அடுத்த ஆபத்து.. புழல் ஏரியின் கரை உடையும் அபாயம்.. அச்சத்தில் திருவள்ளூர் மக்கள்
சென்னை: தொடர் கனமழையால் நிரம்பி வழியும் புழல் ஏரியின் கரை உடையும் அபாயம் ஏற்பட்டுள்ளது. புழல் ஏரியின் சுற்றுச்சுவரின் ஒரு பகுதி சாலையில் சரிந்து விழுந்துள்ளது. சுற்றுச்சுவர் சரிந்து விழுந்த சாலையும் சேதமடைந்துள்ளதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.
மிக்ஜாம் புயல் கொடுத்த அதிகனமழையால் சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில் உள்ள ஏரி குளங்கள் அனைத்தும் நிரம்பி வழிகின்றன. சென்னைக்கு குடிநீர் வழங்கும் புழல் ஏரியும் முழுவதுமாக நிரம்பியுள்ளது. கடந்த நான்காம் தேதி சென்னையை புயல் நெருங்கிய போது 8,500 கன அடி நீர் ஏரிக்கு வந்ததால் அன்று மதியமே 4000 கன அடியாக ஏரியிலிருந்து உபரி நீர் வெளியேற்றப்பட்டது.

தொடர் கனமழையால் புழல் ஏரிக்கு வந்த நீர் வரத்து அதிகரித்துக் கொண்டே சென்றது. இதனால் அந்த ஏரியின் உபரி நீர் 7000 கன அடியாக வெளியேற்றப்பட்டுள்ளது. இப்படி இருக்கும் நிலையில் ஏரி மீது வரும் பொது மக்களை தடுப்பதற்கு எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாமல் உள்ளதால் வெள்ள பாதிப்பில் சிக்கி தவிக்கும் பகுதி மக்கள் பெரும் அச்சத்தில் உள்ளனர்.
புழல் ஏரியின் கரை உடைந்தால் திருவள்ளூர் மாவட்ட பகுதிகள் அனைத்தும் துண்டிக்கப்படும் அபாயம் இருப்பதாக கூறப்படுகிறது. ஏற்கனவே சுற்றுசுவர் உடைந்து சாலையும் சேதமடைந்துள்ள நிலையில் தற்போது கரை உடையும் நிலையில் உள்ளதாக பொதுமக்கள் அச்சம் அடைந்துள்ளனர். கரை உடைந்தால் வெள்ளநீர் குடியிருப்புகளை சூழும் என்பது புழல் ஏரியின் சுற்றுவட்டார பகுதிகளில் வசிக்கும் மக்கள் அச்சம் தெரிவித்துள்ளனர்.
மழை வெள்ளம் தேங்கியுள்ள பல பகுதிகளில் குடியிருப்பாளர்கள் குடிநீர் கூட கிடைக்காமல் தவித்து வருகின்றனர். புழல் ஏரி கரை உடையும் நிலையில் உள்ளதால் நீர்வளத் துறை அதிகாரிகள் போர்க்கால நடவடிக்கை எடுத்து பாதுகாக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.
-
2020ல் 10 லட்சத்திற்கு வாங்கியிருந்தால் இன்று1.7 கோடி ரூபாய்.. இந்தியன் வங்கி மேஜிக் -
விஜய் சேதுபதிக்கு கடன்! 25 லட்சத்தை வாரி வழங்கிய ஆதவ் அர்ஜுனா.. பிரமாண பத்திரத்தில் கசிந்த ரகசியம் -
மூட்டை மூட்டையாக போய் தங்கத்தை அடகு வைக்கும் மக்கள்.. வெளியான ஷாக் தகவல்.. இப்படி ஒரு காரணமா? -
பத்திரப்பதிவில் இன்று முதல் புதிய ரூல்ஸ்! அதிகரிக்கும் சொத்து பதிவு செலவு! கலங்கும் நடுத்தர மக்கள் -
தமிழ் புத்தாண்டு ராசி பலன்: அஷ்டமசனியில் அதிர்ஷ்டத்தை அள்ளும் சிம்ம ராசி.. காதலில் வெற்றி கன்ஃபார்ம் -
சென்னையில் ரூ.36 கோடி கோடிக்கு வீடு வாங்கிய நகை கடைக்காரர்.. அதுவும் இந்த ஏரியாவில்..!! -
33 கேள்விகளுடன் ஒவ்வொரு வீட்டிற்கும்.. நேரடியாகவே வரும் அதிகாரிகள்.. நாம் என்ன செய்ய வேண்டும்? -
திமுக சிங்கிள் மெஜாரிட்டி! அதிமுகவிற்கு எதிர்க்கட்சி அந்தஸ்தே கிடைக்காது? சர்வேவில் கவனிச்சீங்களா -
எதிர்நீச்சல் சீரியல் ராணா யார் தெரியுமா? இத்தனை படங்களில் நடித்திருக்கிறாரா? இனி தான் சம்பவமே இருக்கு -
சென்னை சென்ட்ரல் -கோவை வந்தே பாரத்... தங்க முட்டை போடும் வாத்து.. ஒப்புக்கொண்ட ரயில்வே? -
ஏப்ரல் 1ம் தேதியான இன்று சம்பளம், கடன் எதுவுமே சாத்தியமில்லை... மக்கள் அறிய வேண்டிய உண்மை -
வருமான வரி படிவம் வெளியீடு.. மாத சம்பளம் வாங்குவோர், சிறு வணிகர்கள்.. அறிய வேண்டியவை












Click it and Unblock the Notifications