சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம் உள்பட 16 மாவட்டங்களில் மழை வெளுக்க போகுது.. அடுத்த 2 மணி நேரம் உஷார்
சென்னை: தமிழகத்தில் இன்று மாலை மழை வெளுத்து வாங்கும் என வானிலை மையம் அறிவித்துள்ளது. அதாவது இன்று மாலை 5.40 மணி வரை 16 மாவட்டங்களில் மழை பெய்யும் எனவும், குறிப்பாக நீலகிரி, கோவியில் இடி மின்னலுடன் கூடிய கனமழைக்கும், சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம் உள்பட 14 மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழைக்கும் வாய்ப்பு உள்ளது என்று தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் தற்போது மீண்டும் மழை பெய்ய தொடங்கியுள்ளது. இதனால் கடந்த ஒரு வாரமாக வெயில் சுட்டெரித்த நிலையில், தற்போது வெப்பம் குறைந்துள்ளது. இந்த நிலையில் அடுத்த 2 மணி நேரத்துக்கு மழை பெய்ய வாய்ப்பு உள்ளது என ஜில் அப்டேட் ஒன்றை வானிலை மையம் வெளியிட்டுள்ளது.

இன்று மாலை 5.40 மணி வரை
இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:- "தமிழகத்தில் அடுத்த 2 மணி நேரத்தில் அதாவது இன்று மாலை 5.40 மணி வரை நீலகிரி, கோவை மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது என ஆரஞ்சு நிற எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.
இதேபோன்று திருவள்ளூர், காஞ்சிபுரம், சென்னை, செங்கல்பட்டு, ராணிப்பேட்டை, வேலூர், திருப்பத்தூர், திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, விழுப்புரம், கடலூர், நெல்லை, தென்காசி மற்றும் தேனி ஆகிய 14 மாவட்டங்களில் ஒரு சில இடங்கள் புதுவையில் இடி மின்னலுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு உள்ளது" என்று வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.












Click it and Unblock the Notifications