வங்ககடலில் வலுப்பெறும் பூதம்! கனமழையால் இன்று பள்ளிகளுக்கு லீவு! எந்தெந்த மாவட்டங்கள்?
சென்னை: தமிழகத்தில் இன்று திருவாரூர், நாகை, மயிலாடுதுறை மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு மாவட்ட ஆட்சியர்கள் விடுமுறை அறிவித்துள்ளனர். தஞ்சையில் இன்று பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். இதேபோன்று காரைக்காலிலும் இன்று பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் இன்று அதிகனமழைக்கான ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டிருப்பதால் முன்னெச்சரிக்கையாக விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
வங்கக்கடலில் உருவாகிய காற்றழுத்த தாழ்வு மண்டலம், இன்று தீவிர காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவடைகிறது. இதன் காரணமாக, தமிழகத்துக்கு இன்றும் நாளையும் அதிகனமழைக்கான ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்படுவதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ளது. கடந்த 2 நாட்களாக தமிழகத்தில் பெரிய அளவில் மழை பெய்யவில்லை. ஒருசில இடங்களில் லேசான மழை மட்டுமே பெய்தது. இந்த சூழலில், தென்கிழக்கு வங்கக் கடல் பகுதியில் கடந்த 22 ஆம் தேதி புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி ஒன்று உருவானது. இந்த காற்றழுத்த தாழ்வு பகுதி, நேற்று காலை 8.30 மணியளவில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றது.
இது, வடமேற்கு திசையில் நகர்ந்து, இன்று (செவ்வாய்க்கிழமை) தீவிர காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறும் என்றும், இது அடுத்த 2 நாட்களில் வடமேற்கு திசையில் தமிழகம் - இலங்கை கடற்கரையை இது நோக்கி நகரும் என்றும் வானிலை மையம் தெரிவித்துள்ளது. இதன் காரணமாக இன்று டெல்டா மாவட்டங்களான, தஞ்சை, திருவாரூர், நாகை , மயிலாடுதுறை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் அதிகனமழையும், ஒரு சில இடங்களில் கனமழை முதல் மிக கனமழையும் பெய்யும் என்று வானிலை மையம் ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுத்தது.
இதன் காரணமாக கனமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக திருவாரூர் மாவட்டத்தில் இன்று பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இதேபோன்று மயிலாடுதுறை மற்றும் நாகை மாவட்டத்திலும் இன்று பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. தஞ்சையில் இன்று பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். இதேபோல் காரைக்காலிலும் இன்று கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக கூறப்பட்டதால், காரைக்காலிலும் இன்று பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications