நெல்லை, தென்காசி உள்பட 13 மாவட்டங்கள்.. வெளுத்து வாங்க போகுதாம் மழை! வானிலை மையம் அலர்ட்

Subscribe to Oneindia Tamil

சென்னை: நெல்லை, தென்காசி உள்பட 13 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தேனி, பெரம்பலூர், திருச்சி, சேலம், திருப்பூர் உள்ளிட்ட மாவட்டங்களில் ஒருசில இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது. சென்னையை பொறுத்தவரை நகரின் ஒருசில இடங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளது என்று வானிலை மையம் தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் கடந்த சில வாரங்களாகவே பரவலாக மழை பெய்து வருகிறது. குறிப்பாக மேற்கு தொடர்ச்சி மலையோர மாவட்டங்களில் நல்ல மழை பெய்து வருகிறது. நேற்று நீலகிரி மாவட்டம் ஊட்டியில் இடைவிடாமல் மூன்று மணி நேரம் மழை வெளுத்து வாங்கியது. இதனால், பல்வேறு இடங்களில் மழை தேங்கியது.

weather rain tamil nadu


13 மாவட்டங்கள்: தலைநகர் சென்னையை பொறுத்தவரை வெயிலின் தாக்கம் கொடூரமாக உள்ளது. கடந்த வாரத்தில் ஓரளவு மழை பெய்தது. ஆனால், கடந்த சில நாட்களாக வெயிலின் தாக்கம் அதிகமாக உள்ளது. கோடை காலத்தை போல வெயிலின் தீவிரம் உள்ளது. இதனால், மக்கள் வீடுகளை விட்டு வெளியே வந்தாலே வியர்வையில் குளிக்கும் அளவுக்கு வெயில் கடுமையாக உள்ளது. எனினும், தேனி, பெரம்பலூர், திருச்சி, சேலம், திருப்பூர், கோவை உள்ளிட்ட பகுதிகளில் ஓரளவு மழை பெய்து வருகிறது.

இந்த நிலையில், இன்று தமிழகத்தில் 13 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியதாவது:- தென்னிந்தியப் பகுதிகளின் மேல் நிலவும் வளி மண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் மழை பெய்ய வாய்ப்பு உள்ளது.

கனமழைக்கு வாய்ப்பு: இன்று தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். கோவை மாவட்ட மலைப்பகுதிகள், கன்னியாகுமரி, நெல்லை, தென்காசி, தேனி, திண்டுக்கல், திருப்பூர், நீலகிரி, ஈரோடு, தர்மபுரி, கிருஷ்ணகிரி, சேலம் மற்றும் நாமக்கல் என 13 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

நாளை கிளைமேட் எப்படி?: நாளை தமிழ்நாட்டில் ஒருசில இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். கோவை மாவட்ட மலைப்பகுதிகள், நீலகிரி, திருப்பூர், தேனி மற்றும் திண்டுக்கல் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யக்கூடும்.சென்னையை பொறுத்தவரை வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும்.

சென்னையில் மழைக்கு வாய்ப்பு: நகரின் ஒருசில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசான அல்லது மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்ப நிலை 35-36 டிகிரி செல்சியஸ் வரை இருக்கும். குறைந்தபட்ச வெப்ப நிலை 27-28 டிகிரி செல்சியஸ் ஆக இருக்க கூடும்.

மீனவர்களுக்கான எச்சரிக்கையை பொறுத்தவரை தென்மேற்கு, மத்திய மேற்கு வங்கக்கடல் பகுதிகள், வடமேற்கு மற்றும் அதனை ஒட்டிய வடகிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் இன்று சூறாவளிக்காற்று மணிக்கு 35 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.

மீனவர்களுக்கு எச்சரிக்கை: இதேபோல் நாளை முதல் 23-ந்தேதி வரை தென்மேற்கு, மத்திய மேற்கு வங்கக்கடல் பகுதிகள், வடக்கு ஆந்திர கடலோரப்பகுதிகளுக்கு அப்பால் உள்ள வடமேற்கு வங்கக்கடல் பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய வடகிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 35 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும். எனவே இந்த பகுதிகளுக்கு மேற்கண்ட நாட்களில் மீனவர்கள் மீன்பிடிக்க செல்லவேண்டாம் என்று அறிவுறுத்தப்படுகிறது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+