ.மீ.

ராயபுரம் -13 செ.மீ.

திரு.வி.க நகர் -21 செ.மீ.

கோடம்பாக்கம் -21 செ.மீ.

சோழிங்கநல்லூர் -19 செ.மீ.

மீனம்பாக்கம் -19 செ.மீ.

இது சென்னை மாநகரில் பெய்த மழையின் அளவு மட்டும். திருவள்ளூர் மாவட்டத்தில் இதை விட இன்னும் கூடுதலாக மழை பொழிவு பதிவாகியிருக்கக் கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

'மிக்ஜாம்' புயல் காரணமாக கடந்த இரண்டு நாட்களாக பெய்த கனமழையால் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்கள் புரட்டி எடுக்கப்பட்ட நிலையில் இன்று தான் மெல்ல இயல்பு நிலை திரும்பத் தொடங்கியுள்ளன. சென்னை மாநகராட்சி சார்பில் சீரமைப்பு பணிகள் போர்க்கால அடிப்படையில் நடைபெற்று வருகின்றன. இருப்பினும் சென்னையில் பழைய இயல்பு நிலை திரும்ப இன்னும் 2 நாட்களாவது ஆகக் கூடும் எனத் தெரிகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+