இந்த தடவை ஏமாற மாட்டோம்.. வெள்ளத்திற்கு தண்ணி காட்டும் சென்னையன்ஸ்! டூவீலர்கள் எங்க நிக்குது பாருங்க
சென்னை: கனமழை, வெள்ளம் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக வேளச்சேரி உள்ளிட்ட பகுதிகளில் கார்களை மக்கள் மேம்பாலங்களில் நிறுத்தி வைத்தனர். "காருக்கு அப்படி என்றால், பைக்குகளுக்கு வேற ஒரு ஐடியா இருக்கு" என்று சொல்கிற வகையில், டூவிலர்களை மக்கள் தங்கள் குடியிருக்கும் அப்பார்ட்மெண்டின் மேல் தளத்திற்கும், மொட்டை மாடிக்கும் லிப்டுகளில் கொண்டு சென்று பார்க்கிங் செய்து வருகிறார்கள். இது தொடர்பான புகைப்படங்களும் சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகின்றன.
வங்க கடலில் நிலை கொண்டுள்ள காற்றழுத்த தாழ்வு நிலை ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுப்பெற்றுள்ளது. இதனால், சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் கனமழை கொட்டி வருகிறது. நேற்று இரவு தொடங்கிய மழை நள்ளிரவு வரை பெய்தது. இடையில் கொஞ்சம் விட்டு பிடித்த மழை மீண்டும் காலை 10 மணி முதல் வெளுத்து வாங்க தொடங்கியுள்ளது.

சென்னை உள்ளிட்ட 22 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. மழை விடாது பெய்யும் என்று தமிழ்நாடு வெதர்மேன் என்ற தனியார் வானிலை ஆய்வாளரும் தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார். இது தொடர்பாக பிரதீப் ஜான் கூறுகையில், " சென்னையில் அடுத்த 3 நேரத்திற்கு அதிக மழை பெய்ய உள்ளதால் அலுவலகத்திற்கு வந்தவர்கள் சீக்கிரம் வீட்டிற்கு செல்லுங்கள் . நாளை இன்னும் அதிகமாக மழை பெய்ய வாய்ப்புள்ளது.

சென்னையில் இன்று இரவு முதல் சில இடங்களில் 200 மி.மீட்டர் வரை மழை பதிவாக வாய்ப்புள்ளது என்று தெரிவித்துள்ளார். தொடர் மழையால் சென்னையில் பல்வேறு பகுதிகளிலும் மழை நீர் குளம் போல தேங்கியுள்ளது. முக்கிய சாலைகளில் கூட முட்டியளவு தண்ணீர் ஓடுகிறது. இதனால், மக்கள் கடும் சிரமத்திற்கு உள்ளாகியுள்ளனர். கடந்த முறை ஏற்பட்ட வெள்ள பாதிப்பால், வீடுகளின் வெளியே நிறுத்தப்பட்டு இருந்த வாகனங்கள் வெள்ளத்தில் மூழ்கின.

இதனால், மக்கள் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக வேளச்சேரி உள்ளிட்ட பகுதிகளில் மேம்பாலங்களில் காரை நிறுத்தி வைத்தனர். மேம்பாலத்தின் இரு பக்கமும் கார்களை வரிசையாக நிறுத்தி சென்றதால் போக்குவரத்து நெரிசலும் ஏற்பட்டது. போக்குவரத்து போலீசார் அறிவுறுத்தலையும் மீறி வாகன ஓட்டிகள் அங்கே கார்களை விட்டு சென்றதை காண முடிந்தது. .
கார்களை மேம்பாலத்தில் நிறுத்துவது போல, பைக்குகளை அடுக்குமாடி குடியிருப்பின் மேல் தளத்திற்குகொண்டு போய் குடியிருப்பு வாசிகள் பலரும் நிறுத்தி வைத்துள்ளனர். அடுக்குமாடி குடியிருப்பின் பார்க்கிங் பகுதியில் நிறுத்தினால் பைக் வெள்ளத்தில் மூழ்கி பழுதாகிவிடும் எனக் கருதி முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக லிப்ட்டில் ஏற்றி வீட்டிற்குள்ளும், வீட்டின் முன்பாக காரிடரில் நிறுத்தி வைத்து இருக்கிறார்கள்.
இது தொடர்பான புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றன. காருக்கு மேம்பாலம் என்றால், பைக்கிற்கு அப்பார்ட்மெண்ட் மேல் தளம் என நெட்டிசனக்ள் பலரும் தங்களுக்கே உரிய நகைச்சுவை பாணியில் இந்த புகைப்படங்களை பதிவிட்டு வருகிறார்கள். இந்த முறை ஏமாறவே மாட்டோம்.. என சென்னை மழை வெள்ளத்துக்கு தண்ணி காட்டும் வகையில் இருசக்கர வாகனங்களை அப்பார்ட்மெண்டின் மேல் தளத்தில் பார்க்கிங் செய்துள்ளனர்.
சென்னையில் மழை வெளுத்து வாங்கி வருகிறது. நாளையும் சென்னையில் மழை வெளுத்து வாங்கும் என வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ள நிலையில் மக்கள் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இவ்வாறு தங்கள் வாகனங்களை பாதுகாப்பாக நிறுத்தி வைக்க ஆரம்பித்துள்ளனர்.
-
தமிழ்நாட்டில் 27 வயது தாசில்தார் சம்பளம்.. 37 வயதில் எவ்வளவு மாறியிருக்கும் தெரியுமா? -
மகளிர் உரிமை தொகை வராது.. அடுத்த 1 வாரத்தில் தமிழக அரசு தரும் ரூ.2000.. யாருக்கெல்லாம் கிடைக்கும்? -
கோவையில் 2022ல் சரவணம்பட்டியில் இடம் வாங்கி போட்டிருந்தால் இன்று நீங்கள் கோடீஸ்வரன்.. மாறிய மதிப்பு -
மகளிர் உரிமைத்தொகை ரூ.3,000.. கல்வி கடன் தள்ளுபடி.. ராமதாஸ் வெளியிட்ட தேர்தல் வாக்குறுதிகள்! -
₹10 லட்சம் லோன் எடுத்தா ஒரு பகுதி இலவசமா? கூட்டுறவு வங்கியில் மானியம்.. பிசினஸ் லாபம் சூப்பர் சான்ஸ் -
சென்னையில் 2 லட்சம் பேருக்கு பறந்த நோட்டீஸ்.. வீடு, கட்டிடம் வைத்துள்ளவர்களுக்கு முக்கிய அறிவிப்பு -
பாதாளத்தில் விழும் தங்கம்.. "ரூ.10,000க்கு கூட போகலாம்.." மெகா இன்ப செய்தியை சொன்ன ஆனந்த் சீனிவாசன் -
சிறகடிக்க ஆசை: போலீஸ் சொன்ன விஷயம்! சந்தோஷத்தில் முத்து! அண்ணாமலை வீட்டில் கொண்டாட்டம்! விஜயா முடிவு -
லால்குடியில் களமிறங்கிய ஆதவ் அர்ஜுனா மாமியார்.. அதிமுகவில் இணைந்த 1 மாதத்தில் சீட் கொடுத்த எடப்பாடி -
ஆபரண தங்கம் 6 சவரன் 15 வருடம் முன் வாங்கினீங்களா? அப்போ ₹1 லட்சம், இப்ப ரேட் தெரிஞ்சா ஷாக் ஆவீங்க -
அண்ணாமலை கடும் ‘அப்செட்’.. தேர்தலில் போட்டியிட மறுப்பது ஏன்? எடப்பாடியால் கலங்கும் பாஜக! 2 மேட்டர் -
தெற்கு ரயில்வேயில் 827 கி. மீ தூரத்திற்கு நடந்த நல்ல விஷயம்.. பயணிகள், பொதுமக்களுக்கு இனி நிம்மதி












Click it and Unblock the Notifications