புரட்டி போட்ட மழை! இன்று 4 மாவட்டங்களில் பள்ளிகளுக்கு லீவ்.. விவரம் உள்ளே
நெல்லை: கனமழை எச்சரிக்கையை தொடர்ந்து இன்று செவ்வாய்க்கிழமையும் நெல்லை மற்றும் தூத்துக்குடி மாவட்டத்தில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர்கள் அறிவிப்பு வெளியிட்டுள்ளனர். இதேபோல் தென்காசி, குமரியில் பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
நெல்லை, தென்காசி, தூத்துக்குடி, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் நேற்று முன்தினம் அதிகாலை முதல் விடாமல் பெய்த மழையால் நான்கு மாவட்டங்களும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. குறிப்பாக நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்கள் வெள்ளத்தில் மிதக்கின்றன. குறிப்பாக தாமிபரணி ஆற்றில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுவதால் அதன் கரையோர பகுதிகள் முழுவதும் வெள்ளத்தில் மூழ்கியுள்ளது.

பல இடங்களிலும் சாலைகளிலும் வெள்ளம் சூழ்ந்துள்ளதால் தனித்தீவு போல கிராமங்கள் காட்சி அளிக்கின்றன. இந்த் நிலயில், அங்கு நாளையும் செவ்வாய்க்கிழமை கனமழை தொடரும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. இந்த நிலையில், இன்று செவ்வாய்க்கிழமை நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை விடப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. கனமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர்கள் அறிவிபு வெளியிட்டுள்ளனர். இதேபோல் தென்காசி மற்றும் குமரி மாவட்டத்தில் பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை விடப்பட்டுள்ளது. முதலில் தென்காசி மாவட்டத்தில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை இல்லை என்று அறிவிக்கபட்டிருந்தது. பின்னர் வானிலை மையம் தென்காசி மாவட்டத்தில் மழை பெய்யும் என்று தெரிவித்ததையடுத்து முடிவை மாற்றியுள்ளது.












Click it and Unblock the Notifications