KKR vs SRH.. சென்னையில் ஐபிஎல் பைனல் பார்க்கும் ரசிகர்களுக்கு தமிழ்நாடு வெதர்மேன் தந்த அட்வைஸ்!
சென்னை: ஐபிஎல் இறுதி போட்டியில் இன்று சென்னை சேப்பாக்கம் கிரிக்கெட் மைதானத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் சன் ரைசர்ஸ் ஹைதராபாத் இடையேயான போட்டி நடைபெற உள்ளது. இந்நிலையில் தான் மைதானத்தில் இன்று அதிகம் வியர்க்கும் எனக்கூறி போட்டியை காணும் ரசிகர்களுக்கு தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் முக்கிய அட்வைஸ் வழங்கி உள்ளார்.
நாடு முழுவதும் பல்வேறு நகரங்களில் ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகள் நடந்து வந்தன. இதில் கொல்கத்தா, ஹைதராபாத், ராஜஸ்தான், பெங்களூர் அணிகள் பிளேஆஃப் போட்டிக்கு முன்னேறின.

இதில் ஸ்ரேயாஸ் அய்யர் தலைமையிலான கேகேஆர் எனும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி மற்றும் பேட் கம்மின்ஸ் தலைமையிலான சன்ரைசர்ஸ் ஹைதரபாத் அணியும் இறுதிப்போட்டி முன்னேறியது.
இந்த இருஅணிகள் இடையேயான இறுதி போட்டி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் இன்று நடைபெற்று வருகிறது. இதில் வெல்லும் அணி கோப்பையை வெல்ல உள்ளது. இதனால் இந்த போட்டி ரசிகர்கள் மத்தியில் அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது. இதற்கிடையே தான் இன்றைய போட்டியில் சன்ரைசர்ஸ் அணி முதலில் பேட் செய்து வருகிறது.
சன்ரைசர்ஸ் ஹைதரபாத் அணியின் கேப்டன் கம்மின்ஸ் டாஸ் வென்று பேட்டிங்கை தேர்வு செய்துள்ளார். இந்நிலையில் தான் சென்னை சேப்பாக்கம் கிரிக்கெட் மைதானத்தில் இன்று பைனல் போட்டியை காண செல்லும் ரசிகர்களுக்கு தமிழ்நாடு வெதர்மேன் முக்கிய அட்வைஸ் வழங்கி உள்ளார்.
இதுதொடர்பாக அவர் தனது எக்ஸ் வலைதள பக்கத்தில் இன்று மாலை 6.09 மணிக்கு வெளியிட்டுள்ள பதிவில், ‛‛சென்னையில் 6 மணி நிலவரப்படி 37 டிகிரி செல்சியஸ் வெப்பம் மற்றும் 70 சதவீத ஈரப்பதம் உள்ளது. இதில் ஈரப்பதத்தின் சதவீதம் என்பது போட்டி நேரத்தில் 80 முதல் 85 சதவீதம் வரை அதிகரிக்கும்.
இதனால் இன்று ஐபிஎல் பைனல் போட்டியை பார்க்க செல்வோர் அதிகளவிலான தண்ணீரை கையோடு எடுத்து செல்ல வேண்டும். அதோடு அடர்த்தியான ஆடைகள் அணிவதை தவிர்க்க வேண்டும். ஏனென்றால் அதிகளவில் வியர்க்க வாய்ப்புள்ளது'' என தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications