அரபிக் கடலில் மீண்டும் குறைந்த காற்றழுத்தம்! இந்தியாவுக்கு பாதிப்பு இருக்குமா? வானிலை மையம்
சென்னை: மத்திய கிழக்கு அரபிக் கடலில் வரும் 8ஆம் தேதி குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகும் என இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து இந்திய வானிலை மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: கடல் மட்டத்திற்கு மேல் 5.8 கி.மீருக்கு தென் தமிழகத்தின் கடலோர பகுதிகளில் வளிமண்டல சுழற்சி நிலவி வருகிறது. இது அடுத்த 3 நாட்களில் அனேகமாக மேற்கு முதல் வடமேற்கு திசையில் தென் கிழக்கை நோக்கி நகரும்.

மேலும் மத்திய கிழக்கு அரபிக் கடலோரத்தை ஒட்டிய பகுதிகளிலும் இந்த சுழற்சி நகரும். இதனால் மத்திய கிழக்கு அரபிக் கடலில் நவம்பர் 8ஆம் தேதி குறைந்த காற்றழுத்தம் உருவாகும். அக்டோபர் முதல் டிசம்பர் வரை அரபிக் கடல் மற்றும் வங்கக் கடலில் புயல்கள் உருவாக சாதகமான சூழல் நிலவும்.
அதே நேரத்தில் அரபிக் கடலில் உருவாகும் புதிய காற்றழுத்தம் தீவிரமடைந்து காற்றழுத்த தாழ்வு மண்டலமாகவோ புயலாகவோ மாறும் என நாம் எதிர்பார்க்கக் கூடாது. இது ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாகவே தீவிரமடைய வாய்ப்பிருக்கிறது. இந்திய கடற்கரையிலிருந்து மேற்கு வடமேற்கு திசை நோக்கி நகரும் வாய்ப்பு இருக்கிறது.

இதனால் இந்தியாவுக்கு எந்த விதமான பாதிப்பும் இல்லை. அரபிக் கடலுக்கு வடமேற்கு பகுதிகளில்தான் வானிலையில் மாற்றங்கள் ஏற்படும். அரபிக் கடலில் உருவாகும் வானிலை அமைப்பு 20 முதல் 30 சதவீதம் தெற்கு குஜராத் அல்லது வட மகாராஷ்டிரா பகுதிகளை நோக்கி செல்லவே வாய்ப்பு என தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
வெயில் மண்டையை பொளக்கப்போகுது.. வார்னிங் கொடுத்த வானிலை மையம்! இந்த மாவட்டங்கள் உஷார் -
அமெரிக்கா இனி பிக்பாஸ் இல்லை.. நீங்க நம்பலைனாலும் அதான் நெசம்.. ஐக்கிய அரபு சகாப்தமும் வீழ்ந்தது! -
கள்ளக்குறிச்சியில் சினிமாவை மிஞ்சும் சம்பவம்.. காதல் கணவனுக்கு உயிருடன் கொள்ளி வைத்த அம்மு -
எங்களை எப்படியாவது காப்பாத்துங்க.. அமெரிக்கா - இந்தியாவிடம் கெஞ்சும் வங்கதேசம்.. ரஷ்யா உதவுமா? -
பாஜகவுடன் கூட்டணி அமைக்கலாமா? 98 தவெக மாவட்டச் செயலாளர்கள் ஆதரவு.. விஜய் எடுக்கப்போகும் முடிவு! -
சீனா அரண்டு நிற்குது.. மொத்த டிராகனுக்கும் சவால் விடும் தமிழ்நாட்டின் குட்டி சிட்டி.. ரியல் இன்ஜின்! -
வந்தாச்சு நீண்ட காலம் காத்திருந்த நல்ல செய்தி.. H-1b விசா கட்டுப்பாடுகள் நீக்கம்? புதிய மசோதா தாக்கல் -
இந்திய கப்பலுக்கு மட்டும் வழிவிட்ட ஈரான்.. ஹார்முஸ் ஜலசந்தியை கடந்து மும்பை வந்தடைந்த கப்பல் -
இந்திய வரலாற்றில் முதல்முறை.. தலைமைத் தேர்தல் ஆணையரை நீக்கக் கோரி நாடாளுமன்றத்தில் நோட்டீஸ்! -
கையில் இவ்வளவு பெரிய.. ஆயுதத்தை வைத்துக்கொண்டுதான்.. ஈரான் இவ்வளவு நாள் சைலண்ட்டா இருந்ததா.. மாஸ் -
இந்திய கப்பல்கள் ஹார்முஸ் ஜலசந்தியை கடக்க அனுமதியா? ஈரான் மறுப்பு.. ஆனாலும் நடந்த ட்விஸ்ட் -
அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்.. வெயிட்டான பதவியை கொடுக்கும் எடப்பாடி












Click it and Unblock the Notifications