Heavy Rain: ராமேஸ்வரத்தில் அனைத்து பள்ளிகளுக்கும் விடுமுறை அறிவிப்பு
சென்னை: கனமழை காரணமாக இன்று ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரத்தில் உள்ள பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அளித்து மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது.
ராமேஸ்வரம் பகுதியில் தொடர்ச்சியாக கனமழை பெய்து வரும் நிலையில், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ராமேஸ்வரத்தில் உள்ள அனைத்து பள்ளிகளுக்கும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

தென்மேற்கு வங்கக் கடல் மற்றும் அதனை ஒட்டிய தெற்கு இலங்கையில் மையம் கொண்டுள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி, அடுத்த 12 மணி நேரத்தில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவடையக்கூடும் என இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. தென் மாவட்டங்களில் பரவலாக மழைக்கு வாய்ப்புள்ளதாகவும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் அரியலூர், கோவை, கடலூர், கன்னியாகுமரி, மயிலாடுதுறை, நாகை, புதுக்கோட்டை, ராமநாதபுரம், தஞ்சை, திருவாரூர், தூத்துக்குடி, திருச்சி, நெல்லை, திருவண்ணாமலை, வேலூர், விழுப்புரம் ஆகிய 16 மாவட்டங்களில் நண்பகல் வரை மழைக்கு வாய்ப்புள்ளதாகத் தெரிவிக்கப்பட்டது.
தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களிலும் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. ராமநாதபுரம் மாவட்டத்தின் பெரும்பாலான பகுதிகளில் இரவு முதல் தொடர்ந்து பலத்த மழை பெய்து வருகிறது. இதனால், ராமேஸ்வரம் பகுதியில் உள்ள சாலைகள் பெரும்பாலும் வெள்ளக்காடாக காட்சி அளித்து வருகிறது. இந்நிலையில், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ராமேஸ்வரத்தில் உள்ள பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications