Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

வங்கக் கடலில் திடீர் மாற்றம்.. தமிழகத்திற்கு பறந்த எச்சரிக்கை! 6 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்யும்

Subscribe to Oneindia Tamil

சென்னை: வங்கக்கடலில் உருவாகியிருந்த காற்றழுத்த தாழ்வு பகுதியானது ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றிருக்கிறது. இந்நிலையில், இன்று தமிழகத்தில் நீலகிரி, தேனி உட்பட 6 மாவட்டங்களில் மழை கொட்டி தீர்க்கும் என சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.

வங்கக்கடலின் வடகிழக்கு பகுதியில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதியானது நிலவி வந்தது. இந்நிலையில் நேற்று இது ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுப்பெற்றதாக இந்திய வானிலை ஆய்வு மையம் கூறியிருந்தது. இது தொடர்ந்து மேற்கு-வடமேற்கு திசையில் நகரும் என்றும், மேற்கு வங்கம்-வங்கதேசத்தில் கரையை கடக்கலாம் எனவும் எச்சரிக்கப்பட்டிருக்கிறது.

Nilgiris Theni rain

இந்நிலையில் இன்று தமிழகத்தில் 6 மாவட்டங்களில் கனமழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. இது தொடர்பாக விடுக்கப்பட்டிருக்கும் அறிவிப்பில், "வங்கக்கடலை போலவே, மகாராஷ்டிரா கேரளா கடலோரப்பகுதிகளுக்கு அப்பால் அரபிக்கடல் பகுதிகளில் ஒரு காற்றழுத்த தாழ்வு நிலை நிலவுகிறது.

எனவே இன்று (ஜூலை.25) தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன் கூடிய, லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். ஒரிரு இடங்களில் பலத்த தரைக்காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும். குறிப்பாக,

நீலகிரி
தேனி
தென்காசி
கன்னியாகுமரி
கோயம்புத்தூர்
திருநெல்வேலி மாவட்டங்களின் மலை பகுதிகளில் ஒரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

ஜூலை.26ம் தேதி தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் பகுதிகளிலும் இடி, மின்னலுடன் கூடிய, லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். ஓரிரு இடங்களில் பலத்த தரைக்காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும். நீலகிரி, தேனி, தென்காசி மற்றும் கோயம்புத்தூர் மாவட்டத்தின் மலை பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

ஜூலை.27ம் தேதி தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னலுடன் கூடிய, லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். ஓரிரு இடங்களில் பலத்த தரைக்காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும். நீலகிரி மற்றும் கோயம்புத்தூர் மாவட்டத்தின் மலை பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

ஜூலை.28ம் தேதி தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னலுடன் கூடிய, லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

ஜூலை.29 மற்றும் 30ம் தேதிகளில் தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளுக்கான வானிலை முன்னறிவிப்பு:

இன்று (25-07-2025) வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 33-34" செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 26-27° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்" என தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

தமிழகத்தில் பருவமழை எப்படி இருக்கிறது?

தமிழகத்தில் கடந்த ஜூன் 1ம் தேதி முதல் ஜூலை 24-ம் தேதி வரை சராசரியாக 96.3 மில்லி மீட்டர் அளவுக்கு மழை பதிவாகி இருக்கிறது. சராசரியாக இந்த காலத்தில் 103.0 மில்லி மீட்டர் அளவுக்கு மழை பதிவாகி இருக்க வேண்டும். அந்த வகையில் தற்போது பதிவாகி இருக்கும் மழையின் அளவு இல்பை விட -6 சதவீதம் குறைவாகும்.

இந்த காலகட்டத்தில் அதிகபட்சமாக திருநெல்வேலி மாவட்டத்தில் 127.5 மில்லி மீட்டர் அளவுக்கு மழை பெய்து இருக்கிறது. மாவட்டத்தில் இயல்பான மழை அளவு 35.9 மில்லி மீட்டர் மட்டுமே. அந்த வகையில் தற்போது வரை பெய்திருக்க கூடிய மழை 255 சதவீதம் இயல்பை விட அதிகமானதாகும். திருநெல்வேலியை தொடர்ந்து தென்காசி மற்றும் தேனி மாவட்டங்களில் தலா 93 சதவீதம் அளவுக்கு மழை இயல்பை விட அதிகமாக பெய்து இருக்கிறது. திருச்சி, தூத்துக்குடி, விருதுநகர், மதுரை, கரூர் உள்ளிட்ட மாவட்டங்களில் மழை எதிர்பார்த்ததை விட குறைவாகவே பெய்திருக்கிறது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+