மெல்ல மாறும் வானிலை! மழையும் குளிரும் இல்லை! அப்போ தமிழகத்தில் கிளைமேட் எப்படி இருக்கும்! புது தகவல்
சென்னை: தமிழ்நாட்டில் மழை சீசன் முடிந்துவிட்ட நிலையில், மாநிலத்தில் கிளைமேட் மெல்ல மாறி வருகிறது. மாநிலத்தில் ஓரிரு இடங்களில் குளிர் இருந்தாலும் பெரும்பாலான இடங்களில் மதிய நேரத்தில் வெயில் தான் இருக்கிறது. இதற்கிடையே வரும் நாட்களில் தமிழகத்தில் வானிலை எப்படி இருக்கும் என்பது குறித்து வானிலை மையம் சில முக்கிய தகவல்களைப் பகிர்ந்துள்ளது.
தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை சமயத்தில் நல்ல மழை இருந்தது. பெரும்பாலான நீர்நிலைகள் நல்ல நிலைக்கு வந்திருந்தது. மழை சீசன் முடிந்தவுடன் குளிரின் தாக்கம் அதிகமாகவே இருந்தது.

இதற்கிடையே இப்போது குளிரும் குறைந்துவிட்ட நிலையில், மெல்ல வெயில் அதிகரிக்க ஆரம்பித்துள்ளது. கோடைக் காலம் அளவுக்கு வெப்பம் அதிகரிக்கவில்லை என்ற போதிலும் கணிசமாக வெப்பம் அதிகரித்தே வருகிறது.
கடந்த 24 மணி நேரத்தில் தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவியது. இன்று காலை சென்னை மற்றும் புறநகர்ப் பகுதிகளில் லேசான பனிமூட்டம் நிலவியது. கடந்த 24 மணி நேரத்தில் தமிழகத்தில் பெரியளவில் எங்கும் மழை பதிவாகவில்லை.
வானிலை மையம்:
வரும் நாட்களில் நிலவும் வானிலை தொடர்பாக வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்,"இன்றும் நாளையும் தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் பொதுவாக வறண்ட வானிலை நிலவக்கூடும். காலை வேளையில் பொதுவாக லேசான பனிமூட்டம் காணப்படும். பிப்ரவரி 13 முதல் 17 வரை தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் பொதுவாக வறண்ட வானிலை நிலவக்கூடும்.
சென்னை கிளைமேட்:
சென்னை மற்றும் புறநகர்ப் பகுதிகளைப் பொறுத்தவரை இன்று (11-02-2025), வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். காலை வேளையில் பொதுவாக லேசான பனிமூட்டம் காணப்படும் அதிகபட்ச வெப்பநிலை 32-33° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 22° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும். நாளை (12-02-2025); வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். காலை வேளையில் பொதுவாக லேசான பனிமூட்டம் காணப்படும் அதிகபட்ச வெப்பநிலை 32-33° செல்சியஸை ஒட்டியும் குறைந்தபட்ச வெப்பநிலை 22° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதேநேரம் மீனவர்களுக்கான எச்சரிக்கை ஏதுமில்லை என்றும் கூறப்பட்டுள்ளது. வரும் நாட்களில் கிளைமேட் இப்படி சிறப்பாகவே இருக்கும் வானிலை மையம் அறிவித்துள்ள நிலையில், அதற்கேற்ப மக்கள் பிளான் செய்து கொள்ளலாம்.












Click it and Unblock the Notifications