அடுத்த மூன்று நாட்கள்.. கொங்கு மண்டலம் குளிரப் போகுது.. கொட்டித் தீர்க்க போகுது மழை
கோவை: கோடை காலம் முடிந்தும், தமிழ்நாட்டில் வெயிலின் தாக்கம் அதிகமாகவே இருந்தது. கடந்த சில நாட்களாக பெய்து வரும் மழையால் வெயிலின் தாக்கம் சற்றே குறைந்துள்ளது. இந்நிலையில் கோவை உள்ளிட்ட கொங்கு மண்டலம் முழுவதும், அடுத்த மூன்று நாட்களுக்கு கனமழை கொட்டப்போவதாக கோவை வெதர்மேன் அறிவித்துள்ளார்.
தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்து வருகிறது. பொதுவாக அக்டோபர் மாதம் தொடங்கி டிசம்பர் மாதம் வரை வடகிழக்கு பருவமழை காலகட்டம். நவம்பர் மாதத்தில் தான் பருவமழை தீவிரமடையும். ஆனால், இந்தாண்டு அக்டோபர் மாதம் முதலே வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ளது.

தமிழ்நாடு முழுவதுமே, கடந்த சில நாட்களாக பரவலாக ஆங்காங்கே மழை பெய்து கொண்டிருக்கிறது. அடுத்த ஒரு வாரத்துக்கு, தமிழ்நாட்டில் மழை பெய்வதற்கான வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. முக்கியமாக வங்கக் கடலில் உருவாகியுள்ள வளிமண்டல கீழடுக்கு சுழற்சி மற்றும் அரபிக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு மையம் காரணமாக சென்னையிலும் அடுத்த ஒரு வாரத்துக்கு மிதமான மழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியிருந்தது.
தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜானும் இதை உறுதிபடுத்தியிருந்தார். இதுகுறித்து பிரதீப் ஜான் தன் எக்ஸ் தள பக்கத்தில், சென்னையில் தற்போது லேசான மழை பெய்து வருகிறது. அடுத்த 3-4 நாட்களில் கனமழை பெய்யவுள்ளது. பொதுவாக டிசம்பர் மாதத்தில் தான் சென்னையில் கனமழை பெய்யும்.
இந்தமுறை அதே மாதிரியான மழை அக்டோபர் மாதமே மழை பெய்ய வாய்ப்புள்ளது அதாவது வருகிற 14ம் தேதி கனமழை பெய்ய அதிக வாய்ப்புள்ளது. என கூறியுள்ளார். இதனால் அரசு உடனடியாக முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கூறி வருகின்றனர்.
அதேபோல, தமிழ்நாட்டின் உள் மாவட்டங்களிலும் பரவலாக மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. இந்த தொடர் மழையால் மக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். விடுமுறை நாட்களை கொண்டாடுவதற்கு சிறந்த க்ளைமேட் இருப்பதாக மக்கள் கூறி வருகின்றனர்.
முக்கியமாக கோவையில் கடந்த சில நாட்களாகவே விட்டு விட்டு மழை பெய்து கொண்டிருக்கிறது. இதனால் வெயிலின் தாக்கம் குறைந்து சில்லென்ற கிளைமேட் நிலவி வருகிறது. இந்த கிளைமேட் மேலும் சில நாட்களுக்கு தொடர உள்ளதாக மகிழ்ச்சியான செய்தி ஒன்று வெளியாகியுள்ளது.
இதுகுறித்து கோவை வெதர்மேன் என்றழைக்கப்படும் சந்தோஷ் க்ரிஷ் வானிலை முன்னறிவிப்பு வெளியிட்டுள்ளார். அதில், தென்மேற்கு வங்க கடலில் இலங்கைக்கும் தமிழகத்திற்கும் இடையே மன்னார் வளைகுடா பகுதியில் புதிய காற்று சுழற்சி ஒன்று உருவாகியுள்ளது.
இதன் காரணமாக இன்றிலிருந்து (11.10.2024), வருகிற செவ்வாய்க்கிழமை (15.10.2024) வரை தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களுக்கும் மழை வாய்ப்பு அதிகரிக்கும். குறிப்பாக கொங்கு மண்டலத்தில் இன்று முதல் மழையின் தாக்கம் படிப்படியாக அதிகரிக்கும். சனிக்கிழமை, ஞாயிற்றுக்கிழமை மற்றும் திங்கள்கிழமை ஆகிய மூன்று தினங்களுக்கு மிக கனமழை வாய்ப்பும் உண்டு.
அக்டோபர் 16 மற்றும் 17 தேதியிலிருந்து கொங்கு மண்டலத்தின் மழை வாய்ப்பு குறைய தொடங்கும். மீண்டும் இந்த மாத இறுதியில் அல்லது நவம்பர் முதல் வாரத்தில் மழைக்கான வாய்ப்பு உள்ளது என்று கூறப்பட்டுள்ளது.
-
தேசிய ஜனநாயக கூட்டணியில் விஜய்.. நெருங்கும் பேச்சுவார்த்தை.. ஒரே வார்த்தையில் உடைத்த சரத்குமார் -
சீனியர் பெண்ணுடன் உறவில் இருக்கும் இஷான் கிஷன்.. அகமதாபாத் மைதானத்தில் காதலை அறிவித்த பாக்கெட் டைனமோ -
பிரதமர் மோடி ராஜினாமா செய்ய நேரிடும்.. எனக்குத் தெரிந்த தகவல்களை சொன்னால்..சுப்பிரமணியன் சுவாமி பதிவு -
EXCLUSIVE: வட இந்தியர்களுக்கு வேலையில்லை.. இனி இட்லி, சப்பாத்தி மட்டும் தான்! குமுறும் ஓட்டல் உரிமையாளர்கள்.! -
ஒரு குண்டு கூட வீசாமல்.. அமெரிக்காவை காலி செய்யும் சீனாவின் "ரகசிய" ஆயுதம்.. ஆட்டம் மொத்தமா மாறுது -
கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு.. கோவை அன்னபூர்ணா ஹோட்டலில் குறைக்கப்பட்ட உணவுகள் -
வருது "செயற்கை" தங்கம்.. கோல்ட் விலை தாறுமாறாக சரிய இதுதான் காரணமா? வெளியான மிக முக்கிய தகவல் -
7 பொதுத்தொகுதி + 2 தனித்தொகுதி.. அதிமுக கூட்டணியில் டிடிவிக்கு ஒதுக்கப்படும் தொகுதிகள் இதுதான்! -
தப்பா எடுத்துக்காதீங்க.. விஜயிடம் சொன்ன ராகுல்.. பாஜக பக்கம் தவெக போக.. இப்படி ஒரு ஷாக் காரணமா? -
29 + 9.. அதிமுக கூட்டணியில் பாஜக - அமமுகவுக்கு எத்தனை சீட்? இறங்கி வராத எடப்பாடி பழனிச்சாமி -
உலக நாடுகளுக்கே மிகப்பெரிய ஆபத்து.. நிலைமை கையை மீறி போகுது.. ரஷ்யா புதின் தந்த 'ஷாக்' வார்னிங் -
அமெரிக்காவை அசரடித்த அம்பானி.. ரூ.27 லட்சம் கோடி முதலீடு செய்யும் ரிலையன்ஸ்.. டிரம்ப் அறிவிப்பு












Click it and Unblock the Notifications