அரபிக் கடலில் மீண்டும் குறைந்த காற்றழுத்தம்! இந்தியாவுக்கு பாதிப்பு இருக்குமா? வானிலை மையம்
சென்னை: மத்திய கிழக்கு அரபிக் கடலில் வரும் 8ஆம் தேதி குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகும் என இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து இந்திய வானிலை மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: கடல் மட்டத்திற்கு மேல் 5.8 கி.மீருக்கு தென் தமிழகத்தின் கடலோர பகுதிகளில் வளிமண்டல சுழற்சி நிலவி வருகிறது. இது அடுத்த 3 நாட்களில் அனேகமாக மேற்கு முதல் வடமேற்கு திசையில் தென் கிழக்கை நோக்கி நகரும்.

மேலும் மத்திய கிழக்கு அரபிக் கடலோரத்தை ஒட்டிய பகுதிகளிலும் இந்த சுழற்சி நகரும். இதனால் மத்திய கிழக்கு அரபிக் கடலில் நவம்பர் 8ஆம் தேதி குறைந்த காற்றழுத்தம் உருவாகும். அக்டோபர் முதல் டிசம்பர் வரை அரபிக் கடல் மற்றும் வங்கக் கடலில் புயல்கள் உருவாக சாதகமான சூழல் நிலவும்.
அதே நேரத்தில் அரபிக் கடலில் உருவாகும் புதிய காற்றழுத்தம் தீவிரமடைந்து காற்றழுத்த தாழ்வு மண்டலமாகவோ புயலாகவோ மாறும் என நாம் எதிர்பார்க்கக் கூடாது. இது ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாகவே தீவிரமடைய வாய்ப்பிருக்கிறது. இந்திய கடற்கரையிலிருந்து மேற்கு வடமேற்கு திசை நோக்கி நகரும் வாய்ப்பு இருக்கிறது.

இதனால் இந்தியாவுக்கு எந்த விதமான பாதிப்பும் இல்லை. அரபிக் கடலுக்கு வடமேற்கு பகுதிகளில்தான் வானிலையில் மாற்றங்கள் ஏற்படும். அரபிக் கடலில் உருவாகும் வானிலை அமைப்பு 20 முதல் 30 சதவீதம் தெற்கு குஜராத் அல்லது வட மகாராஷ்டிரா பகுதிகளை நோக்கி செல்லவே வாய்ப்பு என தெரிவிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications