திருவண்ணாமலையை நனைத்த மழை! சேலத்தை கூட விட்டு வைக்கல.. இப்படி பெய்யுதே!
சென்னை: இன்று 4 மாவட்டங்களில் கனமழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரித்திருந்தது. இந்நிலையில், தற்போது மேற்கு மாவட்டங்களில் மழை வெளுத்து வாங்கி வருகிறது.
குறிப்பாக திருவண்ணாமலை, சேலம், நாமக்கல், தருமபுரி உள்ளிட்ட மாவட்டங்களில் மழை தீவிரமாக பெய்து வருகிறது. சற்று முன்னர் விடுக்கப்பட்டிருந்த வானிலை எச்சரிக்கையில், கோயம்புத்தூர், தேனி, தென்காசி, ஈரோடு, சேலம், நாமக்கல், வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை மற்றும் திருவண்ணாமலை மாவட்டங்களில் மழை பெய்யும் என்று எச்சரிக்கப்பட்டு இருந்தது. இந்நிலையில் மழை பெய்து வருகிறது.

தமிழகத்தில் கடந்த ஜூன் மாதம் 1ம் தேதி முதல் தென்மேற்கு பருவமழை பெய்து வருகிறது. இன்று வரை தமிழ்நாடு முழுவதும் சராசரியாக 323.7 மில்லிமீட்டர் அளவுக்கு மழை பதிவாகி இருக்கிறது. இந்த காலத்தில் செய்ய வேண்டிய மழையுடன் இதை ஒப்பிடும்போது மூன்று சதவீதம் அதிகமாகும். அதேபோல அரியலூர் 9%, சென்னை 33%, கோயம்புத்தூர் 39%, கடலூர் 17%, மயிலாடுதுறை 85%, நீலகிரி 13%, ராணிப்பேட்டை 49%, தென்காசி 58%, தஞ்சாவூர் 10%, தேனி 11%, திருநெல்வேலி 263%, திருப்பத்தூர் 24%, திருவள்ளூர் 36%, திருவண்ணாமலை 12%, திருவாரூர் 14%, வேலூர் 40%, விழுப்புரம் 20% என மழை கூடுதலாக பெய்திருக்கிறது.
சென்னைக்கு அருகில் உள்ள செங்கல்பட்டு மாவட்டத்தில் 4 சதவீதம் மழை குறைவாக செய்திருக்கிறது அதேபோல தர்மபுரி 20%, திண்டுக்கல் 38%, ஈரோடு 23%, கள்ளக்குறிச்சி 29%, கரூர் 31%, கிருஷ்ணகிரி 14%, மதுரை 21%, நாகப்பட்டினம் 19%, நாமக்கல் 29%, ராமநாதபுரம் 45%, சேலம் 14%, தூத்துக்குடி 59%, திருச்சி 23%, விருதுநகர் 43% அளவுக்கு மழை இளமையுடன் குறைவாக பெய்திருக்கிறது.












Click it and Unblock the Notifications