சென்னை மட்டுமல்ல.. மொத்தம் 20 மாவட்டங்களுக்கு பறந்த ஆரஞ்சு அலர்ட்! மதியம் 1 மணிவரை உஷார்

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில், மதியம் 1 மணி வரை சென்னை உட்பட 20 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட் விடுக்கப்பட்டிருக்கிறது.

தென்மேற்கு பருவமழை நாடு முழுவதும் 70% நிலப்பரப்புக்கு மழைப்பொழிவை கொடுத்திருக்கிறது. தமிழ்நாட்டை பொறுத்த அளவில், போதுமான அளவு பெய்திருக்கிறது. இருப்பினும், டெல்டா மற்றும் வட மாவட்டங்களுக்கு போதுமான அளவு இது மழையை கொடுக்கவில்லை. இப்படி இருக்கையில், தற்போது வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ளது. தொடக்கம் முதலே, இது தீவிரம் காட்டி வருவதால், மொத்த தமிழ்நாடும் பரவலான மழையை பெற்று வருகிறது.

rain chennai weather

அக்.1ம் தேதி தொடங்கி தற்போது வரை தமிழகம் முழுவதும் 105.2 மி.மீ மழையை வடகிழக்கு பருவமழை கொடுத்திருக்கிறது. இது இயல்பை விட 68% அதிகமாகும்.

மழை தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் நேற்று விடுத்திருந்த அறிக்கையில், "தமிழக உள் பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. தென்கிழக்கு வங்கக்கடலில் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக, 14 ஆம் தேதி வாக்கில், தெற்கு வங்கக்கடலின் மத்திய பகுதியில் ஒரு காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகக்கூடும்.

இது மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து, ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுவடைந்து, வட தமிழகம், புதுவை மற்றும் தெற்கு ஆந்திர கடலோரப்பகுதிகளை நோக்கி, அதற்கடுத்த 48 மணி நேரத்தில் நகரக்கூடும். தென்மேற்கு பருவமழை இந்திய பகுதிகளிலிருந்து அடுத்த நான்கு தினங்களில் விலகும் நிலையில், கிழக்கு மற்றும் வடகிழக்கு காற்று தென்னிந்திய பகுதிகளில் வீசும் நிலையில், 15 16 ஆம் தேதி வாக்கில், வடகிழக்கு பருவமழை தென்னிந்திய பகுதிகளில் துவங்கக்கூடும்" என தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில், மதியம் 1 மணி வரையில் சென்னை உட்பட 20 மாவட்டங்களில் கனமழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. அதாவது, "சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர், ராணிப்பேட்டை, வேலூர், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூர், புதுக்கோட்டை, சிவகங்கை, ராமநாதபுரம், கோவை, திருப்பூர், நாமக்கல், ஈரோடு, கரூர், திண்டுக்கல் மற்றும் தேனி மாவட்டங்களில் இன்று பகல் 1 மணி வரை கனமழை பெய்யும்" என ஆரஞ்சு அலர்ட் விடுக்கப்பட்டிருக்கிறது.

மஞ்சள், ஆரஞ்சு அலர்ட் விளக்கம்: 64.5 மி.மீ முதல் 115. 5 மி.மீ வரை மழை பெய்யும் என எதிர்பார்க்கப்பட்டால், மஞ்சள் அலர்ட் விடுக்கப்படும். இதுவே, ஒரு நாளில் 115.6 முதல் 204.4 மிமீ வரையிலான மழைப்பொழிவுக்கு ஆரஞ்சு அலர்ட் விடுக்கப்படும்.

ரெட் அலர்ட் விளக்கம்: மக்களின் இயல்பு நிலை பாதிக்கும் வகையில் மழைப் பெய்வதற்கான வாய்ப்புகள் இருக்கும் போது ரெட் அலர்ட் விடப்படும். இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டால் போக்குவரத்து, மின்சாரம், இணையம், மற்றும் தொலைத் தொடர்பு துண்டிக்கப்படுவதற்கு வாய்ப்புகள் இருக்கின்றன என்று அர்த்தம். 24 மணி நேரத்தில் 204.5 மிமீக்கு அதிகமாக மழை பெய்யும் போது ரெட் அலர்ட் விடுக்கப்படுகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+