வழக்கத்திற்கு மாறான அளவில் பெய்த வடகிழக்கு பருவமழை.. இது பத்தாது! வானிலை ஆய்வு மையம் சொன்ன தகவல்
சென்னை: தமிழ்நாடு முழுவதும் கடந்த சில நாட்களாக தொடர் மழை பெய்து வருகிறது. இருப்பினும் வடகிழக்கு பருவமழை இயல்பை விட 9% குறைவாகத்தான் பெய்திருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தமிழ்நாட்டில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து பரவலாக மழை பெய்து வருகிறது. தொடர் மழை காரணமாக மேட்டூர் அணை தவிர பெரும்பாலான அணைகள் அனைத்தும் முழு கொள்ளளவை எட்டியுள்ளன. குறிப்பாக தென் மாவட்டங்களான திருநெல்வேலியில் உள்ள பாபநாசம், சேர்வலாறு, மணிமுத்தாறு, வடக்கு பச்சையாறு, நம்பியாறு, கொடுமுடியாறு உள்ளிட்ட அணைகளும், தென்காசியின் கடனா, ராமநதி, கருப்பாநதி, குண்டாறு, அடவிநயினார் உள்ளிட்ட அணைகளும் நிரம்பியுள்ளன.

அதேபோல சென்னைக்கு குடிநீர் ஆதாரமாக இருக்கும் செம்பரம்பாக்கம், புழல் உள்ளிட்ட ஏரிகளும் நிரம்பியுள்ளன. கொங்கு மண்டலத்தில் உள்ள பெரும்பாலான நீர் நிலைகள் மற்றும் அணைகள் நிரம்பியுள்ளன. இருப்பினும் தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை இயல்பை விட 9% குறைவாக பெய்திருப்பதாக வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. அதாவது அக்.1 முதல் இன்றுவரை இயல்பாக 346.மி.மீ மழை பதிவாகி இருக்க வேண்டும். ஆனால் 316.3 மிமீ மட்டுமே பெய்துள்ளது.
இது ஒருபுறம் இருக்க மறுபுறம் தமிழகத்தில் மழை நீடிக்கும் என வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. இன்று திருவள்ளூர், கடலூர், மயிலாடுதுறை, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், புதுக்கோட்டை, ராமநாதபுரம், தூத்துக்குடி மற்றும் திருநெல்வேலி ஆகிய 10 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளது எனத் தெரிவித்துள்ளது.
மேலும், தெற்கு அந்தமான் கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் நிலவும் காற்றழுத்த தாழ்வு பகுதி மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் நாளை காற்றழுத்த தாழ்வு மண்டலமாகவும், டிசம்பர் ஒன்றாம் தேதி புயலாகவும் வலுப்பெற கூடும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தெற்கு அந்தமான் கடலோரப் பகுதியில் உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி மேற்கு வட மேற்கு திசையில் ஒடிசா கடற்கரையை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கிறது. இந்த சூழ்நிலையில் இன்று சென்னைக்கு ஆரஞ்சு அலர்ட்டானது விடுக்கப்பட்டு இருக்கிறது. தொடர்ந்து நாளை குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறும் என்பதால் நாளையும் மழைக்கு வாய்ப்புள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
-
சென்னையில் 100 டிகிரியை தொடும் வெயில்! வார்னிங் கொடுத்த வானிலை மையம்! உஷார் மக்களே! -
கள்ளக்குறிச்சியில் சினிமாவை மிஞ்சும் சம்பவம்.. காதல் கணவனுக்கு உயிருடன் கொள்ளி வைத்த அம்மு -
சீனா அரண்டு நிற்குது.. மொத்த டிராகனுக்கும் சவால் விடும் தமிழ்நாட்டின் குட்டி சிட்டி.. ரியல் இன்ஜின்! -
Gas bill: சென்னை பெருங்குடி ஹோட்டலில்! இட்லி, வடையுடன் கேஸ் சிலிண்டருக்கும் கட்டண வசூலா? உண்மை என்ன? -
கூட்டுறவு வங்கி நகைக்கடன் தள்ளுபடி: 5 சவரன் தங்கம் வைத்திருப்பவர்களுக்கு ஜாக்பாட்! எப்படி விண்ணப்பது -
பாஜகவுடன் கூட்டணி அமைக்கலாமா? 98 தவெக மாவட்டச் செயலாளர்கள் ஆதரவு.. விஜய் எடுக்கப்போகும் முடிவு! -
பாஜகவுடன் கூட்டணி வைக்கலாம்.. எழுதிக் கொடுத்த மாவட்டச் செயலாளர்கள்.. நாளை விஜய் எடுக்கும் முடிவு? -
அமெரிக்கா போட்ட தப்பு கணக்கு... ஈரான் விரித்த 'மொசைக்' வலை.. யார் இந்த முகமது அலி ஜாஃபரி? -
அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்.. வெயிட்டான பதவியை கொடுக்கும் எடப்பாடி -
தங்கம் vs ரியல் எஸ்டேட்.. கடைசி காலத்தில் நிம்மதியாக வாழ எது சிறந்தது? ஆனந்த் சீனிவாசன் ஈஸி விளக்கம் -
160+ சீட்டில் எடப்பாடி பழனிசாமி யூடர்ன்.. சீனியர் லிஸ்ட்டை கிழித்து.. உளவுத்துறை மாஜி சொன்ன சீக்ரெட் -
விரால் மீனின் ஸ்பெஷாலிட்டி இது.. பாம்பு தலையன் மீனுக்குள் அற்புதமான சீக்ரெட்! பெண்களின் வரப்பிரசாதம்












Click it and Unblock the Notifications