12 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு+மஞ்சள் அலர்ட்! கேரளாவை சுத்துப்போட்ட மழை மேகங்கள்..வானிலை மையம் எச்சரிக்கை
திருவனந்தபுரம்: கேரளாவில் பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில், 4 மாவட்டங்களுக்கு வானிலை ஆய்வு மையம் ஆரஞ்சு அலர்ட் கொடுத்திருக்கிறது.
கடந்த சில நாட்களாக வெயில் மண்டையை பிளந்து வந்த நிலையில், தற்போது நிலைமை தலைகீழாக மாறியுள்ளது. அதாவது பருவமழை தொடங்கியுள்ளது. இதனால் தமிழ்நாடு, கேரளா உள்ளிட்ட மாநிலங்களில் பல்வேறு பகுதிகளில் பரவலாக மழை பெய்து வருகிறது. இந்த மழை தொடர்ந்து பெய்து வருவதால் நீர் நிலைகள் வேகமாக நிரம்பியுள்ளன. கேரளாவை பொருத்த அளவில் பல்வேறு இடங்களில் மழை தீவிரமாக பெய்து வருகிறது.

இந்நிலையில் அம்மாநிலத்தில் 4 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு எச்சரிக்கையும், 8 மாவட்டங்களுக்கு மஞ்சள் அலர்ட் எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது. இது குறித்து வானிலை ஆய்வு மையம் கூறுகையில், "கோழிக்கோடு, வயநாடு, கண்ணூர் மற்றும் காசர்கோடு ஆகிய நான்கு மாவட்டங்களில் அடுத்த 24 மணி நேரத்தில் இடி மின்னலுடன் கூடிய பலத்த மழை பெய்யும்" என்று தெரிவித்துள்ளது. இதன் காரணமாக இந்த மாவட்டங்களில் உள்ள பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
ஆனால் ஏற்கெனவே திட்டமிடப்பட்ட தேர்வுகள் வழக்கம்போல நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல காசர்கோடு மாவட்டத்தில் வெள்ளரிக்குண்டு, ஹோஸ்துர்க் தாலுகாக்களில் மட்டும் கல்வி நிறுவனங்களுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த மாவட்டங்கள் தவிர, பத்தனம்திட்டா, ஆலப்புழா, கோட்டயம், இடுக்கி, எர்ணாகுளம், திருச்சூர், பாலக்காடு மற்றும் மலப்புரம் ஆகிய 8 மாவட்டங்களில் பலத்த மழை பெய்யும் என்பதால் இந்த மாவட்டங்களுக்கு வானிலை ஆய்வு மையம் மஞ்சள் அலர்ட் எச்சரிக்கையை கொடுத்திருக்கிறது.

முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தாழ்வான பகுதிகளில் இருப்போர் பாதுகாப்பான இடங்களுக்கு அப்புறப்படுத்தப்பட்டுள்ளனர். அதேபோல இந்த 12 மாவட்டங்களில் உள்ள அணைகள் மற்றும் ஏரி, குளம் போன்ற நீர்நிலைகளை அதிகாரிகள் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர்.
-
தமிழகத்தில் இன்று 21 மாவட்டங்களில் கனமழை வெளுக்கும்.. சென்னைக்கும் அலர்ட் விடுத்த வானிலை ஆய்வு மையம் -
ராணிப்பேட்டை டூ தேனி வரை.. 16 மாவட்டங்களில் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம் -
39 வயதில் எழுதிய தேர்வு.. 60 வயதில் வந்த அரசு வேலை.. மஜித்தின் கதை சொல்லும் கசப்பான பாடம் -
இன்னும் 3 நாள் தான்.. வரப் போகுது தென்மேற்குப் பருவமழை! ஜில்ஜில் கிளைமேட்டுக்கு ரெடியாகுங்க மக்களே! -
கருணை காட்டுவாரா வருண பகவான்.. சென்னை, செங்கல்பட்டில் சட்டென மாறிய வானிலை -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்!












Click it and Unblock the Notifications