சென்னையில் கொட்டித்தீர்த்த கனமழை.. விமான போக்குவரத்து பாதிப்பு.. சாலைகளில் மிதந்து சென்ற வாகனங்கள்
சென்னை: விடிய விடிய கொட்டித்தீர்த்த கனமழையால் சென்னையில் தாழ்வான பகுதிகளில் வெள்ளநீர் தேங்கியுள்ளது. சாலைகளில் மழை நீர் தேங்கியதால் வாகன ஓட்டிகள் சிரமத்திற்கு ஆளாகினர். மழையால் விமான போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
தலைநகர் சென்னையில் வெயிலின் தாக்கம் தொடர்ந்து அதிகரித்துவந்த நிலையில், நேற்று மாலை திடீரென கருமேகம் சூழ்ந்து சூறாவளிக் காற்றுடன் கனமழை பெய்தது. அண்ணா நகர், அமைந்தகரை, கொரட்டூர், பாடி உள்ளிட்ட இடங்களில் இடி மின்னலுடன் மழை வெளுத்து வாங்கியது.மேலும், விமான நிலையம், குரோம்பேட்டை, பல்லாவரம் பகுதிகளிலும் கனமழை பெய்தது. கோடம்பாக்கம் ரயில் நிலையம் உள்ளிட்ட பகுதிகளிலும் பெய்த மழையால், தாழ்வான பகுதிகளில் தண்ணீர் தேங்கியது. பூவிருந்தவல்லி பகுதிகளில் மழை நீர் தேங்கியுள்ளதாக பொதுமக்கள் தெரிவித்துள்ளனர்.

பழைய வண்ணாரப்பேட்டை, புது வண்ணாரப்பேட்டை, திருவொற்றியூர் நெடுஞ்சாலை உள்ளிட்ட பகுதிகளில் கனமழை பெய்தது.இதேபோல, வடசென்னையில் பெரம்பூர், வியாசர்பாடி, திரு.வி.க.நகர், திருவொற்றியூர், ராயபுரம், தண்டையார்பேட்டை பகுதிகளிலும் மழை பெய்தது.
விடிய விடிய இடி மின்னலுடன் பெய்த கனமழையால் பல்வேறு சாலைகளில் தண்ணீர் தேங்கியுள்ளது. இதனால், வாகன ஓட்டிகள் சிரமத்திற்கு உள்ளாகியுள்ளனர். இதனிடையே, சென்னை, காஞ்சிபுரம் மாவட்டத்தில் இன்று பள்ளிகளுக்கு விடுமுறை கிடையாது எனவும் வழக்கம் போல் செயல்படும் என்று அந்தந்த மாவட்டங்களின் ஆட்சியர்கள் அறிவித்துள்ளனர்.
கிண்டி கத்திப்பாரா மேம்பாலத்திற்கு கீழே 2 அடி ஆளத்திற்கு மழை நீர் தேங்கியுள்ளது. இதனால் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. நெடுஞ்சாலைத்துறை ஊழியர்கள் மழை நீரை அகற்றும் பணியில் ஈடுபட்டுள்ளனர். கத்திப்பாரா பாலத்திற்குக் கீழே செல்ல வேண்டாம் என வாகன ஓட்டிகளுக்கு அறிவிப்பு வெளியிடப்பட்டது.
மீனம்பாக்கம் பகுதியில் நள்ளிரவு முதல் 9 செமீ மழை பதிவாகியுள்ளது. நுங்கம்பாக்கத்தில் 7 செமீ மழை பதிவாகியுள்ளது. பலத்த மழை காரணதாக விமானங்கள் தரை இறங்குவதிலும் புறப்படுவதிலும் பாதிப்பு ஏற்பட்டது.
இதனிடையே அடுத்த 3 மணி நேரத்திற்கு சென்னை உள்ளிட்ட 13 மாவட்டங்களில் காலை 10 மணி வரை மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. திருவள்ளூர், சென்னை, காஞ்சிபுரம், விழுப்புரம், கடலூர், கள்ளக்குறிச்சி, புதுச்சேரியில் அடுத்த 3 மணி நேரத்திற்கு மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
-
1 சவரன் தங்க நகை வாங்க போறீங்களா? கடைக்காரர் போடும் கணக்கில் அதிக மாற்றமா? ஏமாறாமல் இருக்க பில் தேவை -
Gold Investors: தங்கம் விலை தொடர் சரிவு! முதலீட்டாளர்களுக்கு நஷ்டம்? என்ன நடக்கிறது? -
வேல்முருகனின் மெகா பிளான் இதுவா? வன்னியர் சமூக வாக்குகளை வளைக்க பார்க்கிறாரா? -
சென்னை தங்க பஸ்சில் நடந்த சம்பவம்.. கொஞ்சம் பொறுப்போட நடங்க! பயணிகளுக்கு நெட்டிசன்கள் அட்வைஸ் -
சென்னை.. தேர்தல் பறக்கும் படையிடம் சிக்கிய "ஏகே 47.." விசாரணையில், யாரும் எதிர்பார்க்காத ட்விஸ்ட் -
கங்கணம் கட்டிக்கொண்டு வேலை.. மொத்த தமிழக பாஜகவும் ஸ்டன் ஆகி நிற்குதே.. யாருங்க இந்த த பா ஜி? -
விலை பேசப்படும் காங்கிரஸ் சீட்டுகள்! ராகுல் காந்திக்கு பறந்த புகார்! -
தமிழக சட்டசபையில் உங்கள் குரல் ஒலிக்குமா? நிருபர் கேட்ட கேள்வி! வைகோ சொன்ன ஸ்டன்னிங் பதில்! -
ஷாக்..ஏப்-1ல் வாகன ஓட்டிகளுக்கு காத்திருக்கும் அதிர்ச்சி! டோல் கட்டணத்தை உயர்த்தும் NHAI! எங்கெங்கே? -
கேஸ் சிலிண்டர் விலை மாறுது! ஏப்.1 முதல் புதிய விலை! இல்லத்தரசிகள் மாத பட்ஜெட்டில் என்ன தாக்கம்? -
தங்கம்.. 'தரை' தட்டியது ஏன்? கூடை கூடையாக மார்க்கெட்டில் விற்ற அரபு நாடுகள்.. ஒரு ராட்சனின் வீழ்ச்சி -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி












Click it and Unblock the Notifications