ரெட் அலர்ட்..சென்னையை விடுங்க! கனமழையால் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிப்பு! எங்கே தெரியுமா?

Subscribe to Oneindia Tamil

புதுச்சேரி: தமிழகத்தில் சென்னையை தொடர்ந்து புதுச்சேரி மற்றும் காரைக்காலில் கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதால், நாளை புதுச்சேரி மற்றும் காரைக்காலில் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகள், தனியார் பள்ளிகள், கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவித்து உத்தரவிட்டிருக்கிறார் புதுச்சேரி கல்வித்துறை அமைச்சர் நமச்சிவாயம்.

தமிழகத்தில் நாளை வடகிழக்கு பருவமழை தொடங்குகிறது. இதன் காரணமாக ஏற்கனவே சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், கோவை, மதுரை, திண்டுக்கல் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் கடந்த சில நாட்களாகவே நல்ல மழை பெய்து வருகிறது.

tamil nadu rains weather puducherry

இந்த நிலையில் தென்கிழக்கு வங்கக்கடல் பகுதியில் காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகியுள்ளது. இதன் காரணமாக தமிழக மற்றும் புதுச்சேரியில் தொடர் கனமழை பெய்து வருகிறது.

குறிப்பாக நாளை தமிழகத்தில் சென்னை திருவள்ளூர் காஞ்சிபுரம் உள்ளிட்ட மாவட்டங்களில் நாளை கனமழையும் நாளை மறுநாள் அதிக கன மழை எச்சரிக்கை கொடுக்கப்பட்டிருக்கிறது. இதன் காரணமாக சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு மாவட்டங்களில் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டிருக்கிறது. மேலும் பொதுமக்கள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டு இருக்கிறது.

தமிழக அரசின் சார்பில் மழை காரணமாக பல்வேறு மீட்பு நடவடிக்கைகளுக்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு இருக்கிறது. இதேபோல புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளிலும் கன மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை கொடுத்துள்ளது. இதன் காரணமாக நாளை புதுச்சேரி காரைக்கால் பகுதிகளில் உள்ள அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகள் கல்லூரிகளுக்கு விடுமுறை அளித்து புதுச்சேரி கல்வித்துறை அமைச்சர் நமச்சிவாயம் உத்தரவிட்டுள்ளார்.

மேலும் நாளை கனமழை பெய்யும் என்பதால் புதுச்சேரி காரைக்கால் மாவட்ட நிர்வாகங்கள் பல்வேறு பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. ஏற்கனவே தமிழகத்தில் கனமழை எச்சரிக்கை காரணமாக சென்னை திருவள்ளூர் காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்களில் நாளை பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அளித்து முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். மேலும் அரசு அதிகாரிகளுடன் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து ஆலோசனை மேற்கொண்டார்.

இதேபோல், புதுச்சேரியிலும் மழைக்கால முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து அம்மாநில ஆளுநர் ரங்கசாமி அதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொண்டார். மழைக் காலத்தில் தண்ணீர் தேங்கும் வகையில் இருக்கும் தாழ்வான பகுதிகளை முன்னரே கண்டறிய வேண்டும், வெள்ளம் பாதிப்பு ஏற்படும் பகுதிகளில் மீட்பு பணிகளை துரிதமாக மேற்கொள்ள வேண்டும். பொது மக்களுக்கு உடனடியாக தேவையான நிவாரண உதவிகளை செய்ய வேண்டும், தங்கும் முகாம்கள் மருத்துவ முகாம்களை தயார் நிலையில் வைக்க வேண்டும் என உத்தரவிட்டிருக்கிறார்.

மேலும் மழைக் காலங்களில் தீயணைப்புத் துறையினர், வருவாய்த்துறையினர், மருத்துவ குழுவினர் 24 மணி நேரமும் தீவிர கண்காணிப்பில் இருக்க வேண்டும் என உத்தரவிடப்பட்டு இருக்கிறது. மேலும், மழைக் காலங்களில் தாழ்வான பகுதிகளில் தண்ணீர் தேங்கினால் உடனடியாக அவற்றை அகற்றும் வகையில் மின் மோட்டார்கள், மரங்கள் விழுந்தால் அவற்றை அகற்றுவதற்காக மரம் வெட்டும் இயந்திரங்கள், போக்குவரத்து வாகனங்களை தயார் செய்யும் அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. மேலும் தேவைப்பட்டால் தேசிய பேரிடர் மீட்பு குழுவினரையும் வரவழைக்க திட்டமிடப்பட்டுள்ளதாக அதிகாரிகள் கூறியுள்ளனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+