Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

சுட்டெரிக்கும் வெயிலுக்கு நடுவே வங்க கடலில் புயல்? கனமழைக்கு சான்ஸ் இருக்கா? வானிலை ஆய்வாளர் அப்டேட்

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழகத்தின் மலை பகுதிகளுக்கு அடுத்த சில நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது. இதனிடையே வங்க கடலில் புயல் உருவாவதற்கான ஒரு சாத்தியக்கூறு தென்படுவதாகவும் வானிலை ஆர்வலர்கள் கூறியுள்ளனர்.

தமிழகத்தில் மக்களை பாடாய் படுத்திக் கொண்டு இருந்த வெயிலின் தாக்கம் தற்போது முன்பை விட சற்று தணிந்துள்ளது. உள் மாவட்டங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது. ஆனாலும் கூட வெயிலின் தாக்கம் இன்னும் குறைந்தபாடில்லை. நாள் தோறும் கிட்டத்தட்ட 10 மாவட்டங்களில் வெயில் 100 டிகிரி பாரன்ஹீட்டை தாண்டி பதிவாகி வருகிறது. சென்னையிலும் வெயிலின் தாக்கம் அதிகமாகவே உள்ளது.

Looks like there is a chance of a storm forming in the Bay of Bengal Weather experts Predicts

வங்க கடலில் புயல்: சென்னையை பொறுத்தவரை கோடை மழை இந்த முறை மக்களை ஏமாற்றிக் கொண்டே இருக்கிறது. புறநகர் பகுதிகளில் ஆங்காங்கே மழை பெய்தாலும் கூட நகருக்குள் சொல்லிக்கொள்ளும்படியாக தற்போது வரை மழை இல்லை. இதனால் வெப்பத்தின் தாக்கம் அதிகமாகவே உள்ளது. இதனால் மழை எப்போதும் பெய்யும் என்று மக்கள் எதிர்பார்த்துக்கொண்டு இருக்கிறார்கள்.

இதற்கிடையே, வங்க கடலில் அடுத்த வாரம் அதாவது 21 ஆம் தேதிக்கு மேல் புயல் உருவாதற்கான சூழல் இருப்பது போல் வானிலை படிவங்கள் மூலம் தெரிவதாக வானிலை ஆர்வலர்கள் தெரிவித்துள்ளனர். எனினும், வங்க கடலில் புயல் உருவாகி வட வங்க கடல் நோக்கி சென்றால் சென்னை போன்ற பகுதிகளில் வெயிலின் தாக்கம் அதிகரிக்கும்.

அடுத்த 3 நாட்களுக்கு: இப்படியான ஒரு நிகழ்வு நடந்தால் சென்னையில் மே மாதத்தின் கடைசி வாரத்தில் சென்னையில் வெப்பத்தின் தாக்கம் அதிகமாக இருக்கும். கோடை காலத்தில் வரும் புயல் தமிழகத்திற்கு வர வாய்ப்பு குறைவு. பெரும்பாலும் அடுத்த மூன்று, நான்கு நாட்களுக்கு மழையை எதிர்பார்க்கலாம்" என்றும் வானிலை ஆர்வலர்கள் கூறியுள்ளனர்.

இதனிடையே, சென்னை வானிலை ஆய்வு மையம் இன்று வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:- நாளை தமிழகத்தில் ஒரு சில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் (மணிக்கு 40 கிலோமீட்டர் முதல் 50 கிலோமீட்டர் வரை) லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். திண்டுக்கல், தேனி, தென்காசி, திருநெல்வேலி, கன்னியாகுமரி, தூத்துக்குடி, விருதுநகர் மற்றும் இராமநாதபுரம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

நாளை மறுநாள்: இதேபோல், நாளை மறு நாள், தமிழகத்தில் அநேக இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னல், பலத்த காற்றுடன் (மணிக்கு 30 கிமீ முதல் 40 கிமீ வரை) லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி, இராமநாதபுரம், புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, கடலூர், தென்காசி, தேனி, திண்டுக்கல், கோயம்புத்தூர், நீலகிரி மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

மே 17 ஆம் தேதி தமிழகத்தில் அநேக இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் (மணிக்கு 30 கிலோமீட்டர் முதல் 40 கிலோமீட்டர் வரை) லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். நீலகிரி, கோயம்புத்தூர் மாவட்டத்தின் மலை பகுதிகள், சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி, திருப்பத்தூர், திண்டுக்கல், நாமக்கல், கரூர், திருச்சிராப்பள்ளி, மதுரை, சிவகங்கை, விருதுநகர், புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, தேனி, தென்காசி, கன்னியாகுமரி மாவட்டங்கள், திருநெல்வேலி மாவட்டத்தின் மலை பகுதிகள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

மே 18, 19 ல் எப்படி?: மே 18 ஆம் தேதி தமிழகத்தில் அநேக இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் (மணிக்கு 30 கிலோமீட்டர் முதல் 40 கிலோமீட்டர் வரை) லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். நீலகிரி, கோயம்புத்தூர் மாவட்டத்தின் மலை பகுதிகள், சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி, திருப்பத்தூர், திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, நாமக்கல், திருச்சிராப்பள்ளி, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, புதுக்கோட்டை, கடலூர், அரியலூர், பெரம்பலூர் மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளது.

மே 19 ஆம் தேதி தமிழகத்தில் அநேக இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். மே 20 ஆம் தேதி தமிழகத்தில் ஒரு சில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். என்று தெரிவித்து உள்ளது.

சென்னையில் மழை எப்போது?: சென்னை மற்றும் புறநகர் பகுதிகளைப் பொறுத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒரு சில பகுதிகளில் லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 36-37° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 28-29° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.

இதேபோல் வெப்பநிலையை பொறுத்தவரை, அடுத்த 5 தினங்களுக்கு, அதிகபட்ச வெப்பநிலை, தமிழக உள் மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் 2-3° செல்சியஸ் வரை படிப்படியாகக் குறையக்கூடும். மே 18 வரை காற்றின் ஈரப்பதம் தமிழக உள் மாவட்டங்களின் சமவெளி பகுதிகளில் பிற்பகலில் 45-55% ஆகவும், மற்ற நேரங்களில் 60-85% ஆகவும் மற்றும் கடலோரப்பகுதிகளில் 60-85% ஆகவும் இருக்கக்கூடும்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+