சென்னையில் விடிய விடிய தொடரும் மழை.. அடுத்த 3 மணி நேரத்திற்கு 16 மாவட்டங்களில் மழை வெளுக்கப் போகுது
சென்னை: சென்னை புறநகர்ப் பகுதியில் நேற்று இரவு முதல் பரவலாக விடிய விடிய தொடர்ந்து பலத்த மழை பெய்து வருகிறது. காலையிலும் பல்வேறு பகுதிகளில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இந்நிலையில், தமிழகத்தில் அடுத்த 3 மணி நேரத்திற்கு 16 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ளது. இதனால் பல்வேறு மாவட்டங்களில் கன மழை பெய்து வருகிறது. இதனால், வெப்பம் தணிந்து குளு குளு காலநிலை நிலவி வருகிறது. இந்நிலையில், தமிழகத்தில் இன்று காலை 10 மணி வரை 16 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

அந்த வகையில், சென்னை, செங்கல்கபட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர், வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர், திருவண்ணாமலை, விழுப்புரம், கடலூர், நாகை, மயிலாடுதுறை, திருவாரூர், தஞ்சாவூர், புதுக்கோட்டை, ராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்யலாம் என வானிலை மையம் தெரிவித்துள்ளது.












Click it and Unblock the Notifications