அடப்போங்கயா.. சென்னையில் வெளியே வந்து.. வானத்தை பார்த்தவர்களுக்கு ஷாக்.. இப்படி ஆகிடுச்சே!
சென்னை: தமிழ்நாட்டில் இந்த வருடம் புலி வருது கதையா புயல் வருது கதை மாறி உள்ளது. இந்த புயல் வருது.. அந்த புயல் வருது என்று வானிலை ஆய்வாளர்கள் கூற.. எந்த புயலும் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தாமல் டாட்டா காட்டி உள்ளது.
சமீபத்திய நாட்களாக இணையத்தில் வெற்றிமாறன் மீம் ஒன்று வைரலாகி வருகிறது. ஆடியோ லாஞ்சில் தொடக்கத்தில் கோபமாக கத்தும் வெற்றிமாறன் அடுத்த நொடியே அப்படியே மகிழ்ச்சியாக சிரித்தபடி பேசும் வைரல் மீம் அது. சென்னையின் வானிலை இப்போது அப்படித்தான் மாறி உள்ளது. பெரிய புயல் வரப்போகிறது.. எல்லாம் மாறப்போகிறது.. மழை அடித்து வெளுக்க போகிறது என்று அச்சத்தோடு இருந்தவர்களுக்கு.. பெரிய ஏமாற்றமே மிஞ்சியது.
வெற்றிமாறன் கோபமாக இருப்பது போல வந்த டிட்வா புயல்.. கொஞ்ச நேரத்தில் அப்படியே சிரித்தபடி.. ஒண்ணுமே இல்லை என்பது போல காணாமல் போய்விட்டது.

சென்னையில் மழை இல்லை
கடந்த 3 வாரங்களில் மட்டும் கிட்டத்தட்ட 3 புயல்கள் உருவாகிவிட்டன. நானும் ரவுடிதான் என்று வீராப்பாக வரும் புயல்கள்.. அப்படியே வரட்டாம் மாமே டுர்ர்ர் என்று கூறிவிட்டு எஸ்கேப் ஆகி விடுகிறது.
மொந்தா புயல் முதலில் உருவானது.. ஆஹா பெயரே இப்படியே இருக்கே.. என்று பயப்பட்டால்.. சுகர் வந்த சுனாமி போல எதுவும் செய்யாமல் காணாமல் போய்விட்டது மொந்தா புயல். அடுத்த வந்த சென்யார் புயலும்.. நடு பெஞ்சில் அமர்ந்து இருக்கும் அமைதியான மாணவன் போல.. எதுவும் செய்யாமல் மறைந்து. தோற்றம் எழுதுவதற்கு முன் மறைவு தேதி எழுதும் அளவிற்கு வேகமாக ஓடிவிட்டது.
இப்படிப்பட்ட நிலையில்தான் வங்கக்கடலில் தற்போது டிட்வா புயல் மையம் கொண்டு உள்ளது. இந்த புயலும் இப்போது எந்த பெரிய தாக்கத்தையும் ஏற்படுத்தாமல் அப்படியே காணாமல் போய்விட்டது. வங்கக்கடலில் தற்போது இந்த புயல் பெரிதாக தாக்கத்தை ஏற்படுத்தாமல் தாழ்வு மண்டலமாக வலுவிழந்து உள்ளது.
இந்த புயல் சென்னையில் இருந்து 250 கிமீ தூரத்தில் உள்ளது. ஆனால் வறண்ட காற்று காரணமாக புயல் வலிமை இழந்துவிட்டது. கடுமையான வறண்ட காற்று காரணமாக பெரிய தாக்கத்தை ஏற்படுத்தாமல் புயல் வலிமை இழந்துவிட்டது. ஆனாலும் டெல்டாவிற்கு.. அதாவது நாகப்பட்டினத்திற்கு 80 கிமீ தூரத்தில் இருப்பதால் டெல்டாவில் மழையை கடுமையாக கொடுத்து வருகிறது. இந்த புயல் காரணமாக டெல்டாவில்தான் கனமழை பெய்து வருகிறது.
காலையில் வானத்தை பார்த்தவர்களுக்கு ஷாக்
ஆனால் சென்னையில் பெரிதாக மழை இல்லை. அதிகாலையில் வெளியே வந்து வானத்தை பார்த்த போது சென்னையின் பெரும்பாலான பகுதிகளில் மேகமூட்டம் இருந்தது. சில இடங்களில் சாரல் மழைகூட பெய்தது.
ஆனால் நேரம் செல்ல செல்ல வானிலை மாறியது. அப்படியே சென்னையின் பெரும்பாலான பகுதிகளில் வெயில் அடிக்க தொடங்கியது.
புயல் காரணமாக ஏற்பட்ட காற்று பலமாக வீசியது ஒரு பக்கம் இருந்தாலும்.. குளிரான வானிலை நிலவி வந்தாலும்.. வெயில் திடீரென சென்னையின் பல இடங்களில் அடித்தது. சென்னையில், அரும்பாக்கம், கோயம்பேடு, காசிமேடு , ராயப்பேட்டை, கிண்டி, வடபழனி ,திருவொற்றியூர் , எண்ணூர், தேனாம்பேட்டை, அண்ணா சாலை, மெரினா கடற்கரை, சைதாப்பேட்டை, நுங்கம்பாக்கம், ஆகிய பகுதிகளில் இரவு மழை பெய்தது. ஆனால் பகல் நேரத்தில் அப்படியே வெயில் அடிக்க தொடங்கி உள்ளது. மழை வரும்.. வானிலை மாறும் என்று எதிர்பார்ப்போடு இருந்தவர்களுக்கு.. கடைசியில் ஏமாற்றமே மிஞ்சியது!












Click it and Unblock the Notifications