தமிழகத்தை தாக்க வருகிறதா புயல்?.. டெல்டா மாவட்டங்களில் பிச்சு உதறப்போகும் மழை
சென்னை: தென்கிழக்கு இலங்கை மற்றும் தென்மேற்கு வங்கக் கடலில் நிலவும் காற்றழுத்த தாழ்வுப்பகுதி இன்று தீவிர காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக மாறி தமிழகத்தை நோக்கி புயலாக மாற வாய்ப்புள்ளதாக தனியார் வானிலை ஆய்வாளர் ஹேமச்சந்தர் தெரிவித்துள்ளார். அதேபோல, தமிழகத்தில் அடுத்த 3 மணி நேரத்தில் 16 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.
தென்மேற்கு வங்கக் கடல் மற்றும் அதனை ஒட்டிய தெற்கு இலங்கையில் மையம் கொண்டுள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி, அடுத்த 12 மணி நேரத்தில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதிய வலுவடையக் கூடும் என்றும், அதற்கடுத்த 24 மணி நேரத்தில் தொடர்ந்து வடக்கு வடமேற்கு திசையில் நகர்ந்து காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவடையக் கூடும் என்றும் இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தென்கிழக்கு இலங்கை மற்றும் தென்மேற்கு வங்கக் கடலில் நிலவும் காற்றழுத்த தாழ்வுப்பகுதி இன்று தீவிர காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக மாறி தமிழகத்தை நோக்கி புயலாக மாற வாய்ப்புள்ளதாக தனியார் வானிலை ஆய்வாளர் ஹேமச்சந்தர் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில், தென்கிழக்கு இலங்கை மற்றும் தென்மேற்கு வங்கக்கடலில் இருக்கும் காற்றழுத்த தாழ்வுப் பகுதி இன்று தீவிர காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக உருவாகிறது.
இந்த காற்றழுத்த தாவ்வுப் பகுதி மேலும் வலுவடைந்து நவம்பர் 27 ஆம் தேதி காற்றழுத்த தாழ்வு மண்டலமாகவும், 28 ஆம் தேதி (வெள்ளிக்கிழமை) வட இலங்கையையொட்டி திரிகோணமலை அருகே தீவிர காற்றழுத்த தாழ்வு மண்டலமாகவும் உருவெடுக்கிறது. இந்த தீவிர காற்றழுத்த தாழ்வு மண்டலம், இலங்கையின் நிலப்பரப்பு ஊடுருவலை விட்டு அகன்று தமிழக பகுதிகளை நோக்கி நகரும்போது புயலாக மாற வாய்ப்பு உள்ளது.
தற்போது வரை அதற்கான சூழலே உள்ளது. இந்த நிகழ்வு காரணமாக நாளை இரவில் இருந்து காவிரி டெல்டா மாவட்டங்களில் மழை தொடங்கும். நாளை மறுதினமும், அதற்கடுத்த நாளும் (சனிக்கிழமை) காவிரி டெல்டா மாவட்டங்களிலும், 29, 30 ஆம் தேதிகளில் சென்னை உள்ளிட்ட வட கடலோர மாவட்டங்களிலும் வடகிழக்கு பருவமழை தீவிரம் அடைய உள்ளது என்று தெரிவித்துள்ளார்.
மேலும், புயலாக உருவாகும் பட்சத்தில் சென்னைக்கும், நாகைக்கும் இடையே கரையை கடக்கவே தற்போது வரை வாய்ப்புள்ளது என்றும், அதுபற்றி ஓரிரு நாட்களில் துல்லியமாக தெரிந்து கொள்ளலாம் என்று தெரிவித்துள்ளார்.
3 மணி நேரத்தில் மழைக்கு வாய்ப்புள்ள பகுதிகள்
அடுத்த 3 மணி நேரத்தில் தமிழகத்தில் 16 மாவட்டங்களில் மழை பெய்யும் என சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது. அந்த வகையில், அரியலூர், கோவை, கடலூர், கன்னியாகுமரி, மயிலாடுதுறை, நாகை, புதுக்கோட்டை, ராமநாதபுரம், தஞ்சாவூர், திருவாரூர், தூத்துக்குடி, திருச்சி, திருநெல்வேலி, திருவண்ணாமலை, வேலூர், விழுப்புரம் ஆகிய 16 மாவட்டங்களிலும், காரைக்கால் மற்றும் புதுச்சேரியில் அடுத்த 3 மணி நேரத்தில் மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
-
சிலிண்டர் முன்பதிவு செய்பவர்களுக்கு ஷாக் நியூஸ்! இனி இது இல்லைனா கேஸ் வராது.. மத்திய அரசின் தடை? -
பாகிஸ்தானை விட மோசமான நிலையில் இந்தியா.. உலகின் மகிழ்ச்சியான நாடுகள் ரிப்போர்ட்டில் செம பெரிய ஷாக்! -
170ல் அதிமுக.. பாஜக, பாமக, அமமுக உட்பட கூட்டணி கட்சிக்கு 64 தொகுதிகள்.. எடப்பாடி போட்டுள்ள கணக்கு! -
ஒரு தொகுதிக்குள் சுருங்கிய ஓட்டக்கார தேவர் மகன்.. தனி மரமான ஓ.பன்னீர்செல்வம்! டெபாசிட்டாவது தேறுமா? -
இரட்டை இலைக்கு ‘குட்பை’.. அதிமுகவை அடக்கிய பாஜக? திமுக கூட்டணிக்கு அடிக்கப்போகும் அதிர்ஷ்டம் -
ப்ளீஸ் சார்.. என் ஹனிமூனை விட்ருவீங்களா? கலெக்டருக்கு வித்தியாசமான மனு தந்த கேரளா அரசு பள்ளி ஆசிரியை -
சிறகடிக்க ஆசை: விஜயாவை அசிங்கப்படுத்திய வக்கீல்.. மீனா அருமை இப்போதாவது புரிந்ததே..! முத்து போட்ட அடி -
மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி 50% தாண்டினால் என்ன நடக்கும்? வீட்டு வாடகைப்படியிலும் மாற்றம்? -
திமுக சொன்ன அந்த வார்த்தை.. தொகுதி பங்கீட்டில் அதிருப்தியான மநீம.. நாளை கமல்ஹாசன் ஆலோசனை -
குடிப்பழக்கத்தை நிறுத்திவிட்டேன்.. பாட்டிலை தொட்டு 6 மாதமாகிவிட்டது.. ஜாலியாக சொன்ன சாஹல்! -
அதிமுக முன்னாள் அமைச்சர்களின் உருவபொம்மைகளுக்கு செருப்பு மாலை! பொள்ளாச்சியில் பரபரப்பு -
திரிஷா பற்றிய மொத்த பிரச்சனைகளுக்கும் ஒரே போஸ்டில் அவரே பதில்.. இப்படி ஒரு ரியாக்ஷனை எதிர்பார்க்கலையே












Click it and Unblock the Notifications