போஸ்டர் அடி..வருண பகவான் ரெடி! சுழலும் சக்கரம்..சூளும் கருமேகம்! இந்த நாளில் மழை கன்பாஃர்ம்..!
சென்னை: தென்னிந்திய பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தில் வருகிற 12 மற்றும் 14ம் தேதிகளில் சில மாவட்டங்களில் கன மழை பெய்ய கூடும் என இந்திய வானிலை மையம் அறிவித்துள்ளது.
தமிழகம் மட்டுமல்லாது இந்தியா முழுவதுமே கோடை வெயிலில் தாக்கம் மிக அதிகமாக இருக்கிறது. அதே நேரத்தில் வெப்ப அலை தமிழகத்தில் மிக அதிகமாக இருப்பதாக வானிலை ஆய்வு மையம் எச்சரித்து இருக்கிறது.

அதிகாலை நேரங்களிலேயே வீட்டில் தங்கி இருக்கும் மக்கள் புழுக்கத்தை உணர முடிகிறது. மேலும் காலை 7 மணியிலிருந்து வெப்பத்தின் தாக்கமானது அதிகரிக்க தொடங்கி விட்டது. இதனால் முதியவர்கள், பச்சிளம் குழந்தைகள் அதிக அளவில் பாதிப்புக்குள்ளாகி வருகின்றனர்.
தமிழகத்தில் வெப்பம்: தமிழகத்தில் வெப்ப அலை வீசிய நிலையில் பல்வேறு மாவட்டங்களில் வெப்பநிலை நூறு டிகிரி பாரஹீட்டை தாண்டி பதிவாகி வருகிறது. அது மட்டும் இல்லாமல் தமிழகத்தின் அதிக இடங்களில் நேற்று வெயில் சதம் அடித்தது. இன்றும் பெரும்பாலான இடங்களில் வெப்ப அலை இல்லாவிட்டாலும் வெப்ப நிலை அதிகரிக்கும், தமிழகத்தில் சமவெளிப் பகுதிகளில் இன்று கூடுதல் வெப்பநிலை இருக்கக்கூடும் என வானிலை ஆய்வு மையமானது எச்சரித்து இருக்கிறது.
மழைக்கு வாய்ப்பு: இந்நிலையில் தென்னிந்திய பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தில் வருகிற 12 மற்றும் 14ம் தேதிகளில் சில மாவட்டங்களில் கன மழை பெய்ய கூடும் என இந்திய வானிலை மையம் அறிவித்துள்ளது. தென்னிந்திய பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சியின் காரணமாக 15ஆம் தேதி வரை ஒரு சில இடங்களில் கோடை மழை பெய்யும் என அறிவிக்கப்பட்டிருக்கிறது.
கீழடுக்கு சுழற்சி: இன்று முதல் 13ஆம் தேதி வரை தமிழகத்தில் உள்ள உள் மாவட்டங்களில் சமவெளிப் பகுதிகளில் ஒரு சில இடங்களில் நூற்றி ஆறு டிகிரி பாரன்ஹீட்டும் இதர சமவெளப் பகுதிகளில் 12 டிகிரி பாரன்ஹீட் வெயில் பதிவாகலாம் கணிக்கப்பட்டுள்ளது. இதேபோல வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தில் ஒரு சில இடங்களிலும் புதுச்சேரி காரைக்கால் பகுதிகளிலும் 15ம் தேதி வரை ஒரு சில இடங்களில் கோடை மழை பெய்யும் என இந்திய வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.
ஐஎம்டி: குறிப்பாக 12 மற்றும் 14ம் தேதிகளில் தமிழகத்தில் சில மாவட்டங்களில் கன மழை பெய்யக்கூடும் என இந்திய வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. இதனால் கோடை வெப்பம் தணிந்து குளிர்ச்சியான காலநிலை நிலவும் என எதிர்பார்க்கப்படுகிறது. கடந்த சில நாட்களாக மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியை ஒட்டியுள்ள பகுதிகளில் இடி மின்னலுடன் மழை பெய்து வருவது குறிப்பிடத்தக்கது. கோவை, நெல்லை, திண்டுக்கல், தென்காசி உள்ளிட்ட மாவட்டங்களிலும் மழை பொழிவு இருப்பதால் மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.












Click it and Unblock the Notifications