சென்னையில் 8 நாள்களுக்கு கனமழை! ஃபுல்பார்மில் என்று? இது அதுவாக இருக்குமோ!.. நார்வே சொன்ன குட் நியூஸ்
சென்னை: சென்னையில் 8 நாட்களுக்கு மழை பெய்யும் என நார்வே வானிலை மையம் கணித்துள்ளது.
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை கடந்த வாரம் தொடங்கிவிட்டதாக வானிலை மையம் அறிவித்தது. இந்த நிலையில் கடந்த சில தினங்களாகவே சென்னை உள்ளிட்ட தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் மழை பெய்து வருகிறது.

இந்த நிலையில் வடகிழக்கு பருவமழையானது வங்கக் கடலில் புயல் உருவாகும் போது தீவிரமடைய வாய்ப்பு உள்ளது. அந்த வகையில் தற்போது எந்த புயலும் உருவாகும் வகையில் தகவல்கள் ஏதும் இல்லை. நேற்று முதல் தமிழகத்தில் கனமழை பெய்யும் என வானிலை மையம் தெரிவித்திருந்தது.
அதன்படி செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர், மயிலாடுதுறை, நாகை, திருவாரூர், தஞ்சை, புதுக்கோட்டை, சிவகங்கை, கள்ளக்குறிச்சி, அரியலூர், பெரம்பலூர், கன்னியாகுமரி, நெல்லை ஆகிய 14 மாவட்டங்களில் கனமழை பெய்யும் என தகவல்கள் வெளியாகியுள்ளது.
இன்றைய தினம் கோவை மாவட்டத்தின் மலைப்பகுதிகள், நீலகிரி, கன்னியாகுமரி, நெல்லை, தென்காசி, தூத்துக்குடி, விருதுநகர், தேனி, மதுரை, திண்டுக்கல், ராமநாதபுரம், சிவகங்கை, புதுக்கோட்டை, தஞ்சை உள்ளிட்ட 14 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. நாளை முதல் நவம்பர் 3ஆம் தேதி வரை தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
அது போல் அக்டோபர் மாதம் வடகிழக்கு பருவமழை சுமாராகதான் இருக்கும் என சொல்லப்பட்டுள்ளது. எனவே வடகிழக்கு பருவமழை வரும் நவம்பர் மாதம் முதல் ஆக்டிவ்வில் இருக்கும். இந்த மழை தற்போது வரை இயல்பை விட 46 சதவீதம் குறைவாக பதிவாகியுள்ளதாகவே தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் சென்னையில் 8 நாட்களுக்கு மழை பெய்யும் என நார்வே வானிலை மையம் தெரிவித்துள்ளது.
அதன்படி அக்டோபர் 30, 31 ஆம் தேதி வானம் மேகமூட்டமும் வெயிலும் இருக்கும். இதைத் தொடர்ந்து நவம்பர் 1 ஆம் தேதி மதியமும் இரவும் மழை பெய்யும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அது போல் நவம்பர் 2ஆம் தேதி இரவு, மதியம், மாலை வேளைகளில் கனமழை பெய்ய வாய்ப்பிருப்பதாக தெரிகிறது. 3ஆம் தேதிதான் ஆட்டமே ஆரம்பிக்கிறது. மதிய வேளையில் கனமழை பெய்யும்.
அது போல் 4ஆம் தேதி காலை, மதியம், மாலை வேளைகளில் மிதமான மழை பெய்யும். நவம்பர் 5ஆம் தேதி லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது. நவம்பர் 6 ஆம் தேதி இரவும் காலையும் கனமழை வெளுக்க போகிறது. மாலை வேளையில் லேசான மழை பெய்யும். நவம்பர் மாதம் 7ஆம் தேதி இரவும் மதியமும் லேசான மழை பெய்யும். மாலை நேரத்தில் கனமழை பெய்யும். அது போல் 8ஆம் தேதி காலையும் மதியமும் ஒரு சில பகுதிகளில் மிதமான மழை பெய்யும். ஆக மொத்தம் நார்வே ரிப்போர்ட் படி 2ஆம் தேதி முதலே கனமழை பெய்ய வாய்ப்பிருக்கிறது. ஒரு வேளை ஏதாவது காற்றழுத்தம் உருவாகிறதா என தெரியவில்லை.
-
இன்று முதல் அடுத்த ஒரு வாரத்துக்கு மழை பிச்சு உதறும்..தென் தமிழகத்திற்கு அலர்ட் கொடுத்த வானிலை மையம் -
தங்கம் ரூ.3000, வெள்ளி ரூ.14000 சரிவு.. மீண்டும் பல்டி அடித்தால் மக்கள் கொண்டாட்டம்..! -
இடி, மின்னலுடன் கனமழை.. ஆரஞ்சு அலர்ட் கொடுத்த வானிலை மையம்! மக்களே உஷார் -
சூடுபிடிக்கும் தேர்தல் களத்தில்.. கொட்டி தீர்க்க போகுது மழை.. 2 நாட்களுக்கு குளுகுளு கிளைமேட் தான்! -
யூடியூபரை பார்க்க கோவை டூ சென்னை.. 4 பள்ளி மாணவிகள் செயல்.. பெற்றோர் அறிய வேண்டிய பாடம் -
2020ல் 10 லட்சத்திற்கு வாங்கியிருந்தால் இன்று1.7 கோடி ரூபாய்.. இந்தியன் வங்கி மேஜிக் -
விஜய் சேதுபதிக்கு கடன்! 25 லட்சத்தை வாரி வழங்கிய ஆதவ் அர்ஜுனா.. பிரமாண பத்திரத்தில் கசிந்த ரகசியம் -
திமுக சிங்கிள் மெஜாரிட்டி! அதிமுகவிற்கு எதிர்க்கட்சி அந்தஸ்தே கிடைக்காது? சர்வேவில் கவனிச்சீங்களா -
வடபழனி- பூந்தமல்லி மெட்ரோ ரயில் சேவை உறுதியானது.. மேற்கு சென்னைக்கு மக்களின் ஏக்கம் நிறைவேறுது -
சிறகடிக்க ஆசை: முத்து- மீனா சொன்ன மகிழ்ச்சி செய்தி! கேக் கொடுத்து கொண்டாட்டம்! மனம் மாறிய விஜயா! -
முடியாதுனு முடியாது.. கட் அண்ட் ரைட்டாக பேசிய அண்ணாமலை! விடிய விடிய பேசிய கோயல்! கடைசி சான்ஸ்? -
செங்கோட்டையன் வீட்டிற்கே கிளம்பி செல்லும் விஜய்.. கடுப்பான ஆதவ் அர்ஜுனா, புஸ்ஸி? என்ன நடக்குது?












Click it and Unblock the Notifications