Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

வங்கக்கடலில் நடந்த மாற்றம்.. நாகையில் கொட்டி தீர்க்கும் கனமழை! வானிலை மையம் முக்கிய அப்டேட்

Subscribe to Oneindia Tamil

சென்னை: வங்கக்கடலில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நீடித்து வருவதாகவும், இது காற்றழுத்த தாழ்வு மையமாக வலுப்பெறும் என ஏற்கெனவே கணிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், காற்றழுத்த தாழ்வு மையம் உருவாகியுள்ளதாக அறிவிக்கப்பட்டிருக்கிறது.

ஒவ்வொரு ஆண்டின் இறுதியிலும் வங்கக்கடலில் புயல் உருவாவது வழக்கமாக மாறி வருகிறது. அந்த வகையில், இந்த ஆண்டும் புயல் உருவாக வாய்ப்பு இருப்பதாக சொல்லப்பட்டது. இதனை உறுதி செய்யும் வகையில் ஓரிரு நாட்களுக்கு முன்னர் வங்கக்கடலில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி உருவானது. இது விரைவில் காற்றழுத்த தாழ்வு மையமாக வலுப்பெறக்கூடும் என்றும் கணிக்கப்பட்டிருந்தது. அதேபோல இன்று காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ளது என வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருக்கிறது.

tamil nadu rain chennai

மட்டுமல்லாது, இது தமிழ்நாடு மற்றும் இலங்கையை நோக்கி நகர்ந்து வருவதாகவும் கூறியிருக்கிறது. எனவே அடுத்து வரும் நாட்களில் சென்னை உட்பட வங்கக்கடல் ஓரம் உள்ள மாவட்டங்களில் மழை கொட்டி தீர்க்கும். இன்று நாகை மாவட்டத்தில் மழை அதிக அளவில் பெய்து வருகிறது. நாகையின் சிக்கல், நாகூர் மற்றும் கீவேளூர் உள்ளிட்ட பகுதிகளில் மழையின் தாக்கம் அதிகமாக இருக்கிறது.

முன்னதாக நேற்று வெளியாகியிருந்த வானிலை அறிவிப்பில் 25ம் தேதி முதல் தமிழகம் முழுவதும் பலத்த மழை இருக்கும், குறிப்பாக வட கடலோர மாவட்டங்களில் மழையின் தாக்கம் அதிகமாக இருக்கும் என சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரித்திருந்தது. அதாவது 25ம் தேதி,

கடலூர்
மயிலாடுதுறை
நாகப்பட்டினம்
திருவாரூர்
தஞ்சாவூர்
புதுக்கோட்டை
ராமநாதபுரம் மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

நவ.26ம் தேதி தமிழகத்தில் அநேக இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். குறிப்பாக

கடலூர்
தஞ்சாவூர்
திருவாரூர்
நாகப்பட்டினம்
மயிலாடுதுறை
புதுக்கோட்டை மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழையும்

காஞ்சிபுரம்
செங்கல்பட்டு
விழுப்புரம்
ராமநாதபுரம் மாவட்டங்கள் மற்றும் புதுவையில் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்ய வாய்ப்புள்ளது.

நவ.27ம் தேதி தமிழகத்தில் அநேக இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். குறிப்பாக விழுப்புரம்
கடலூர்
மயிலாடுதுறை
திருவாரூர்
நாகப்பட்டினம் மாவட்டங்கள், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழையும் பெய்யும். அதேபோல

திருவள்ளூர்
ராணிப்பேட்டை
காஞ்சிபுரம்
செங்கல்பட்டு
சென்னை
திருவண்ணாமலை
கள்ளக்குறிச்சி
பெரம்பலூர்
அரியலூர்
தஞ்சாவூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்ய வாய்ப்புள்ளது” என தெரிவிக்கப்பட்டிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+