தமிழ்நாட்டில் 2 மாவட்டங்களுக்கு "ஆரஞ்சு அலர்ட்.." கொட்டப்போகும் மழை! நெல்லை, குமரிக்கு மஞ்சள் அலர்ட்

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழகத்தில் அடுத்த 2 மணி நேரத்தில் 6 மாவட்டங்களில் இடி மின்னலுடன் மழை பெய்ய வாய்ப்பு உள்ளது என்று வானிலை மையம் தெரிவித்துள்ளது. 2 மாவட்டங்களுக்கு ஆரஞ்ச் அலர்ட் எச்சரிக்கையும், 4 மாவட்டங்களுக்கு மஞ்சள் அலர்ட் எச்சரிக்கையையும் சென்னை வானிலை மையம் கொடுத்துள்ளது.


தமிழகத்தில் தொடர்ந்து வெப்பம் உயர்ந்து வருகிறது. வெயிலின் தாக்கம் உக்கிரமாக இருந்து வருகிறது. இதனால் மக்கள் கடும் அவதியடைந்து வருகின்றனர். வழக்கமாக மே மாத தொடக்கத்தில் தான் வெயில் அளவு அதிகமாக இருக்கும். ஆனால் இந்த ஆண்டும் இயல்பை காட்டிலும் அதிகமாக வெயில் கொளுத்தி எடுக்கிறது.

Orange Alert issued for 2 districts in Tamil Nadu Rain in next 2 hours

எனினும், தமிழக பகுதிகளின் மேல் வளிமண்டல கீழடுக்குகளில், காற்றின் திசை மாறுபடும் பகுதி நிலவுகிறது. இதன் காரணமாக ஒரு சில இடங்களில் அவ்வப்போது லேசான மழை பெய்து வருகிறது. நேற்று தென்காசி, திருநெல்வேலி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களுக்கு மழை குறித்து மஞ்சள் அலர்ட்டும் கொடுக்கப்பட்டிருந்தது. இதன்படி ஒருசில இடங்களில் லேசான மழை பெய்தது.

மற்ற இடங்களில் வெயில் வாட்டி வதைத்தது. இன்று மட்டும் 15 மாவட்டங்களில் வெயில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்டை கடந்து பதிவாகியுள்ளது. இந்த நிலையில் தமிழகத்தில் அடுத்த 2 மணி நேரத்தில் 6 மாவட்டங்களில் இடி மின்னலுடன் மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.

மதுரை மற்றும் திண்டுக்கல் மாவட்டங்களுக்கு ஆரஞ்ச் அலர்ட் கொடுத்துள்ளது. அதாவது அடுத்த 2 மணி நேரத்தில் அதாவது இரவு 10 மணி வரை இடி, மின்னலுடன் மழைக்கு வாய்ப்புள்ளது. இதேபோல் தேனி, தென்காசி, திருநெல்வேலி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் இரவு 10 மணி வரை இடி மின்னலுடன் லேசான மழைக்கு வாய்ப்புள்ளது என்று மஞ்சள் அலர்ட் கொடுக்கப்பட்டுள்ளது. இதனால் சாலையின் தாழ்வான பகுதிகளில் மழைநீர் தேங்க வாய்ப்புள்ளது என்றும் வானிலை மையம் தெரிவித்துள்ளது.

முன்னதாக வானிலை மையம் வெளியிட்ட அறிக்கையில், மே 1ம் தேதி வரை, தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும். அடுத்த ஐந்து தினங்களில் வட தமிழக உள் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் வெப்ப அலை வீசக்கூடும். மே 2ம் தேதி மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள் மற்றும் அதனை ஒட்டிய வட தமிழக உள் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

ஏனைய தமிழக மாவட்டங்கள், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும். மே 3ம் தேதி தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என வானிலை மையம் எச்சரித்துள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+