‛‛ஆரஞ்சு அலர்ட்’’.. தமிழகம் + புதுச்சேரியில் இன்று கொட்டப்போகும் கனமழை.. வானிலை மையம் அலர்ட்

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்காலில் இன்று கனமழை முதல் மிக கனமழைக்கான ஆரஞ்சு அலர்ட்டை இந்திய வானிலை ஆய்வு மையம் விடுத்துள்ளது.

கேரளாவில் தென்மேற்கு பருவமழை தொடங்கி விட்டது. தமிழகத்தில் தென்மேற்கு பருவமழை என்பது இன்னும் தொடங்காத நிலையில் சென்னை, தென்காசி, திருநெல்வேலி, கோவை, தேனி உள்பட பல இடங்களில் அவ்வப்போது மழை பெய்து வருகிறது.

weather rain orange alert tamil nadu

இந்நிலையில் தான் விரைவில் தென்மேற்கு பருவமழை தொடங்குவதற்கான அறிகுறிகள் தமிழகத்தில் தென்பட தொடங்கி உள்ளன. இன்னும் சில நாட்களில் தென்மேற்கு பருவமழை தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில் தான் தமிழகம், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் இன்று இந்திய வானிலை ஆய்வு மையம் ஆரஞ்சு அலர்ட் விடுத்துள்ளது. அதன்படி கனமழை முதல் மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. ஆரஞ்சு அலர்ட் விடுக்கப்பட்டுள்ள கனமழை பெய்யும் பட்சத்தில் ஒரே நாளில் 64.5 முதல் 115.5 மில்லி மீட்டர் வரை மழை பதிவாக வாய்ப்புள்ளது.

அதேவேளையில் மிக கனமழை என்றால் ஒரே நாளில் 115.5 மில்லி மீட்டர் முதல் 204.4 மில்லி மீட்டர் வரையிலான மழை பதிவாக வாய்ப்புள்ளது என்று இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. தமிழகத்துக்கு ஆரஞ்சு அலர்ட் விடுக்கப்பட்டுள்ள இந்த வேளையில் இன்று கேரளா மற்றும் தெற்கு உள்கர்நாடகா பகுதிகளில் அதி கனமழைக்கான ரெட் அலர்ட் விடுத்து இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+