தலைக்கு தில்லை பாருங்க! ஆறு போல் ஓடும் வெள்ள நீர்.. வெறும் டியூப் கட்டி அசால்ட்டாக நீந்திய நபர்
தூத்துக்குடி: ஆறு போல் இருக்கும் வெள்ள நீரில் வெறும் லாரி டியூப்பை கட்டிக் கொண்டு கரை சேர்ந்திருக்கும் நபரை பார்த்து அங்கு சூழ்ந்திருந்தவர்கள் ஆச்சரியப்பட்டனர்.
தூத்துக்குடி மாவட்டத்தில் கடந்த இரு தினங்களுக்கு முன்பு பெய்த பேய் மழையால் ஊரெங்கும் வெள்ளக்காடாக காட்சியளிக்கிறது. பல்வேறு கிராமங்களை தொடர்பு கொள்ள முடியாத சூழல் இருந்து வருகிறது.

பல்வேறு அணைகள், ஆறுகளில் இருந்து பெருவெள்ளம் ஊருக்குள் வந்துவிட்டது. இதனால் மக்கள் கழுத்தளவு தண்ணீரில் அவதிப்பட்டு வருகிறார்கள். இதனால் அவர்களின் வீட்டிலிருந்த தட்டுமுட்டு சாமான்கள், மளிகை சாமான்கள், அரிசி மூட்டைகள் எல்லாம் வெள்ள நீரில் அடித்துச் செல்லப்பட்டுவிட்டன.
இதனால் 3 நாட்களாக மின்சாரம் இல்லாமல் , குடிநீர், உணவு இல்லாமல் தத்தளித்து வருகிறார்கள். பல இடங்களில் மீட்பு குழுவினர் கூட நுழைய முடியாத நிலை உள்ளது. பல கிராமங்களை தொடர்பு கொள்ள முடியாத நிலை உள்ளது. இந்த நிலையில் தூத்துக்குடி மாவட்டத்தில் பேரூர் என்ற கிராமத்தை சுற்றி வெள்ள நீர் சூழ்ந்துள்ளது.
அந்த கிராமத்திற்கு செல்லும் பாதையில் காட்டாற்று வெள்ளம் ஆறு போல் ஓடி கொண்டிருக்கிறது. இதனால் அந்த ஊருக்குள் செல்ல முடியாத நிலை உள்ளது. அவர்கள் எப்படி இருக்கிறார்கள் என்பது கூட தெரியாத நிலையில் இருக்கிறது. இந்த நிலையில் அந்த ஆறு போல் தண்ணீர் தேங்கியுள்ள சுமார் 2 கி.மீ. தூரம் கொண்ட பகுதியை ஒருவர் கடந்து வந்துள்ளார்.
அவர் லாரி டயர் டியூப்பை கட்டிக் கொண்டு நீந்தியபடியே கரை சேர்ந்துள்ளார். அவர் பேரூரை சேர்ந்த காசி. அந்த கிராமத்தில் 1000 பேருக்கு மேல் இருக்கிறார்களாம். அவருக்கு உணவு, தண்ணீர் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள் இல்லாமல் தவித்து வருகிறார்கள் என்கிறார்.
மேலும் தான் மீன் பிடித்தொழிலில் ஈடுபட்டு வருவதாகவும் தெரிவித்தார் காசி. அவருடைய ஊர் மக்கள் எல்லாரும் நலமாக இருக்கிறார்கள் என்றார். மேலும் அவருடைய ஊருக்கு வர சாதாரண படகு போதாது என்றும் மோட்டார் படகு இருந்தால் அங்கிருக்கும் மக்களை மீட்டெடுக்கலாம் என்கிறார். அவர் 2 கி.மீ. தூரம் நீந்தியே கரைக்கு வந்ததும் பயங்கரமாக மூச்சு வாங்கியது.
-
சீனியர் பெண்ணுடன் உறவில் இருக்கும் இஷான் கிஷன்.. அகமதாபாத் மைதானத்தில் காதலை அறிவித்த பாக்கெட் டைனமோ -
பிரதமர் மோடி ராஜினாமா செய்ய நேரிடும்.. எனக்குத் தெரிந்த தகவல்களை சொன்னால்..சுப்பிரமணியன் சுவாமி பதிவு -
EXCLUSIVE: வட இந்தியர்களுக்கு வேலையில்லை.. இனி இட்லி, சப்பாத்தி மட்டும் தான்! குமுறும் ஓட்டல் உரிமையாளர்கள்.! -
ஒரு குண்டு கூட வீசாமல்.. அமெரிக்காவை காலி செய்யும் சீனாவின் "ரகசிய" ஆயுதம்.. ஆட்டம் மொத்தமா மாறுது -
கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு.. கோவை அன்னபூர்ணா ஹோட்டலில் குறைக்கப்பட்ட உணவுகள் -
வருது "செயற்கை" தங்கம்.. கோல்ட் விலை தாறுமாறாக சரிய இதுதான் காரணமா? வெளியான மிக முக்கிய தகவல் -
7 பொதுத்தொகுதி + 2 தனித்தொகுதி.. அதிமுக கூட்டணியில் டிடிவிக்கு ஒதுக்கப்படும் தொகுதிகள் இதுதான்! -
தப்பா எடுத்துக்காதீங்க.. விஜயிடம் சொன்ன ராகுல்.. பாஜக பக்கம் தவெக போக.. இப்படி ஒரு ஷாக் காரணமா? -
29 + 9.. அதிமுக கூட்டணியில் பாஜக - அமமுகவுக்கு எத்தனை சீட்? இறங்கி வராத எடப்பாடி பழனிச்சாமி -
உலக நாடுகளுக்கே மிகப்பெரிய ஆபத்து.. நிலைமை கையை மீறி போகுது.. ரஷ்யா புதின் தந்த 'ஷாக்' வார்னிங் -
அமெரிக்காவை அசரடித்த அம்பானி.. ரூ.27 லட்சம் கோடி முதலீடு செய்யும் ரிலையன்ஸ்.. டிரம்ப் அறிவிப்பு -
பச்சை, வெள்ளை, சர்க்கரை ரேஷன் அட்டையில் அரசு சலுகைகள்! 3 மாதம் பொருட்கள் வாங்காவிட்டால் கார்டு கட்?












Click it and Unblock the Notifications