விடாத கனமழை.. பெரம்பலூர், காரைக்காலில் பள்ளிகளுக்கு விடுமுறை.. அறிவித்த மாவட்ட ஆட்சியர்கள்
பெரம்பலூர்: கனமழை நீடிப்பதால் காரைக்காலில் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் பெரம்பலூர் மாவட்டத்தில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை முடிவுக்கு வரப்போகும் கால கட்டத்தில் டெல்டா மாவட்டங்களில் கடந்த 2 நாட்களாக கனமழை பெய்து வருகிறது. இதனால் அறுவடைக்கு தயாராக இருந்த சம்பா நெற்பயிர்கள் நீரில் மூழ்கியுள்ளன. இதனிடையே நேற்றிரவு முதல் சில மாவட்டங்களில் மழை பெய்து வருகிறது.

தென்தமிழகத்தில் அநேக இடங்களிலும், வட தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி மற்றும் இராமநாதபுரம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
கனமழை காரணமாக பள்ளிகளுக்கு விடுமுறை அளித்து காரைக்கால் மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார். அதன்படி காரைக்காலில் மாவட்டத்தில் இயங்கும் தனியார், அரசு பள்ளிகளுக்கு இன்று விடுமுறை அளிக்கப்படுகிறது.
தொடர் மழை காரணமாக பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர் கற்பகம் உத்தரவிட்டுள்ளார். தமிழ்நாட்டின் குமரி, சேலம் உள்ளிட்ட இடங்களில் மழை பெய்து வருகிறது அதே நேரத்தில் அந்த மாவட்டத்தில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்படவில்லை.
நாளைய தினம் தென்தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், வட தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். கன்னியாகுமரி, திருநெல்வேலி, தென்காசி மற்றும் தூத்துக்குடி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை கனமழை பெய்யக்கூடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
11.01.2024 முதல் 14.01.2024 வரை தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.












Click it and Unblock the Notifications