Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

கடலூர், திருவாரூர், நாகை மக்களே கவனம்.. மிக கனமழை எச்சரிக்கை விடுத்த வானிலை மையம்!

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழகத்தில் இன்று 4 மாவட்டங்களுக்கு மிக கனமழைக்கான ஆரஞ்சு நிற எச்சரிக்கை விடப்பட்டுள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. குறிப்பாக கடலூர், திருவாரூர், நாகை, மயிலாடுதுறையில் இன்று மிக கனமழைக்கும், நாளை சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, மயிலாடுதுறையில் மிக கனமழைக்கும் வாய்ப்பு உள்ளது என வானிலை மையம் கூறியுள்ளது.

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை மீண்டும் தீவிரமடைந்துள்ளது. தென் மேற்கு வங்கக் கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக தற்போது மழை வேகமெடுத்துள்ளது. இதனால் வரும் 19 ஆம் தேதி வரை தமிழகத்தில் பரவலாக கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது.

orange-alert-in-tamil-nadu-very-heavy-rain-forecast-for-4-districts-today

இந்த நிலையில் இன்று தமிழகத்தில் 5 மாவட்டங்களில் மிக கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை மையம் கூறியுள்ளது.

* கடலூர், திருவாரூர், மயிலாடுதுறை, நாகை மாவட்டங்களில் இன்று மிக கனமழைக்கான ஆரஞ்சு அலர்ட் விடப்பட்டுள்ளது.
* இதேபோல் விழுப்புரம், அரியலூர், தஞ்சை, புதுக்கோட்டை, ராமநாதபுரம் மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு உள்ளது.

* நாளை தமிழகத்தில் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, மயிலாடுதுறை, திருவாரூர், நாகை உள்ளிட்ட மாவட்டங்களில் மிக கனமழைக்கு வாய்ப்பு உள்ளது.
* விழுப்புரம், கடலூர், தஞ்சை, புதுக்கோட்டை, ராமநாதபுரம், தூத்துக்குடி, நெல்லை, குமரியில் நாளை கனமழைக்கு வாய்ப்பு உள்ளது.
* தொடர்ந்து தமிழகத்தில் வரும் 19 ஆம் தேதி வரை கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+